Skip to main content

சென்னையை சேர்ந்த பெண் அசாமில் அடித்துக் கொலை; ராணுவ கர்னல் கைது

Published on 26/02/2023 | Edited on 26/02/2023

 

Woman from Chennai beaten  in Assam; Army colonel arrested

 

தமிழகத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் அசாமில் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் ராணுவ அதிகாரியிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

கடந்த பிப்ரவரி 15ஆம் தேதி காலை அசாமில் சங்காச்சார் என்ற இடத்தில் 30 வயது மதிக்கத்தக்க பெண்ணின் உடல் பிளாஸ்டிக் பையில் கிடந்தது. அதனைக் கைப்பற்றிய அசாம் போலீசார் விசாரணை மேற்கொண்டதில் உயிரிழந்தவர் சென்னை அடையாறை சேர்ந்த வந்தனா ஸ்ரீ என்பதை உறுதி செய்தனர். இதுதொடர்பாக போலீசார் பல்வேறுகட்ட விசாரணை மேற்கொண்டதில் இந்த சம்பவத்தில் அசாம், ஜோன்ஜ்பூர் மாவட்டத்தில் உள்ள ராணுவ அலுவலகத்தில் கர்னல் அந்தஸ்தில் உள்ள அதிகாரி இந்த கொலையை செய்தது தெரியவந்தது.

 

அதனடிப்படையில் அவரை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர். அதில் அப்பெண்ணுடன் முறையற்ற தொடர்பிலிருந்த பொழுது ஏற்பட்ட பிரச்சனை காரணமாக கையில் அணிந்திருந்த காப்பால் தாக்கி கொலை செய்தது தெரியவந்தது. கொலையை மறைப்பதற்காக சடலத்தை பிளாஸ்டிக் பையில் சுற்றி வீசியதும் தெரியவந்தது. மேலும் வந்தனா ஸ்ரீயின் குழந்தையை ரயில் மூலம் கொல்கத்தா அழைத்துச் சென்று அங்கு ஒரு பகுதியில் விட்டு விட்டு சென்றதும் தெரிய வந்துள்ளது. செல்போன் உரையாடல் மூலம் இதையனைத்தையும் உறுதிசெய்த போலீசார் தொடர்ந்து அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பாபநாசம் பட பாணியில் கொலை; போலீசாரே அதிர்ந்த சம்பவம்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Papanasam film style incident; The incident shocked the police

கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ளது மாதாரி குளம் கிராமம். அங்கே உள்ள பூங்கா பகுதியில் வசித்து வந்தவர் ரோஷம்மா. கடந்த புதன்கிழமை அன்று ரோஷம்மா திடீரென மாயமானார். இதனால் பல இடங்களில் அவரை உறவினர்கள் தேடி வந்தனர். எங்கு தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியாததால் இறுதியாக காவல் நிலையத்தில் உறவினர்கள் புகார் அளித்தனர்.

போலீசார் ரோஷம்மா தொடர்பான நபர்களிடம் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் ரோசம்மாவின் உறவினர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது ரோசம்மாவின் சகோதரர் பென்னி என்பவரிடத்தில் போலீசார் விசாரித்த போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் கொடுத்தார். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவரிடம் விசாரணையை தீவிரப்படுத்தினர். அப்பொழுது சுத்தியலால் ரோசம்மாவை அடித்து கொலை செய்து வீட்டு வளாகத்திலேயே புதைத்தது தெரிய வந்தது.

புதைத்த இடத்தை பென்னி அடையாளம் காட்டிய நிலையில் ரோஷம்மாவின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டது. கைப்பற்றப்பட்ட சடலமானது பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. கொலைக்கான காரணம் குறித்து பெண்ணிடம் விசாரித்த போது கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த ரோசம்மாவுக்கும் பென்னிற்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் கடந்த புதன்கிழமை ஏற்பட்ட தகராறின் போது ஆத்திரத்தில் சுத்தியலால் ரோசம்மாவை அடித்து கொலை செய்து வீட்டு வளாகத்திலேயே புதைத்தது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. பாபநாசம் பட பாணியில் நடந்த இந்தக் கொலை போலீசாருக்கே அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.

Next Story

பிரான்ஸ் வீரர்களுக்கு தற்காப்புக்கலைகளை கற்றுக்கொடுக்கும் தமிழக வீரர்கள்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Tamil Nadu players teaching martial arts to French players

மாமல்லபுரத்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் சர்வதேச மஞ்சூரியா குங்ஃபூ தற்காப்புக் கலையின் சார்பில் இந்தோ பிரான்ஸ் தற்காப்புக் கலை சிறப்பு பயிற்சி முகாம் பிரான்ஸில் நடைபெற்று வருகிறது.

பிரான்ஸ் நாட்டின் ஃபெவ்ரி நகரில் மாஸ்டர் ஷி ஷிஃபூ மேத்யூ  தலைமையில் ஏப்ரல் 22 துவங்கி 28 வரை 7 நாட்கள் நடைபெற்று வரும் இந்தச் சிறப்பு பயிற்சி முகாமில் கல்பாக்கம் அணுபுரத்தைச் சேர்ந்த மாஸ்டர் சந்தோஷ், திண்டுக்கல் மாவட்டம் பழனி நாகூரைச் சேர்ந்த யோகா மாஸ்டர் பிரகாஷ் ஆகிய இருவரும், பிரான்ஸ் நாட்டு வீரர்களுக்கு  குங்ஃபூ தற்காப்புக் கலை, தெக்கன் களரி சிலம்பக்கலை, பதஞ்சலி ஹத யோகா, ஆகியவற்றை கற்பித்து வருகின்றார்கள். நேற்று யோகா குறித்து விளக்கம் அளித்து அதை செய்தும் காண்பித்துள்ளார்கள்.