Skip to main content

உயர்தர உணவக பிரியாணியில் புழு!! சந்துக்கடைகளுக்கு மட்டும்தான் ரெய்டா!! குவியும் கருத்துக்கள்

Published on 02/09/2018 | Edited on 02/09/2018

 

biriyani

 

ஹைத்ராபாத்தில் பிரபல ரெஸ்டாரெண்டான IKEA-ல் அளிக்கப்பட்ட பிரியாணியில் புழு இருந்ததை அடுத்து அந்த உணவகத்திற்கு 11,500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

 

ஹத்ராபாத்தில் மிகவும் பிரபல ரெஸ்டாரெண்டான  IKEA-வில் கடந்த சனிக்கிழமை சாப்பிட சென்ற ஒருவருக்கு கொடுக்கப்பட்ட வெஜிடபிள் பிரியாணியில் புழு இருப்பதை கண்டு அதிர்ந்து அதை புகைப்படம் எடுத்துள்ளார். பின்னர் உணவு பாதுகாப்பு மற்றும் கிரேட்டர் ஹைதராபாத் முனிசிபல் கார்ப்ரேஷனுக்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில் உணவு பாதுக்காப்பு துறை உறுப்பினர்கள் அந்த உணவகத்தில் சோதனையிட்டு உணவு மாதிரிகளை சோதனைக்கு அனுப்பினர் மேலும் அந்த உணவகத்திற்கு 11,500 ரூபாய் அபராதம் கட்டவும் உத்தரவிட்டுள்ளனர்.

 

food

 

 

 

மிகப்பெரிய வர்த்தக அமைப்புகொண்ட நிறுவனமான IKEA-ல் இப்படி உணவில் புழு இருப்பது உணவு பாதுகாப்பை கேள்விக்குறியாக மாற்றியுள்ளதாக கருத்துக்கள் குவிந்துவருகிறது. அதேபோல் ரோட்டில் உள்ள சந்து பொந்துகளில் உள்ள கடைகளில் அதிரடி ரெய்ட்டுகள் போகும் உணவு பாதுகாப்பு துறை இதுபோன்ற இடங்களை விட்டுவிடுகின்றன என்றும் குற்றம்சாட்டி வருகின்றனர்.

 

இதேபோல் அண்மையில் ஹைத்ராபாத்திலுள்ள பிவிஆர் போரம் சுஜானா மாளில் பாக்கெட்டில் அடைத்துவைக்கப்பட்ட உணவில் கரப்பாம்பூச்சி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு 3000 ரூபாய் அபராதம் பெற்றது குறிப்படத்தக்கது.  

சார்ந்த செய்திகள்

Next Story

13வது நோன்பு நாளில் சுடச்சுட ஆவி பறக்க தயாரான பிரியாணி

Published on 24/03/2024 | Edited on 24/03/2024
Ready-to-eat Biryani to bake on the 13th day of Lent

ஏப்ரல் மாதம் ரம்ஜான் பண்டிகை வருவதையொட்டி உலகம் முழுவதும் இஸ்லாமிய மக்கள் நோன்பு இருந்து வருகின்றனர். சூரியன் உதயம் முதல் அந்தி சாயும் வரை உணவு உண்ணாமல், நீர் அருந்தாமல் நோன்பு இருப்பர். மாலை 6 மணிக்கு மசூதிக்கு சென்று நமாஸ் செய்துவிட்டு உணவு உண்பார்கள். காலை 5 மணிக்கு முன்பாக உணவு உண்பதை நிறுத்திவிடுவர். நோன்பு காலத்தில் இயலாத மக்களுக்கு மதம் பார்க்காமல் உதவுவார்கள்.

வேலூர் கோட்டை எதிரே 400 கிலோ சிக்கன் கறி கொண்டு சுடச் சுட ஆவி பறக்க நோன்பு பிரியாணி தயார் செய்யப்பட்டது. வேலூர் மக்கான் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு 13 வது நோன்பு நாளில் பிரியாணி சமைத்து சுமார் 2000 வீட்டுக்கு பகிர்ந்து அளித்தனர்.

சனிக்கிழமை மாலை 5 மணியிலிருந்து பிரியாணி தயார் செய்யும் பணி தொடங்கிய நிலையில் நள்ளிரவு ஒரு மணி வரை பிரியாணி சமைக்கப்பட்டது. இந்தப் பணியில் சுமார் 130 பேர் ஈடுபட்ட நிலையில், மக்கான் பகுதியில் உள்ள வீடுகளுக்கு சுமார் அதிகாலை 2.30 மணிக்கு முன்பு பகிர்ந்தளிக்கப்பட்டது. ரம்ஜானை முன்னிட்டு 13 வது நோன்பு நாளில் அதிகாலையில் மக்கான் பகுதியில் உள்ள அனைத்து இஸ்லாமியர்களும் பிரியாணியை உண்டு மகிழ்ந்தனர்.

Next Story

டன் கணக்கில் பிடிபட்ட போலி இஞ்சி பேஸ்ட்; பொதுமக்களே உஷார்

Published on 10/03/2024 | Edited on 10/03/2024
Tons of fake ginger paste caught; Public beware

உணவு பொருள்களின் தரம் மற்றும் தரமற்ற உணவுப் பொருட்கள், போலியான கலப்படம் செய்யப்பட்ட உணவுப் பொருட்கள் குறித்த வீடியோக்கள், தகவல்கள் சமூக வலைத்தளங்களில் அதிகமாக பரவி வரும் நிலையில், ஹைதராபாத்தில் டன் கணக்கில் போலி இஞ்சி பேஸ்ட் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

ஹோட்டல்கள் மற்றும் உணவுப் பொருட்கள் தயாரிக்க பயன்படும் பொருட்கள் விற்பனை கடைகளில் உணவு பாதுகாப்புதுறை அதிகாரிகள் அடிக்கடி திடீர் சோதனையில் ஈடுபட்டு தரம் இல்லாத பொருட்களை பறிமுதல் செய்து வருகின்றனர். இந்நிலையில் கடைகளில் பிரபல நிறுவனங்களின் பெயரில் கிடைக்கும் இஞ்சி பேஸ்ட் போல ஹைதராபாத்தில் சில நபர்கள் பாக்கெட்டுகளில் போலியாக இஞ்சி பேஸ்ட் தயாரித்து விற்பனை செய்து வந்தது தெரியவந்துள்ளது.

உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவலின் பெயரில் சென்ற அதிகாரிகள் அதை பறிமுதல் செய்துள்ளனர். பறிமுதல் செய்யப்பட்டுள்ள பொருட்களின் மதிப்பு 2 லட்சம் ரூபாய் என்பது தெரியவந்துள்ளது. உடல் நலனுக்கு கேடு விளைவிக்கும் செயற்கையான உணவுப் பொருட்கள் மற்றும் வண்ணம், பசை ஆகியவற்றை கலந்து இந்த போலி இஞ்சி பேஸ்ட் தயாரிக்கப்பட்டது விசாரணையில் தெரிய வந்துள்ளது. 3 டன் அளவில் போலி இஞ்சி பேஸ்ட் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.