Skip to main content

முதல்வராக எடியூரப்பா படைத்த சாதனையிலும் வேதனை!

Published on 27/07/2021 | Edited on 27/07/2021
ுபரக

 

கர்நாடக முதல்வராக இருந்து வந்த எடியூரப்பா கடந்த 26ம் தேதி தன்னுடைய பதவியை ராஜினமா செய்தார். இதன்மூலம் கர்நாடகாவில் நான்கு முறை முதல்வராக இருந்தும், ஒரு முறை கூட முதல்வர் பதவியை 5 ஆண்டுகாலம் முழுமையாக நிறைவு செய்ய முதல் முதல்வர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார். கர்நாடக மாநில முதல்வராக முதல்முறையாக கடந்த 2007ம் ஆண்டு பதிவியேற்ற எடியூரப்பா 8 நாட்கள் மட்டுமே முதல்வராக இருந்தார். நவம்பர் 12ம் தேதி பொறுப்பேற்ற அவர் 19ம் தேதி ராஜினாமா செய்தார். இரண்டாவது முறையாக 2008ம் ஆண்டு மே மாதம் 30ம் தேதி பதிவியேற்ற அவர், 2011ம் ஆண்டு ஆகஸ்ட் 4ம் தேதி வரை 1,158 நாட்கள் முதல்வராக இருந்தார். அதன் பிறகு 2018ம் ஆண்டு மே மாதம் 17ம் தேதி பதவியேற்று 23ம் தேதி வரை 7 நாட்கள் முதல்வராக பதவியில் இருந்தார். அடுத்து நான்காவது முறையாக 2019ம் ஆண்டு ஜூலை 26ம் தேதி பதவியேற்று 2021ம் ஆண்டு ஜூலை 26ம் தேதி வரை 730 நாட்கள் முதல்வராக பதவியில் இருந்தார். நான்கு முறை முதல்வராக இருந்தும் ஒருமுறை கூட எடியூரப்பா 5 ஆண்டுகாலம் ஆட்சியை நிறைவு செய்யவில்லை. 4 முறை பதவி வகித்த அவர் கர்நாடகாவின் முதல்வராக 1,927 நாட்கள் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கர்நாடகாவின் அடுத்த முதல்வர் யார்? - பாஜக தேசிய தலைமை ஆலோசனை!

Published on 26/07/2021 | Edited on 26/07/2021

 

amit shah and jp nadda

 

கர்நாடக முதல்வர் பதவியிலிருந்து எடியூரப்பா இராஜினாமா செய்வார் என நீண்டநாட்களாக தகவல்கள் வெளியான நிலையில், அவர் இன்று (26.07.2021) தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். இராஜினாமாவிற்குப் பிறகு ஊடகங்களிடம் பேசிய எடியூரப்பா, தன்னை இராஜினாமா செய்யும்படி யாரும் நிர்பந்திக்கவில்லையென்றும், தானாகவே இராஜினாமா செய்ததாகவும் தெரிவித்துள்ளார். மேலும், தான் ஆளுநராக நியமிக்கப்படப் போவதாக வெளியான தகவல்களையும் எடியூரப்பா மறுத்துள்ளார்.

 

இராஜினாமா செய்த எடியூரப்பாவை கர்நாடக ஆளுநர், புதிய முதல்வர் தேர்ந்தெடுக்கப்படும் வரை காபந்து முதல்வராக பொறுப்பு வகிக்கும்படி கேட்டுக்கொண்டுள்ளார். இதற்கிடையே கர்நாடகாவின் அடுத்த முதல்வர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

 

இந்தச் சூழலில் மத்திய உள்துறை அமைசர் அமித்ஷா, பாஜக தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா உள்ளிட்டோர் ஆலோசனையில் ஈடுபட்டதாகவும், இதில் கர்நாடக முதல்வராக வாய்ப்புள்ளவராக கருதப்படும் மத்திய அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷியும் கலந்துகொண்டார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. 

 

 

Next Story

முதல்வர் பதவியிலிருந்து இராஜினாமா - எடியூரப்பா அறிவிப்பு!

Published on 26/07/2021 | Edited on 26/07/2021

 

YEDIYURAPPA

 

கர்நாடக மாநில பாஜகவில் நீண்டநாட்களாக உட்கட்சி பூசல் நிலவிவருகிறது. கர்நாடக முதல்வர் எடியூரப்பாவிற்கு எதிராக, கட்சியில் உள்ளவர்களே போர்க்கொடி தூக்கியுள்ளனர். இதனால் எடியூரப்பாவின் பதவி பறிக்கப்படும் என தகவல்கள் வெளியாகின. இதற்கிடையே பாஜக மேலிட பொறுப்பாளர் அருண் சிங், எடியூரப்பா அதிருப்தியாளர்களை சமாதானப்படுத்தினார்.

 

இருப்பினும் அதிருப்தி ஓயவில்லை. இந்தநிலையில் எடியூரப்பா, தனத மகன் விஜயேந்திராவுடன் டெல்லி சென்று பிரதமர் மோடியை சந்தித்தார். மாநில விவகாரங்கள் குறித்து இந்தச் சந்திப்பு நடைபெற்றதாக கூறப்பட்டாலும், எடியூரப்பா தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்யப்போவதாக தகவல்கள் வெளியாகின. ஆயினும், அடுத்த நாள் பாஜக தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரை சந்தித்துப் பேசிய எடியூரப்பா, தான் பதவி விலகப்போவதாக வெளியான தகவல்களைத் திட்டவட்டமாக மறுத்தார்.

 

இருப்பினும் பிரதமருடனான சந்திப்பில் எடியூரப்பா, தனது உடல்நிலையைக் காரணம் காட்டி பதவி விலக முன்வந்ததாகவும், அதற்குப் பதிலாக தனது மகனுக்கு மாநில பாஜகவில் முக்கிய பதவி வழங்க வேண்டும் என கேட்டதாகவும் தகவல் வெளியானது. மேலும், எடியூரப்பாவின் ராஜினாமாவை ஏற்பது குறித்து பாஜக மேலிடம் விரைவில் முடிவெடுக்கும் எனவும் தகவல்கள் வெளியாகின.

 

இதற்கிடையே சில நாட்களுக்கு முன் எடியூரப்பா, வரும் 26ஆம் தேதிக்குப் பிறகு பாஜக தேசியத் தலைவர் ஜே.பி நட்டா எடுக்கும் முடிவைப் பின்பற்றுவேன் என தெரிவித்தார். இந்தநிலையில் இன்று (26.07.2021) எடியூரப்பா தனது முதல்வர் பதவியை இராஜினாமா செய்யப்போவதாக அறிவித்துள்ளார். மத்திய உணவிற்குப் பிறகு ஆளுநரை சந்திக்கவுள்ளதாகவும் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.