Skip to main content

சபரியில் யானை மிதித்து தமிழக பக்தர் பலி!

Published on 09/01/2019 | Edited on 09/01/2019
elephant

 

சபாிமலையில் யானை மிதித்து தமிழக பக்தா் ஒருவா் பலியான சம்பவம்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

            

 

சபாிமலையில் மண்டல மகர கால சீசன் நடந்து வருகிறது. ஆரம்பத்தில் சபாிமலைக்கு வரக்கூடிய பக்தா்கள் குறைவாக இருந்தாலும் தற்போது பக்தா்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகாித்து வருகிறது. 

               

 

இந்த நிலையில் சேலத்தை சோ்ந்த பரமசிவம்(35) உட்பட அய்யப்பா பக்தா்கள் சிலா் இருமுடிகட்டிக்கொண்டு தேனி கம்பம் வழியாக சபாிமலைக்கு சென்றனா். அவா்கள் இன்று அதிகாலையில் எாிமேலி பம்பை கானக பாதையில் நடந்து சென்று கொண்டிருக்கும் போது முகுழி தீா்த்தம் வள்ளி தோடு அருகே மறைவாக நின்று கொண்டிருந்த யானை ஒன்று திடீரென்று பரமசிவனை தும்பி கையால் தூக்கி காலால் மிதித்தது. 

             

இதைப்பாா்த்து அலறிய அவருடன் வந்த பக்தா்கள் சத்தம் போடவே பரமசிவனை ரத்த வெள்ளத்தில் அங்கே போட்டு விட்டு காட்டுக்குள் ஓடியது. உடனே அங்கு வந்த வனத்துறையினரும் மற்ற பக்தா்களும் சோ்ந்து பரமசிவனை தூக்கி பம்பை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பாிதாபமாக அவா் உயிாிழந்தாா்.  

           

ஜனவாி மாதங்களில் இதே வழியாக தான் யானைகள் கும்பலாக  செல்வது வழக்கமாக  கொண்டுள்ளது.  அதனால் இந்த மாதங்களில் இந்த வழியாக வரக்கூடிய பக்தா்கள் கவனமாக செல்ல ஏற்கனவே வனத்துறை எச்சாித்துள்ளது.

            

 

இதே போல் தான் கடந்த ஆண்டும் இதே நாளில் இந்த வழியாக வந்த சென்னையை சோ்ந்த அய்யப்பா பக்தா் நிரேஷ் குமாா் யானை மிதித்து உயிாிழந்தாா் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தொழுகையில் ஈடுபட்ட மாணவர்கள் மீது கொடூர தாக்குதல்; வைரலாகும் வீடியோ

Published on 17/03/2024 | Edited on 17/03/2024
Attack on students engaged in prayer; A viral video

அண்மையில் டெல்லியில் சாலையில் தொழுகையில் ஈடுபட்டிருந்த இஸ்லாமியர்களை போலீஸ் அதிகாரி ஒருவர் காலால் எட்டி உதைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், மற்றொரு கொடூர தாக்குதல் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத்தில் தொழுகையில் ஈடுபட்ட மாணவர்கள் மீது கொலை வெறி தாக்குதல் நடத்திய பரபரப்பு வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி கண்டனத்தை பெற்று வருகிறது. குஜராத் பல்கலைக்கழக விடுதியில் தொழுகையில் ஈடுபட்ட வெளிநாட்டு மாணவர்கள் மீது கொடூர தாக்குதல் நடத்தப்பட்டது தற்போது தெரியவந்துள்ளது. இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளன. வெளிநாட்டு மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய கும்பல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல தரப்பில் இருந்தும் வலியுறுத்தப்பட்டு வருகிறது.

Next Story

யானைகள் தொடர் அட்டகாசம்; வனத்துறையை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்

Published on 16/03/2024 | Edited on 16/03/2024
 villagers staged a struggle against the forest department as the elephants continued to roar
கோப்புப்படம்

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த கள்ளப்பாடி, கே.வலசை, கணவாய் மோட்டூர், அனுப்பு, டிபி பாளையம், உள்ளிட்ட பகுதிகள் தமிழக ஆந்திர எல்லையை ஒட்டி உள்ளது. இங்கு தொடர்ந்து யானைகள்  விவசாய நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகிறது.

மேலும் பயிர்களை தொடர்ந்து யானைகள் சேதப்படுத்தி வருவதாகவும் அதை கட்டுக்குள் கொண்டு வர வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் சேதம் அடைந்து வரும் பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கக் கோரியும் கிராம மக்கள் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் குடியாத்தம் - பரதராமி சாலையில் கணவாய் மோட்டூர் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர் இதனால் குடியாத்தம் பரதராமி சாலையில் சாலை போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது

இதனையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பரதராமி காவல்துறையினர் மற்றும் குடியாத்தம் வனத்துறையினர், மேற்கொண்ட பேச்சுவார்த்தையில் உரிய நடவடிக்கை எடுப்பதாக வனத்துறையினர்  உறுதி அளித்தனர். இதனையடுத்து கிராம மக்கள் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.