Advertisment

குழந்தைகள் முன்னிலையில் பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை; ஆசிட் ஊற்றிய கொடூர நபர்!

Woman incident in front of children and  escaped by pouring acid by A person in assam

குழந்தைகள் முன்னிலையில் பாலியல் வன்கொமை செய்து ஆசிட் வீசிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

அசாம் மாநிலம், கச்சார் மாவட்டத்தை சேர்ந்தவர் பாதிக்கப்பட்ட 30 வயது பெண். இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில், கடந்த 22ஆம் தேதி பெண்ணின் கணவர் வீட்டில் இல்லாத நேரத்தின் போது பக்கத்து வீட்டுக்காரரான சாரதி (28) என்பவர், வீட்டிற்கு அத்துமீறு புகுந்துள்ளார்.

Advertisment

அங்கு, அந்த பெண்ணை அவரது குழந்தைகள் முன்னிலையில் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மேலும், அந்த பெண் மீது ஆசிட் வீசி அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். வீடு திரும்பிய கணவன், மனைவியின் கை, கால்கள் கட்டப்பட்டிருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

இதையடுத்து, தனது மனைவியை மீட்டு சில்சார் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார். அந்த பெண்ணின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து புகார் அளித்ததை தொடர்ந்து, வழக்குப்பதிவு செய்த போலீசார் தப்பியோடிய குற்றவாளி சாரதியை தீவிரமாக தேடி வருகின்றனர். குழந்தைகள் முன்னிலையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Assam incident police
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe