Skip to main content

6 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவிகள் செய்த உலக சாதனை!

Published on 07/03/2023 | Edited on 07/03/2023

 

World record made by 6th and 8th graders!

 

புதுச்சேரியில் உலக சாதனைக்காக கலர் கோலமாவுகளைக் கொண்டு 52 ஆயிரம் சதுர அடியில் ஜி20 லோகா வரைந்து விழிப்புணர்வு செய்யப்பட்டது.

 

ஜி20 மாநாட்டுக்கு இந்தியா தலைமை வகித்துள்ளது. அதையொட்டி இம்முறை நாடு முழுவதிலும் முக்கிய நகரங்களில் ஜி20 மாநாடுகள் நடந்து வருகின்றன. தொடக்க நிலை மாநாடு புதுச்சேரியிலும் நடந்தது. இச்சூழலில் புதுச்சேரி விழிகள் அறக்கட்டளை சார்பில் புதுச்சேரி அபிஷேகப்பாக்கம் அரசுப் பள்ளி மைதானத்தில் ஜி20 லோகாவை பிரமாண்டமாக வரையும் நிகழ்வு நடந்தது. இம்முயற்சியில் சேலத்தில் 6 ஆம் வகுப்பு படிக்கும் மாணவி கவுசிகா, புதுச்சேரியில் 8 ஆம் வகுப்பு படிக்கும் மாணவி வாணிஸ்ரீ ஆகியோர் இணைந்து சுமார் 52 ஆயிரம் சதுர அடியில் 35 ஆயிரம் கிலோ கலர் கோல மாவுகளைக் கொண்டு பிரமாண்டமாக வரைந்தனர். 24 மணி நேரத்தில் இந்த பிரமாண்ட லோகோவை வரைந்து சாதனை படைத்தனர். இவர்களது சாதனையை கலாம் உலக சாதனை நிறுவனம் அங்கீகரித்து சான்றிதழ் வழங்கியது.

 

பின்னர் இறுதி நாளில் புதுச்சேரி சாபாநாயகர் செல்வம் நேரில் வந்து உலக சாதனை நிகழ்வை பார்த்து ரசித்து மாணவிகளுக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். மேலும் உலக சாதனைக்கான சான்றிதழையும் வழங்கி பாராட்டினார். இந்த முயற்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் விழிகள் அறக்கட்டளை நிறுவனர் பிரேம்குமார், செயலாளர் கீர்த்தனா ஆகியோர் செய்திருந்தனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

புதுச்சேரி அரசின் சுற்றுலா மேம்பாடு; 'ஒண்டர்ஸ் ஆஃப் ஒய்ட் டவுன்'  மியூசியம் திறப்பு

Published on 17/01/2024 | Edited on 17/01/2024
Opening ceremony Of Artist AP Shreethar's Wonders of White Town 

ஓவியங்கள் மூலம் உலக அளவில் பெயர் பெற்றவர் ஏ.பி.ஸ்ரீதர். இவருடைய கைவண்ணத்தில் விண்டேஜ் கேமரா, கிளிக் ஆர்ட், 3டி ஓவியம், மெழுகு சிலை உள்ளிட்ட பலவகை உள்ளது. தற்போது இவரது கைவண்ணத்தில் புதுச்சேரியின் பாரம்பரியமிக்க ஒய்ட் டவுன்-இல் பிரம்மாண்ட கலாச்சார நிறுவனம் 'ஒண்டர்ஸ் ஆஃப் ஒய்ட் டவுன்' என்ற மியூசியம் தைத்திருநாளை முன்னிட்டு ஜனவரி 15-ஆம் தேதி மாண்புமிகு புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி அவர்களால் திறக்கப்பட்டு இருக்கிறது.

வில்லா குகா, ரூ சுஃப்ரென், புதுச்சேரி - 605001 என்ற முகவரியில் உருவாகி இருக்கும் 'ஒண்டர்ஸ் ஆஃப் ஒய்ட் டவுன்', இந்தியாவின் அருங்காட்சியக மனிதராக அறியப்படும் ஏ.பி.ஸ்ரீதர் மற்றும் திரு.வே.குகன் இணைந்து உருவாக்கி உள்ளனர்.

லைவ் ஆர்ட் மியூசியம், டெடி மியூசியம் மற்றும் ஃபிஷ் மியூசியம் என மூன்று பிரத்யேக அருங்காட்சியகங்கள் இதில் இடம் பெற்றுள்ளது. இந்த கலை மற்றும் கலாச்சார மையத்தை கட்டடத்துறையில் புகழ்பெற்ற அகிலன் ஆர் வடிவமைத்துள்ளார். மெழுகு சிலை சிற்பங்கள், கொண்ட லைவ் ஆர்ட் மியூசியத்தில் உலகின் பிரபல தலைவர்களான மகாத்மா காந்தி, அப்துல் கலாம், மதர் தெரேசா, ரவீந்திரநாத் தாகூர் உள்ளிட்ட பலர் தத்ரூபமாக இருக்கும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் உலகின் மிக உயரமான மனிதன் மற்றும் குள்ளமான மனிதன் பார்க்க உண்மையாகவே காட்சியளிக்கும் சிலிகான் சிலைகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

டெடி (Teddy) மியூசியம் மனித குலத்தின் சர்வதேச அழகியல், குழந்தை பருவ நினைவுகளை கொண்டாடும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. 195 நாடுகளின் பாரம்பரிய மிக்க உடைகளில் 500 டெடி பொம்மைகள் மறு உருவாக்கம் செய்யப்பட்டு இருக்கிறது. ஃபிஷ் (Fish) மியூசியத்தில் நீருக்கடியில் உள்ள எண்ணற்ற உயிரினங்களை தழுவி உருவாக்கப்பட்ட சிற்பங்கள் வைக்கப்பட்டுள்ளன.

