Skip to main content

10 ஆயிரம் பெண்களால் நடத்தப்படும் உலகின் பெரிய தொழிற்சாலை - ஓலா நிறுவனம் அறிவிப்பு!

Published on 14/09/2021 | Edited on 14/09/2021

 

பக

 

இந்தியாவில் மின்சார வாகனங்களின் பயன்பாடு முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு தற்போது அதிகரித்துள்ளது. குறிப்பாக, மின்சாரத்தால் இயங்கும் இருசக்கர வாகனங்களை வாங்க மக்கள் விரும்புவதாக பல்வேறு ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. அந்த வகையில், பிரபல ஓலா நிறுவனத்தின் புதிய அறிவிப்பு ஒன்று மோட்டார் வாகனத்துறையில் மிகுந்த சலசலப்பையும், எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது. 

 

இதுதொடர்பாக அந்த நிறுவனத்தின் இணை இயக்குநர் பாவிஷ் அகர்வால் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "எங்கள் நிறுவனத்தின் ஃபியூச்சர் தொழிற்சாலை முழுக்க முழுக்க பெண்களால் நடத்தப்படும். தற்சார்பு இந்தியாவுக்கு தற்சார்பு பெண்கள் தேவை. இந்த நிறுவனத்தில் 10 ஆயிரம் பெண்கள் பணியமர்த்தப்படுவார்கள். இது முழுக்க முழுக்க பெண்களால் நடத்தப்படும் உலகின் மிகப்பெரிய தொழிற்சாலையாக இருக்கும்" என தெரிவித்துள்ளார். இவரின் இந்த அறிவிப்புக்கு சமூகவலைதளங்களில் பாராட்டுகள் குவிந்துவருகின்றன.
 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஓலா, ரேபிடோ ஓட்டுநர்கள் மீது ஆட்டோ ஓட்டுநர் தாக்குதல்; வைரலாகும் வீடியோ காட்சி

Published on 01/04/2023 | Edited on 01/04/2023

 

 Auto driver attacks Ola, Rapido drivers; video goes viral

 

ஓலா மற்றும் ரேபிடோ ஓட்டுநர்களை ஆட்டோ ஓட்டுநர்கள் தாக்குவதாக காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

 

கோயம்பேடு பேருந்து நிலையத்தில் முன்பதிவு செய்த வாடிக்கையாளர்களை அழைத்துச் செல்வதற்காக ஓலா, ரேபிடோ ஓட்டுநர்கள் வரும் போது அங்கிருக்கும் ஆட்டோ ஓட்டுநர்கள் தாக்குதல் நடத்துவதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.

 

சமீபத்தில் ரேபிடோ ஓட்டுநர் சஞ்சய் என்பவர் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் வாடிக்கையாளருக்காக காத்துக் கொண்டிருந்த பொழுது அங்கிருந்த ஆட்டோ ஓட்டுநர் கார்த்திக் என்பவர், நீங்கள் இங்கே வரக்கூடாது என கற்களால் தாக்கி காயப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பான வீடியோ காட்சிகளும் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. காவல் ஆணையர் அலுவலகத்தில் இது தொடர்பாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் இதேபோல் நான்கு முறை தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், இதனால் தங்களது வாகனங்கள் சேதம் அடைந்ததாகவும் தெரிவித்துள்ளனர் பாதிக்கப்பட்ட ஓலா, ரேபிடோ ஓட்டுநர்கள்.

 

 

Next Story

3,111 நபர்களுக்கு வேலை வாய்ப்பு; தமிழக அரசு ஓலா உடன் புதிய ஒப்பந்தம்

Published on 18/02/2023 | Edited on 18/02/2023

 

Employment to 3111 persons; Tamil Nadu Govt signs new deal with Ola

 

3,111 நபர்களுக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்கும் வகையில் தமிழக அரசு ஓலா நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. 

 

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (18.02.2023) தலைமைச் செயலகத்தில் தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில் திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் முதலமைச்சர், அமைச்சர்கள் துரைமுருகன், தங்கம் தென்னரசு மற்றும் தலைமைச் செயலாளர் இறையன்பு ஆகியோர் கலந்துகொண்டனர். தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில் வேலூர் மாவட்டத்தில் 4.98 ஏக்கர் நிலப் பரப்பளவில் மினி டைடல் பூங்கா அமைக்கப்பட இருக்கிறது. 30 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள கட்டடத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில் வைத்து காணொலி வாயிலாக அடிக்கல் நாட்டினார். 

 

மேலும் சிப்காட் ஓசூர் தொழிற் பூங்காவில் 150 கோடி ரூபாய் முதலீட்டில் நிறுவப்பட்டுள்ள ஐநாக்ஸ் ஏர் ப்ராடக்ட்ஸ் நிறுவனத்தின் அதி உயர் தூய்மையான திரவ மருத்துவ ஆக்ஸிஜன் உற்பத்தி ஆலை மற்றும் சென்னையில் 110 கோடி ரூபாய் முதலீட்டில் நிறுவப்பட்டுள்ள GX குழுமத்தின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம் ஆகியவற்றையும் திறந்து வைத்தார். தொடர்ந்து தமிழ்நாடு அரசிற்கும் ஓலா எலக்ட்ரிக் மொபிலிட்டி பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்குமிடையே 7,614 கோடி ரூபாய் முதலீட்டில் 3,111 நபர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்திடும் வகையில் நான்கு சக்கர மின்சார வாகனங்கள் உற்பத்தி மற்றும் 20 கிகாவாட் மின்கலன்கள் உற்பத்தித் திறன் கொண்ட ஆலைகளை அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

 

முதலமைச்சர் நிர்ணயித்துள்ள இலக்கான 2030-31 ஆம் ஆண்டிற்குள் தமிழ்நாடு ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதார வளர்ச்சியடைய முதலீடுகளை ஈர்க்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு எடுத்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.