Skip to main content

ஆஹா வந்துடுச்சு, தென்னை மரம் ஏற மெஷின்..!

Published on 25/12/2021 | Edited on 25/12/2021

 

Wow come on. Coconut tree climbing machine ....

 

ஆஹா வந்திருச்சு, தென்னை மரமேற மெஷின்..! ஆனால் இங்கல்ல, அண்டை மாநிலமான கேரளாவில்தான் பாடுகிறார்கள் இப்படி. அந்த உபகரணங்கள் விரைவில் தமிழ்நாடு வரலாம். நினைத்தால் சாத்தியம்தானே. தமிழ்நாட்டின் டெல்டா, குமரி, நெல்லை மற்றும் தென்காசி மாவட்டங்களில் தென்னந்தோப்புகள் அதிகம். தென்னம் பிள்ளை என்று தமிழ்நாட்டு மக்கள் தென்னையைப் பெற்ற பிள்ளைகளுக்கு ஒப்பீடு செய்வார்கள். அப்படி போற்றி வளர்க்கப்படுவது தென்னை. பத்து தென்னை மரங்கள் இருந்தால் ஒரு குடும்பம் பிழைக்கலாம். காரணம், மனித வாழ்வில் பக்தி முதல் அன்றாடம் உண்ணும் உணவு வரையிலும் தேங்காயின் பங்களிப்பு மிக அதிகம். பருப்பு இல்லாத சாம்பாரா என்று கிச்சன் தலைவிகள் சொல்லுவதைப் போல, தேங்காய் இல்லாத உணவா என்றாகிவிட்டது பிரபஞ்சத்தில். அதுபோன்று மனித வாழ்வில் ஒன்றிப் போனது தென்னை.

 

Wow come on. Coconut tree climbing machine ....

 

இதர மாவட்டங்கள் மட்டுமல்லாமல், குறிப்பாக தென்காசி மாவட்டத்தின் கடையநல்லூர், காசிதர்மம், நெடுவயல், அச்சன்புதூர், வடகரை, தென்காசி, செங்கோட்டை உள்ளிட்ட ஆற்றுப்பகுதிகளில் ஆதிகாலம் தொட்டே  தென்னை மரங்களடங்கிய தென்னந்தோப்புகள் மிக அதிகம். மட்டுமல்ல, அந்த டிவிஷன்களில் தென்னந்தோப்புகள் முக்கியமான விவசாயத் தொழிலாகவே நடத்தப்படுகிறது. குறிப்பிட்ட காலத்தில் தேங்காய் பலன் தரக்கூடிய நேரத்தில், ஆயிரக்கணக்கில் விளைந்திருக்கும் தேங்காய்களைத் தென்னை ஏறி பறித்துத் தள்ளுவதில் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் ஈடுபட்டுள்ளன. இதையே தொழிலாகக் கொண்ட தென்னைமரத் தேங்காய் பறிப்புத் தொழிலாளிகள், பறிப்பு சீசன் காலங்களில் மாநிலம் முழுக்கச் சென்று தேங்காய் பறிப்பில் ஈடுபடுவர். காலச்சூழல் காரணமாக தமிழ்நாட்டில் தேங்காய் பறிப்புத் தொழிலாளிகளின் கூலியும் கணிசமாக உயர்ந்துவிட்டதால், வேறு வழியின்றி தென்னை ஏறும் தொழிலாளர்களுக்குக் கூலி தர வேண்டிய சூழல் மட்டுமல்ல, தென்னை ஏறும் தொழிலாளிகளும் இதில் சிரமங்களையும் உடல் வலியையும் சந்திக்க வேண்டிய கட்டாயம். ஏறும்போது நெஞ்சு உரசி காயமும் ஏற்படுவதோடு ஏறும்போது கரணம் தப்பினால் மரணம்தான் என்பது தவிர்க்க முடியாதது.

 

Wow come on. Coconut tree climbing machine ....

 

இதே போன்றதொரு, நிலவரம்தான் மாநிலம் முழுக்க. தென்னை மரங்களை ஆதாரமாகக் கொண்ட கேரளாவில், இதர மாநிலங்களைப் போலன்றி தென்னை மரங்களைத் தெய்வத்திற்கு ஒப்பாகவே வைத்திருக்கிறார்கள் மலையாளிகள். கேரளாவில் திரும்பிய இடமெல்லாம் தென்படும் தென்னைக் கூட்டம்தான் ஆரம்ப காலங்களில் அம்மாநிலத்தின் பிழைப்பின் ஆதாரம். பண்டைய காலங்களில் தென்னை மரத்திற்குக் கேர விருட்சம் என்று பெயர் இருந்ததன் காரணமாக, கேரளம் என்பது தென்னையின் உயிர் என்கிறார்கள் கொல்லம் நகரவாசிகள். ஆக கேரளா என்ற பெயர் தென்னை மரத்தை அடிப்படையாகக் கொண்டு உருவானதாகத் தெரிகிறது.

