Advertisment

இந்தியாவில் நிறுத்தப்பட்ட யாஹூ செய்தி  இணைய சேவை - காரணம் என்ன?

YAHOO NEWS

Advertisment

யாஹூ செய்தி இணையத்தின் செயல்பாட்டை, யாஹூ நிறுவனத்தின் உரிமையாளரான வெரிசோன் மீடியா இந்தியாவில் நிறுத்தியுள்ளது.யாஹூ கிரிக்கெட், யாஹூ பைனான்ஸ் உள்ளிட்ட இணைய சேவைகளும் இந்தியாவில் நிறுத்தப்படுள்ளன.

மத்திய அரசு, அந்நிய நேரடி முதலீட்டிற்கானவிதிகளில் செய்தமாற்றங்கள், அக்டோபரில் நடைமுறைக்கு வரவுள்ளன. இந்த புதிய விதிகளின்படி, இணைய ஊடக நிறுவனங்களில் 26 சதவீதம் வரை மட்டுமே நேரடி அந்நிய முதலீடு அனுமதிக்கப்படும். இதனால் வெளிநாட்டு நிறுவனமானயாஹூ, இந்தியாவில் தொடர்ந்து செயல்பட அதன் வர்த்தக அமைப்பையேமாற்றி அமைக்க வேண்டும்.

இதன்காரணமாகவெரிசோன் மீடியா, யாஹூ சேவையை இந்தியாவில் நிறுத்தியுள்ளது. இதுதொடர்பாகவெரிசோன் மீடியாவின் உலகளாவிய பொதுக் கொள்கையின் தலைவர் ஏப்ரல் பாய்ட், "குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் ஊடக வணிகத்தை மறுசீரமைப்பதில்உள்ள செயல்பாடு மற்றும் பொருளாதார சவால்களாலும்,செய்தி மற்றும் நடப்பு விவகார உள்ளடக்க வணிகத்தை செயல்படுத்துவதற்கு தேவையான அரசு ஒப்புதல்கள் இல்லாததாலும் நாங்கள் எங்கள் செயல்பாட்டை இந்தியாவில் நிறுத்தியுள்ளோம்" எனக் கூறியுள்ளார்.

India YAHOO
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe