Skip to main content

இந்தோனேசியாவில் பிரதமர் நரேந்திர மோடியுடன் உலக தலைவர்கள் சந்திப்பு

Published on 16/11/2022 | Edited on 16/11/2022

 

World leaders meeting with Prime Minister Narendra Modi in Indonesia!

 

இந்தோனேசியாவில் ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்று வரும் பிரதமர் நரேந்திர மோடியை பல்வேறு நாடுகளின் தலைவர்கள், சர்வதேச அமைப்புகளின் உயரதிகாரிகள் நேரில் சந்தித்துப் பேசினர். 

 

இந்தோனேசியா நாட்டின் பாலி தீவில் ஜி20 நாடுகளின் உச்சி மாநாடு நடைபெறுகிறது. அதில் பங்கேற்றுள்ள பிரதமர் நரேந்திர மோடியை மாநாடு நிகழ்ச்சிகளுக்கு பிறகு பல்வேறு நாடுகளின் தலைவர்கள், பன்னாட்டு அமைப்புகளின் பிரதிநிதிகள் நேரில் சந்தித்துப் பேசி வருகின்றனர்.

 

World leaders meeting with Prime Minister Narendra Modi in Indonesia!

 

நேற்று (15/11/2022) செனகல் அதிபர் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்து இரு தரப்பு உறவுகள் குறித்து ஆலோசனை நடத்தினார். அதேபோல், உலக வங்கியின் தலைவர், பன்னாட்டு நிதியத்தின் கீதா கோபிநாத் மற்றும் ஜார்ஜியாவோ ஆகியோர் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்துப் பேசினர். உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானம் பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்துப் பேசிய நிலையில், புகைப்படத்துடன் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

 

கடல் அரிப்பை தடுப்பது, கரியமில வாயுக்களைக் கட்டுப்படுத்துவது ஆகியவற்றில் அலையாத்தி காடுகள் முக்கியப்பங்கு வகிக்கின்றன. இதன் காரணமாக அந்தக் காடுகளை உலக நாடுகள் பராமரித்து, அழிவில் இருந்து தடுக்க நடவடிக்கை எடுக்கும் வகையில், அலையாத்தி காடுகளை உலக நாடுகளின் தலைவர்கள் பார்வையிட ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

 

v

 

அதனடிப்படையில் பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உள்ளிட்ட அனைத்து தலைவர்களும் பாலி தீவில் உள்ள அலையாத்தி காடுகளைப் பார்வையிட்டனர். 

 

தமிழகத்தில் சுனாமி ஏற்பட்ட போது அரணாக இருந்து பாதிப்பைத் தடுத்ததில் அலையாத்தி காடுகள் முக்கியப்பங்கை வகித்தன என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கொட்டைப் பாக்கு கடத்தல்;ஒருவர் கைது

Published on 07/11/2023 | Edited on 07/11/2023

 

thoothukudi incident; import export

 

தூத்துக்குடி துறைமுகத்திற்கு வந்த கண்டெய்னர்கள் பெட்டியைப் பறிமுதல் செய்து மத்திய வருவாய் புலனாய்வுத் துறையினர் சோதனை நடத்தினர். அதில் 'பஞ்சு கந்தல்' என்ற பெயரில் மோசடியாக ஆவணங்கள் தயாரித்து கப்பல் மூலமாக இந்தோனேசியாவிலிருந்து கொட்டைப் பாக்கு கடத்தப்பட்டது தெரியவந்துள்ளது.

 

இந்த சம்பவத்தில் தூத்துக்குடியைச் சேர்ந்த ஷிப்பிங் நிறுவன உரிமையாளர் ரவி பகதூர் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தோனேசியாவின் ஜகார்த் துறைமுகம் வழியாக தூத்துக்குடி துறைமுகத்திற்கு கண்டெய்னர் பெட்டிகள் வந்து இறங்கியது. அப்போது நடத்தப்பட்ட சோதனையில் கொட்டைப் பாக்கு கடத்தப்பட்டது தெரியவந்தது. பறிமுதல் செய்யப்பட்ட 65 டன் கொட்டைப் பாக்குகளின் மதிப்பு 4 கோடி ரூபாய் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கடத்தலுக்கு சுங்க இலாகா அதிகாரிகள் சிலர் உடந்தையாக இருப்பதாகக் கூறப்படும் நிலையில் அது குறித்தும் மத்திய வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

 

 

Next Story

நிலக்கரி இறக்குமதியில் அதானி நிறுவனம் ஊழல்

Published on 12/10/2023 | Edited on 12/10/2023

 

Adani company issue in coal import

 

நிலக்கரி இறக்குமதி செய்ததில் அதானி நிறுவனம் ஊழல் செய்தது அம்பலமாகியுள்ளது.

 

இந்தோனேசியாவில் இருந்து இந்தியாவிற்கு நிலக்கரி இறக்குமதி செய்ததில் பல ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு ஊழல் செய்துள்ளது அம்பலமாகியுள்ளது. இந்த ஊழல் குறித்து இங்கிலாந்தில் இருந்து வெளியாகும் பைனான்ஸ் டைம்ஸ் என்ற இதழ் அம்பலப்படுத்தியுள்ளது. கடந்த 2018 ஆம் ஆண்டில் இருந்து தற்போது வரை நிலக்கரி இறக்குமதி ஊழலில் அதானி நிறுவனம் ஈடுபட்டு வருவதாக பைனான்ஸ் டைம்ஸ் இதழ் குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளது.

 

அதாவது இந்தோனேசியாவில் இருந்து இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்படும் நிலக்கரியின் விலையை இரு மடங்கு அதிகமாகக் காட்டி அதானி நிறுவனம் மோசடி செய்துள்ளதாக பைனான்ஸ் டைம்ஸ் இதழ் புகார் தெரிவித்துள்ளது. இந்தோனேசியாவில் இருந்து அதானி நிறுவனம் இறக்குமதி செய்யும் நிலக்கரி நேரடியாக இந்தியாவிற்கு வந்து சேரும் நிலையில், துபாய், சிங்கப்பூர் மற்றும் தைவான் உள்ளிட்ட நாடுகளில் உள்ள 4 நிறுவனங்கள் மூலம் நிலக்கரி இறக்குமதி செய்யப்படுவதாக ரசீதுகள் தயாரிக்கப்பட்டுள்ளன. இந்தோனேசியாவில் 130 டாலருக்கு வாங்கப்படும் ஒரு டன் நிலக்கரி இந்தியாவிற்கு வந்து சேரும் போது இடைத்தரகர்கள் மூலம் 169 டாலராக விலை உயர்த்தப்படுகிறது என அந்த இதழ் தெரிவித்துள்ளது.