 

காலநிலை மாற்றம், டிஜிட்டல் உலகம் என்றான நிலையில் தற்போது கேரளாவில் முன்னெப்போதுமில்லாமல் தென்னை ஏறித் தேங்காய் பறிப்பதற்கு ஆட்கள் கிடைக்காமல் திண்டாட்டமாகியிருக்கிறது. அப்படியே பறிப்பு ஆட்கள் கிடைத்தாலும் கூலியோ உச்சம். மிகவும் நெருக்கடியான காலகட்டம். தவிப்பில் இருந்ததாகவும் சொல்லப்படுகிறது. இந்த நெருக்கடியான நேரத்தில்தான் தென்னை ஏறுகிற உபகரணம் அறிமுகமாகி சக்கை போடு போடுகிறதாம். அந்த உபகரணங்கள் மூலம் எத்தனை பெரிய தென்னை மரம் என்றாலும், புதிய நபர் கூட மிகச் சுளுவாக பத்தே நிமிடத்தில் தென்னை மரமேறிவிடலாம். அத்தனை அதிசயம். தற்போது கேரளாவில் தென்னந்தோப்பு அதிபர்களிடையே வரப்பிரசாதமாகப் பார்க்கப்படும் பொருளாகிவிட்டது என்கிறார்கள்.

 

Wow come on. Coconut tree climbing machine ....

 

கேரளாவின் கொல்லம் தாழவா பகுதியைச் சேர்ந்த விலு மற்றும் வினோத் சகோதரர்கள் ராணுவத்தில் பணிபுரிந்த முன்னாள் ராணுவத்தினர். தற்போது வங்கியில் வேலை பார்த்தாலும் இவர்கள்தான் இந்த மரம் ஏறும் உபகரணங்களை அறிமுகப்படுத்தியவர்கள். 9 பேர்களைக் கொண்ட தேங்காய் பாய்ஸ் என்ற அமைப்பைக் கொண்டவர்கள். இதில் 2 பேர் மலையாளிகள், 7 பேர் பெங்காலிகள். இதன்மூலம் இந்த மெஷினைக் கொண்டு தென்னை மரமேறுவதைக் கொல்லம் மற்றும் ஆலப்புழை மாவட்டங்களில் பயிற்சி கொடுத்துவருகிறார்கள்.

 

“கேரளாவில் தென்னை மரமேற ஆட்களில்லை. இருக்கப்பட்டவர்ளோ அதிக கூலி கேட்கிறார்கள். இந்தநிலையில்தான் இந்த டூல்ஸை அறிமுகப்படுத்தினோம். இதற்கு கேரளாவில் நல்ல வரவேற்பு. திருவனந்தபுரத்தில் இந்த டூல்ஸைக் கொண்டு பெண்கள் கூட தென்னை மரம் ஏறுகிறார்கள். இங்கே இது ரொம்ப ஹெல்ப் ஃபுல்லாக இருக்கிறது” என்கிறார் வினோத்.

 

இங்கேயும் இறக்குமதியாகுமா தென்னை மர மெஷின். காலம்தான் பதில் தர வேண்டும்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பூச்சிக்கொல்லி மருந்தா? பயிர்க்கொல்லி மருந்தா? - போராடும் விவசாயிகள்! நடவடிக்கை எடுக்கத் தயங்கும் அதிகாரிகள்

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Farmers struggle at Pudukkottai District Collectorate

திருச்சி மாவட்டம் மணப்பாறை வட்டம் சேர்பட்டி அருகே மறவனூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி செந்தில்குமார் 10 ஏக்கரில் நெல் பயிர் நடவு செய்துள்ளார். கதிர் வரும் நிலையில் இலைசுருட்டுப்புழு காணப்பட்டதால் புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் உள்ள ஒரு தனியார் பூச்சிக்கொல்லி மருந்துக் கடையில் பூச்சிக்கொல்லி மருந்து வாங்கிச் சென்று 8.5 ஏக்கருக்கு தெளித்துள்ளார்.

பூச்சிக்கொல்லி மருந்து தெளித்து சில நாட்களில் பயிர்கள் கருகத் தொடங்கி ஒரு வாரத்தில் முழுமையாக கருகியது. சம்பந்தப்பட்ட மருந்துக் கடையில் கேட்டதற்கு சரியான பதில் இல்லாததால் திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்டார் விவசாயி செந்தில்குமார். இதனையடுத்து வயலுக்கே வந்து ஆய்வு செய்த வேளாண்துறை அதிகாரிகள் பூச்சிக்கொல்லி மருந்தால் தான் பயிர்கள் கருகிவிட்டதாக சான்றளித்தனர்.

இதனையடுத்து விராலிமலை பூச்சிக்கொல்லி மருந்துக்கடை மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில், வியாழக்கிழமை தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் துணைச் செயலாளர் சேகர் முன்னிலையில் ஏராளமான விவசாயிகள் கருகிய பயிர்களுடன் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி வந்தனர்.

