Skip to main content

ஆட்சியில் உள்ள முதல்வரை இறந்தார் என காட்டும் விக்கிபீடியா!

Published on 14/03/2018 | Edited on 14/03/2018
manoharparrikar

 

இந்தியாவின் மிகச்சிறிய மாநிலமான கோவாவின் முதலமைச்சராக இருப்பவர் மனோகர் பாரிக்கர். இவர் இறந்த நாள் இன்று என விக்கிபீடியா வின் மாதந்திர நாள் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவா மாநிலத்தை சேர்ந்தவர் மனோகர் பாரிக்கர். 2014ல் பாஜக மத்தியில் ஆட்சி அமைத்தபோது, பிரதமர் மோடி அமைச்சரவையில் பாதுகாப்பு துறை அமைச்சராக பதவி வகித்தார் மனோகர்பாரிக்கர். 2017ல் கோவா மாநிலத்தில் நடைபெற்ற சட்டமன்ற பொதுத்தேர்தலில் பாஜக குறைந்த இடங்களில் வெற்றி பெற்றாலும் தனது அதிகாரத்தை பயன்படுத்தி கோவா மாநிலத்தில் ஆட்சியமைத்தது. அப்போது மத்திய அமைச்சராக இருந்த மனோகர்பாரிக்கர், அந்த பதவியை ராஜினாமா செய்துவிட்டு கோவா மாநிலத்தின் முதல்வராக இரண்டாவது முறையாக 2017 மார்ச் மாதம் பதவியேற்றார். தற்போது முதல்வராக பதவி வகித்து வருகிறார். குடும்பத்துடன் கோவாவில் வசித்து வருகிறார்.


 

wiki



இந்நிலையில் விக்கிபீடியாவின் தளத்தின் தமிழ் பக்கத்தில் இன்று மார்ச் 14ந்தேதி இறந்தவர்கள் பட்டியலில் கோவா முதல்வர் மனோகர் பரிக்கர் பெயரும் இடம்பெற்றுள்ளது. ஒவ்வொரு தினத்தை பற்றிய தகவல்களை விக்கிபீடியா வழங்கும். அதன்படி இன்று உலகத்தில் நடைபெற்ற முக்கிய சம்பவங்கள், உலகத்தில் முக்கியமானவர்களின் பிறந்தநாள், இறந்தநாள் பற்றிய தகவல்கள் இடம்பெறும். இறந்தவர்கள் வரிசையில் 1955ல் மனோகர்பாரிக்கர் – இந்திய அரசியல்வாதி, கோவா முதல்வர் என வெளியிடப்பட்டுள்ளது.

அந்த பெயரை க்ளிக் செய்து உள்ளே சென்றால் கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் பற்றிய தகவல்கள் கிடைக்கின்றன. 1955 டிசம்பர் 13ந்தேதி பிறந்தார் என்றும், அவரது அரசியல், குடும்பம் பற்றிய தகவல்கள் அதில் கிடைக்கின்றன. அவர் இறந்த ஆண்டு பற்றிய குறிப்பு அதில்யில்லை என்பது குறிப்பிடதக்கது. தவறுதலாக பதிவானதா அல்லது திட்டமிட்டே யாராவது அப்படி உருவாக்கினார்களா என்பது தெரியவில்லை.

சார்ந்த செய்திகள்

Next Story

தேர்தல் பணிமனையில் மோதல்; பாஜகவினர் மீது வழக்குப்பதிவு!

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Case against BJP for Election Workshop 

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி கடந்த 19 ஆம் தேதி (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதில் முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

இந்நிலையில் மக்களவைத் தேர்தலுக்காக தொடங்கப்பட்ட வாட்ஸ்அப் குரூப்பில் மத்திய சென்னை மாவட்ட வர்த்தக பிரிவு செயலாளர் மூர்த்திக்கும், அண்ணா நகர் வடக்கு மண்டல பாஜக தலைவர் ராஜ்குமாருக்கும் இடையே தேர்தல் பணியில் சுணக்கமாக செயல்பட்டது தொடர்பாக மோதல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து மத்திய சென்னை தொகுதி பாஜக தேர்தல் பணிமனையில் நேற்று முன்தினம் (26.04.2024) மூர்த்தியும், ராஜ்குமாரும் ஒருவரை ஒருவர் நேரில் சந்தித்தபோது தாக்கிக்கொண்டுள்ளனர்.

அதனைத் தொடர்ந்து இருவரும் தனித்தனியாக அளித்த புகாரின் பேரில் அமைந்தகரை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் இந்த வழக்கு விசாரணைக்காக இருவரும் நாளை (29.04.2024) நேரில் ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. மத்திய சென்னை தொகுதியில் உள்ள பாஜக தேர்தல் பணிமனையில் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்ட சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

ஸ்ட்ராங் ரூம் சிசிடிவி கேமராக்கள் செயலிழப்பு; நீலகிரியில் பரபரப்பு

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Malfunction of strong room CCTV cameras; Excitement in the Nilgiris

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது.
 

தமிழகத்தில் தேர்தல் மக்களவை தேர்தல் முடிந்திருக்கும் நிலையில் வாக்கு பெட்டிகள் அனைத்தும் ஸ்ட்ராங் ரூம் எனப்படும் ஐந்து அடுக்கு பாதுகாப்பு அறைக்குள் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நீலகிரியில் ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் திடீரென செயலிழந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

நீலகிரி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளது. 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அருகிலுள்ள அறையிலிருந்து கண்காணிப்பதற்காக அனைத்து அரசியல் கட்சியினருக்கும் பொதுவாக ஒரு அறை ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் இன்று மாலை திடீரென 173 சிசிடிவி கேமராக்கள் செயலிழந்தது. பின்னர் சுமார்  20 நிமிடங்களுக்கு பிறகு மீண்டும் சிசிடிவி கேமராக்கள் வழக்கம் போல் செயல்பட தொடங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

அதீத வெப்பம் காரணமாக சிசிடிவி கேமராக்கள் செயலிழந்திருக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையில் சிசிடிவி காட்சிகள் திடீரென செயலிழந்தது அரசியல் கட்சியினர் இடையே பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. நீலகிரியில் திமுக சார்பில் ஆ.ராசாவும், அதிமுக கூட்டணி சார்பில் லோகேஷ் தமிழ்ச்செல்வனும், பாஜக கூட்டணியில் எல்.முருகனும், நாம் தமிழர் கட்சி சார்பாக ஜெயக்குமாரும் போட்டியிடுகின்றனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.