இந்த மியூசியத்தை புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி திறந்து வைத்து ஓவியர் ஏ.பி.ஸ்ரீதர் மற்றும் அவரது குழுவினரை வாழ்த்தினார். மேலும் அவர் கூறும்போது, மியூசியத்தில் வைக்கப்பட்டுள்ள, தலைவர்களின் சிலிகான் சிலைகள் சிறப்பான முறையில் உருவாக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் இந்த மியூசியம் அமைந்து இருப்பது பாராட்டுக்குரியது. சுற்றுலாப் பயணிகள், மாணவர்கள், சிறுவர்கள், இளைஞர்கள் இந்த மியூசியத்தை பார்ப்பதற்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது இருக்கிறது. கலையம்சம் பொருந்திய நல்ல அருங்காட்சியம் அமைந்து இருப்பது சுற்றுலா பயணிகளுக்கு மிகவும் பிடிக்கும். சுற்றுலாவுக்கு புதுச்சேரி அரசு மிகவும் முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. இதற்கு உறுதுணையாக இந்த அருங்காட்சியகம் அமைந்து இருப்பது எங்களுக்கு சிறப்பு என்று பாராட்டி கூறினார்.

Next Story

ஜி20 மாநாட்டில் ஆயிரக்கணக்கான கோடி கொள்ளை - கடலூர் இள. புகழேந்தி விளக்கம்

Published on 14/09/2023 | Edited on 14/09/2023

 

Ela Pugazhenthi | Modi | EPS | G20 |Annamalai

 

பல்வேறு அரசியல் நிகழ்வுகள் குறித்து திமுக தேர்தல் பணிக்குழு செயலாளர் கடலூர் இள. புகழேந்தி விரிவாகப் பேசுகிறார்.

 

அந்தக் காலத்தில் வெளிநாட்டு தலைவர்களை இங்கு மிகவும் மதிப்புடன் நடத்தினார்கள். தற்போதைய பாஜக அரசு திருடித் தின்னும் வேலையை மட்டும் தான் செய்கிறது. G20 நிகழ்வுக்காக இவர்கள் கட்டிய இடத்தில் மழை பெய்தபோது நீர் நிரம்பியது. ஆனால் இந்த கூட்டத்துக்காக 990 கோடி செலவு செய்கிறோம் என்று பட்ஜெட்டில் சொன்ன இவர்கள், 4000 கோடிக்கும் அதிகமாக இதன் மூலம் திருடியுள்ளனர். அந்த மாநாட்டின் மூலம் இவர்கள் சாதித்தது என்ன?

 

இந்த மாநாட்டின் லட்சணத்தை வெளிநாட்டு பத்திரிகைகள் எல்லாம் எழுதியுள்ளன. எதையாவது சொல்லி திருடுவது, கொள்ளையடிப்பது தான் பாஜகவின் வேலை. இந்த மாநாட்டுக்காக ஏழைகளின் வீடுகள் இருக்கும் பகுதிகளை எல்லாம் இவர்கள் மறைத்தார்கள். அதை போட்டோ எடுத்துப் போட்டு வெளிநாட்டினர் கேள்வி கேட்கின்றனர். இந்த பாஜக கும்பலை நாட்டை விட்டே அனைவரும் வெளியேற்ற வேண்டும். மிக விரைவாக இந்த ஆட்சி முடிந்தால் நல்லது. இந்தியாவையே இவர்கள் சீரழித்து வருகிறார்கள். 

 

சனாதனம் என்பது பார்ப்பனியம் தான். பெரும்பான்மையான இந்துக்கள் படிப்பதற்கு உதவியது யார்? சனாதனம் இருக்கும்வரை நமக்கு மிகப்பெரிய ஆபத்து இருக்கிறது என்று சொன்னவர் அம்பேத்கர். இப்படிப்பட்ட சனாதனத்தை எதிர்ப்பதில் என்ன தவறு இருக்கிறது? பார்ப்பனர்களின் உயர்ந்த நிலை தான் சனாதனம். பார்ப்பனர்களில் சிலரே கூட சனாதனத்தை எதிர்க்கின்றனர். இந்து என்கிற பெயரை வழங்கியதே ஆங்கிலேயர்கள் தான். சனாதனத்தை ஒழித்தால் தான் இந்துக்களை காப்பாற்ற முடியும். திமுக ஆன்மீகத்துக்கு எதிரானது என்று இவர்கள் பரப்பும் பொய் எடுபடாது.

 

பார்ப்பனர்களுக்கு எடுபிடிகளாக இருப்பவர்களே பாஜகவின் கருத்துக்களை ஆதரிப்பார்கள். உதயநிதி கொள்கை ரீதியாக சனாதனத்தை தாக்குகிறார். சனாதனத்தை எதிர்த்ததால் தான் இன்று தமிழ்நாட்டில் அனைத்தும் இருக்கிறது. இவர்கள் கொஞ்சமாவது வரலாற்றைப் படிக்க வேண்டும். மக்கள் சுட்டுக் கொல்லப்பட்டதையே தொலைக்காட்சியில் பார்த்து தெரிந்துகொண்டேன் என்று சொன்ன மோசடிப் பேர்வழி எடப்பாடி பழனிசாமியின் கருத்துக்களுக்கு எல்லாம் நாம் முக்கியத்துவம் கொடுக்க வேண்டியதில்லை. டெல்லியில் சொல்வதை அப்படியே செய்பவராகத்தான் எடப்பாடி ஆட்சி நடத்தினார்.

 

முழு பேட்டியை வீடியோவாக கீழே உள்ள லிங்க்கில் காணலாம்...