99 வயதான யோகா ஆசிரியர் நானம்மாள் இன்று காலமானார்.
கோவையைச் சேர்ந்த நானம்மாள் வயதானபின்னும் தொடர்ந்து யோகாசன பயிற்சியில் ஈடுபட்டு வந்ததோடு, அதனைப் பிறருக்கு கற்றுக்கொடுத்து வந்தார். இவரது யோகா கலையைப் பாராட்டி, இந்தியக் குடியரசுத் தலைவரிடமிருந்து ஸ்தீரி சக்தி புரஸ்கார் விருது மற்றும் பத்மஸ்ரீ விருது ஆகியவற்றை பெற்றிருக்கிறார். இந்நிலையி வயது மூப்பின் காரணமாக இன்று அவர் உயிரிழந்துள்ளார்.