Skip to main content

முதலிரவு நடக்காததை வெளியே சொன்ன மனைவி; புதுப்பெண்ணையும் மாமியாரையும் வெட்டிக் கொலை செய்த கணவன்

Published on 16/03/2023 | Edited on 16/03/2023

 

nn

 

முதலிரவு நடக்காததை மனைவி வெளியே சொன்னதால் ஆத்திரப்பட்ட கணவர் புதுமணப் பெண்ணை வெட்டிக் கொன்றதோடு அவரது அம்மாவையும் வெட்டிக் கொலை செய்த சம்பவம் ஆந்திராவில்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

ஆந்திராவின் கர்னூல் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சரவணன். பி.டெக் படித்துள்ள சரவணன் ஹைதராபாத்தில் உள்ள ஒரு வங்கியில் ஊழியராகப் பணியாற்றி வந்துள்ளார். சரவணனுக்கும் தெலுங்கானாவில் வனபாத்தி பகுதியைச் சேர்ந்த இருபது வயது ருக்மணி என்ற பெண்ணுக்கும் கடந்த மாதம் ஒன்றாம் தேதி திருமணம் நடைபெற்றது. திருமணத்தையடுத்து அன்று இரவே மணப்பெண் ருக்மணியின் வீட்டில் முதலிரவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் சரவணன் மறுத்ததால் முதலிரவு நடைபெறவில்லை. தொடர்ந்து சில நாட்கள் சரவணன் அதற்கு மறுப்பு தெரிவித்த நிலையில் அதிர்ச்சியடைந்த மணப்பெண் இதனை அவரது பெற்றோர்களிடம் தெரிவித்துள்ளார்.

 

மணப்பெண்ணின் பெற்றோர்களும் இதனால் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்த தகவல் பெண்ணின் உறவினர்களுக்கு எப்படியோ கசிய அவர்கள் சரவணனை கேலி கிண்டல் செய்ததாகக் கூறப்படுகிறது. மேலும் சரவணனை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று மருத்துவ பரிசோதனையும் செய்துள்ளனர். இதனை அறிந்து சரவணனின் பெற்றோர் ஆத்திரம் அடைந்துள்ளனர்.

 

இந்நிலையில் தனது மனைவி ருக்மணியை மாடிக்கு அழைத்துச் சென்ற கணவன் சரவணன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து அவரை வெட்டியுள்ளார். அதேபோல் ருக்மணியின் தந்தை வெங்கடேஷ்வரலு, அவரது தாயார் ரமாதேவி ஆகியோரை சரவணனின் தந்தை பிரசாத் கத்தியால் சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் வெங்கடேஷ்வரலு ரத்தக் காயத்துடன் தப்பி ஓடி விட்டார். இந்தச் சம்பவத்தில் மணப்பெண் ருக்மணியும் அவரது தாயார் ரமாதேவியும் சம்பவ இடத்திலேயே கொலை செய்யப்பட்டனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் சரவணன் மற்றும் அவரது தந்தை பிரசாத் உள்ளிட்ட இந்தக் கொலை தொடர்பாக பலரை கைது செய்துள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தனியாக இருந்த மூதாட்டிக்கு நேர்ந்த கொடூரம்; கேபிள் ஆபரேட்டருக்கு போலீஸ் வலை

Published on 30/01/2024 | Edited on 30/01/2024
The old woman who was alone at home was brutalized; Police net for cable operator

வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியின் கழுத்தை துண்டால் நெரித்து நகைகளைக் கொள்ளையடித்துச் சென்ற சம்பவத்தில் கேபிள் ஆபரேட்டரை போலீசார் தேடி வருகின்றனர். ஆந்திராவில் இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

ஆந்திர மாநிலம் கௌரவ பள்ளம் பூங்கா அருகே வசித்து வருபவர் மூதாட்டி லட்சுமி. இவர் மட்டும் தனியாக வீட்டில் வசித்து வந்த நிலையில், கேபிள் டிவி ஆபரேட்டர் கோவிந்த் நல்ல முறையில் பழகி வந்துள்ளார். வீட்டில் மூதாட்டி லட்சுமி மட்டும் தனியாக இருப்பதை அறிந்த கோவிந்த் அடிக்கடி வீட்டுக்கு வந்து உதவிகளை செய்வது போல் நடித்து வந்துள்ளார்.

இந்நிலையில் திடீரென வீட்டுக்கு வந்த கேபிள் ஆபரேட்டர் கோவிந்த், சோபாவில் மூதாட்டி அமர்ந்திருந்தபோது பின்புறமாகச் சென்று கையில் இருந்த துண்டால் கழுத்தை நெருக்கியுள்ளார். மூதாட்டி கத்திக் கூச்சலிட முயன்றும் விடாமல் நெருக்கமாகக் கழுத்தை நெருக்கியுள்ளார். இதில் மூதாட்டி மயக்கம் அடைந்தார். ஆனால் மூதாட்டி இறந்து விட்டதாக நினைத்த கோவிந்த், அவரிடம் இருந்த பத்து சவரன் நகையைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளார்.

மயக்கம் தெளிந்த மூதாட்டி இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தார். வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் கேபிள் ஆபரேட்டர் மூதாட்டியின் கழுத்தை நெரிக்கும் அந்த பரபரப்பு காட்சிகள் இடம் பெற்ற நிலையில், அதை ஆதாரமாக வைத்து கேபிள் ஆபரேட்டர் கோவிந்தை போலீசார் தேடி வருகின்றனர்.

Next Story

காந்தாரா பாணியில் நடனமாட முயன்று தீ விபத்து

Published on 02/10/2023 | Edited on 02/10/2023

 

Fire while trying to dance in Gandhara style

 

அண்மையில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற காந்தாரா திரைப்பட பாணியில் நடனம் ஆடியவர்கள் தீயில் சிக்கிக் கொண்ட சம்பவம் ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

 

ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டம் எரகுண்ட்லா பகுதியில் விநாயகர் ஊர்வலம் நடைபெற்றது. அப்பொழுது நடன நிகழ்ச்சிகளுக்கும் விழக்குழுவால் ஏற்பாடு செய்யப்பட்டது. அப்பொழுது காந்தாரா திரைப்படத்தில் வரும் பஞ்சுருளி வேடம் அணிந்த இளைஞர்கள் நடனமாடிக் கொண்டிருந்தனர். தொடர்ந்து காந்தாரா படத்தில் வருவதைப் போலவே நெருப்பிற்கு நடுவே நடனமாட ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்காக அவர்களை சுற்றி நாலாபுறமும் வட்டமாக பெட்ரோல் ஊற்றப்பட்டு தீ வைக்கப்பட்டது. அப்பொழுது திடீரென எரிந்து கொண்டிருந்த தீயானது நடனமாடியவர்களின் உடைகளை பற்றி எரிய ஆரம்பித்தது. நடனம் ஆடியவர்கள் மட்டுமல்லாது சுற்றி நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த சிறுவர்களும் தீயில் விழுந்தனர். இந்த விபத்தில் தீக்காயமடைந்த எட்டு பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் 2 பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகளும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.