பாலத்தின் மீது ஏறி இளம்பெண் தற்கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மராட்டியத்தின் வடமேற்கு பகுதியான நவி மும்பையில் உள்ள வாஷி பகுதியில் புகழ்பெற்ற பாலம் உள்ளது. இரண்டு வழிப்பாதையான அந்த பாலம் மும்பையின் மிக நீளமான பாலமாக திகழ்கிறது. இந்நிலையில் இன்று காலை அந்த பாலத்திற்கு வந்த இளம்பெண் ஒருவர் திடீரென பாலத்தில் ஏறி தற்கொலை செய்துகொள்ளப் போவதாக கத்தியுள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பாலத்தின் வழியாக சென்றவர்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலிசார் அந்த பெண்ணுடன் பேசி சமாதானம் செய்ய முயற்சி செய்தனர். அவரிடம் பேசிகொண்டே அவரின் அருகில் சென்ற போலிசார் அவரின் கையை பற்றி அவரை கீழே விழாதபடி பிடித்துக்கொண்டனர். இந்த சம்பவத்தின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
ADVERTISEMENT
ADVERTISEMENT
இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பாலத்தின் வழியாக சென்றவர்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலிசார் அந்த பெண்ணுடன் பேசி சமாதானம் செய்ய முயற்சி செய்தனர். அவரிடம் பேசிகொண்டே அவரின் அருகில் சென்ற போலிசார் அவரின் கையை பற்றி அவரை கீழே விழாதபடி பிடித்துக்கொண்டனர். இந்த சம்பவத்தின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
Show comments