கருகிய பயிர்களுடன் வந்த விவசாயிகளை ஆட்சியர் அலுவலகத்திற்குள் அனுமதிக்காததால் நுழைவாயிலிலேயே கருகிய பயிர்களை கொட்டியும் கையில் வைத்துக் கொண்டும் ஒப்பாரி வைத்து ஆர்ப்பாட்டம் செய்தனர். அங்கு வந்த போலீசாரும் வருவாய்த் துறை அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாகக் கூறிய பிறகு ஆட்சியர் அலுவலக நுழைவாயில் போராட்டத்தை விவசாயிகள் முடித்துக் கொண்டனர்.

ஆனால் வேளாண்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் பிச்சத்தான்பட்டியில் திருச்சி மாவட்ட விவசாயிகள் இருவர் செல்போன் கோபுரத்தில் ஏறிவிட்டனர். அதேபோல மற்றொரு குழு விவசாயிகள் விராலிமலை வேளாண் இணை இயக்குநர் அலுவலகத்திற்குச் சென்ற விவசாயிகள் அலுவலகத்திற்குள் நுழைந்து நடவடிக்கை எடுக்கும் வரை போகமாட்டோம்  என்று அங்கேயே படுத்துவிட்டனர்.

அதன் பிறகே சம்பந்தப்பட்ட விராலிமலை பூச்சிக்கொல்லி மருந்துக் கடையை அதிகாரிகள் மூடினர். பூச்சிக்கொல்லி மருந்து கேட்டால் பயிர்க்கொல்லி மருந்து கொடுத்து 8.5 ஏக்கர் நெல் பயிர்களைக் கொன்ற பூச்சி மருந்துக்கடை உரிமத்தை ரத்து செய்ய வேண்டும். கடையை நிரந்தரமாக மூட வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை வைத்துள்ளனர். சில மாதங்களுக்கு முன்பு கீரமங்கலத்தில் 10 ஆண்டுகளுக்கு முன்பு காலாவதியான பூச்சிக்கொல்லி மருந்துகளை புதிய லேபிள் ஒட்டி புதிய மருந்தாக விற்பனைக்கு வைத்திருந்த சுமார் 1500 மருந்துப் பாட்டில்களை பறிமுதல் செய்த அதிகாரிகள் இப்போது நடவடிக்கை எடுக்க தயக்கம் ஏன் என்ற கேள்வி எழுப்புகின்றனர்.

Next Story

“அனைவரும் ஒன்றுபட வேண்டும்” - விவசாயிகளுக்கு ஆதரவாக காலா பட நடிகர்

Published on 07/03/2024 | Edited on 07/03/2024
nane patekar about farmers

இந்தி மற்றும் மராத்தியில் பல்வேறு படங்களில் நடித்து பிரபலமானவர் நானா படேகர். கடைசியாக தி வேக்ஸின் வார் படத்தில் நடித்திருந்தார். தமிழில் ரஜினியின் காலா படத்தில் வில்லனாக நடித்திருந்தார். இப்போது ஜேர்னி (Journey) என்ற தலைப்பில் ஒரு படம் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

திரைப்படங்களில் நடித்துக் கொண்டே மற்றொரு மராத்தி நடிகரான மகரந்த அனஸ்புரேவுடன் இணைந்து ‘நாம்’ என்ற அறக்கட்டளையை நடத்தி வருகிறார். இதன் மூலம் மகாராஷ்டிராவில் உள்ள வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் விவசாயிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறார். இந்த நிலையில், நாசிக்கில் நடைபெற்ற ஷேத்காரி சம்மேளன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசுகையில், “விவசாயிகள் நல்ல நேரத்துக்காகக் காத்திருக்காமல் விடாமுயற்சியின் மூலம் நல்ல காலங்களைக் கொண்டு வர வேண்டும். 

எந்த அரசாங்கம் ஆட்சிக்கு வரும் என்பதை நீங்கள் தான் தீர்மானிக்க வேண்டும். தங்கம் விலை உயரும்போது, அரிசி விலை ஏன் உயரவில்லை? விவசாயிகள் முழு தேசத்திற்கும் உணவு வழங்குகிறார்கள். ஆனால் அவர்களின் குறைகளை தீர்க்க அரசுக்கு நேரமில்லை. இதுபோன்ற அரசிடம் விவசாயிகள் எதையும் கோர வேண்டாம். எந்த மாதிரியான இலட்சியத்தை இளம் தலைமுறைக்கு முன் வைக்கிறீர்கள்? நீங்கள் என்ன செய்கிறீர்கள்? நான் வெளிப்படையாக பேசும் நபர் என்பதால் என்னால் அரசியலில் சேர முடியாது. தற்போதைய நிலையை மாற்ற நாம் அனைவரும் ஒன்றுபட வேண்டும்” என்றார்.