Advertisment

ஹோட்டலுக்கு அழைத்து செல்லாததால் மனைவி தூக்கிட்டு தற்கொலை!

கணவன் ஹோட்டலுக்கு அழைத்து செல்லாததால் மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் மராட்டியத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மராட்டிய மாநிலம் நாக்பூரில் வசித்து வருபவர் ஹேமந்த் குமார். இவருக்கு 22 வயதில் மனைவியும், ஒரு வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளது. ஹோமந்த் குமார் நேற்று முன்தினம் அலுவலகம் முடிந்து வீட்டிற்கு திரும்பியதும் அவருடைய மனைவி தான் வீட்டில் எதுவும் சமைக்கவில்லை என்றும், அதனால் ஹோட்டலுக்கு சென்று சாப்பிடலாம் என்று கூறியுள்ளார்.

Advertisment

ஆனால், குழந்தைக்கு உடல்நிலை சரியில்லாத போது நாம் ஹோட்டலுக்கு செல்ல கூடாது என்றும், வேறு ஒருநாள் செல்லலாம் என்று ஹேமந்த் குமார் கூறியுள்ளார். இதனால் கோபமான அவர், இரவு ஹேமந்த் குமார் தூங்கியதும் மின்விசிறியில் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

sucide
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe