Skip to main content

கணவனுடன் கையும் களவுமாக சிக்கிய ரகசியகாதலி; காலணியால் சரமாரியாக கவனித்த மனைவி!! வைரலாகும் வீடியோ!

Published on 25/07/2019 | Edited on 26/07/2019

லட்ச கணக்கில் செலவு செய்து பிரம்மாண்டமாக திருமணம் நடந்த நிலையில் லட்சக்கணக்கில் வரதட்சணையும் வாங்கிக்கொண்ட மென் பொறியாளர் ஒருவர் கட்டிய மனைவியை தவிக்க விட்டுவிட்டு தன்னுடன் அலுவலகத்தில் பணியாற்றும் பெண்ணுடன் ஏற்பட்ட ரகசிய காதலால் அடுக்குமாடி குடியிருப்பில் தனியாக இருவரும் கள்ள உறவில் ஈடுபட்டு கொண்டிருக்க, மின்பொறியாளரை கையும் களவுமாக பிடித்த மனைவி கணவனையும், அந்த இளம் பெண்ணையும் சரமாரியாக காலணியால் கவனித்த சம்பவம் தொடர்பான வீடியோக்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

viral video form andra


ஆந்திர மாநிலம் ஹைதராபாத்தில், கொட்டகொம்புகூடம் பகுதியைச் சேர்ந்த மென்பொறியாளர் லட்சுமணன். இவருக்கும் சுஜன்யா என்ற பெண்ணுக்கும் இரண்டு வருடங்களுக்கு முன்பு லட்சக்கணக்கான ரூபாய் செலவு செய்து அவரது பெற்றோர்கள் திருமணம் செய்து வைத்துள்ளனர். இந்தநிலையில் மின் பொறியாளரான லட்சுமணன் தனது அலுவலகத்தில் பணியாற்றும் இளம் மென் பொறியாளரான அனுஷா என்ற பெண்ணுடன் ரகசியகாதல் வைத்து வந்துள்ளான். இந்நிலையில் மென் பொறியாளரான கணவர் லட்சுமணன் காணாமல் போக கணவனைத் தேடி அலைந்துள்ளார் மனைவி சுஜன்யா. 

 

viral video form andra viral video form andra

இந்நிலையில் லட்சுமணனும் அவரது அலுவலகத்தில் பணியாற்றும் ஒரு பெண்ணும் அடுக்குமாடி குடியிருப்பில் குடும்பம் நடத்திக் கொண்டிருப்பதாக தெரிய வர அந்த குடியிருப்புக்கு தனது உறவினர்களுடன் ரகசியமாக சென்ற சுஜன்யா லேசாக கதவை தட்டியுள்ளார். அப்பொழுது கதவை தட்டுவது தன்னுடைய மனைவி தான் என்று அறியாமல் கதவைத் திறந்த கணவன் லட்சுமணனை பார்த்த உடனேயே வெறி கொண்ட வேங்கையாக அடித்து துவம்சம் செய்து உள்ளார் மனைவி சுஜன்யா.

viral video form andra viral video form andra

அதேபோல் அவருடன் கள்ளக்காதலில் ஈடுபட்ட அனிஷா என்ற பெண்ணையும் சரமாரியாக முடியைப் பிடித்து வளைத்து போட்டு அடித்து கடுமையான வார்த்தைகளால் திட்டியுள்ளார். அதேபோல் அந்த பெண்ணின் முகத்திலும் காரி முகிழ்ந்துள்ளார்.

உடன் வந்திருந்த பெண்ணின் உறவினர்கள் மாப்பிள்ளையை முண்டா பனியனுடன் வெளியே இழுத்துச் சென்று வயிற்றிலேயே கும்மாங்குத்து வைத்தனர். அடுக்குமாடி குடியிருப்பில் ஒரு அறையில் நடந்த இந்த வெறிகொண்ட தாக்குதல் இறுதியில் நடு வீதிக்கு வந்தது. அதனையடுத்து கள்ளக்காதலில் ஈடுபட்ட இருவரையும் நடு வீதிக்கு அழைத்து வந்த மனைவி சுஜன்யா அந்தப் பெண்ணை நடுத்தெருவில் நிற்க வைத்து காலில் அணிந்திருந்த காலணியால் சரமாரியாக தாக்கி அவருடைய முகத்தில் காரி எச்சில் முகிழ்ந்து கண்டித்தார்.

viral video form andra viral video form andra

அதேபோல் அந்த பெண்ணின் உறவினர் ஒருவர் மாப்பிள்ளையை சரமாரியாக அடித்ததில் நிலைதடுமாறிய லட்சுமணன் கீழே விழ அவருக்கு அருகே சென்ற மனைவி இவையெல்லாம் உனக்கு தேவையா என்பது போல எச்சரித்தார். கள்ளக்காதலில் ஈடுபட்டு கையும் களவுமாகச் சிக்கிய கள்ளக் காதல் ஜோடிக்கு மனைவி கொடுத்த சரவெடி கச்சேரி அப்பகுதியில் தெருவில் நின்ற அனைவரின் மத்தியிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அது தொடர்பான வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'அரசியல் வேறுபாடு வன்முறையாக மாறக்கூடாது'- கல்வீச்சுக்கு முதல்வர் கண்டனம்

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
'Political difference should not turn into violence'- CM condemns stone pelting

ஆந்திராவில் தற்போதைய முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி மீது தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கல் வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்தியாவில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. இதனால் நாடு முழுவதும் அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் ஆந்திராவில் மக்களவைத் தேர்தலுடன் சட்டமன்றத் தேர்தலும் வர இருக்கிறது. இதனால் அங்கு அரசியல் கட்சிகளால் தீவிர பரப்புரை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி ஆந்திர மாநில சட்டமன்றத் தேர்தலில் ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் தனித்து களம் காண்கிறது. இதனையொட்டி ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் நடந்த தேர்தல் பரப்புரையில் ஜெகன் மோகன் ரெட்டி மீது கல்வீசப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தாக்குதலில் காயமடைந்த ஜெகன்மோகன் ரெட்டிக்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டதாக முதல்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்நிலையில் இந்தச் சம்பவத்திற்குத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைத்தள பதிவில், 'ஆந்திர முதல்வர் மீது கல் வீசப்பட்டதைக் கண்டிக்கிறேன். அரசியல் வேறுபாடுகள் வன்முறையாக மாறக்கூடாது. ஜனநாயக செயல்பாட்டில் ஈடுபடும் போது நாகரீகத்தையும், பரஸ்பர மரியாதையையும் நிலைநாட்டுவோம். அவர் விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன்' எனத் தெரிவித்துள்ளார்.

Next Story

தொழுகையில் ஈடுபட்ட மாணவர்கள் மீது கொடூர தாக்குதல்; வைரலாகும் வீடியோ

Published on 17/03/2024 | Edited on 17/03/2024
Attack on students engaged in prayer; A viral video

அண்மையில் டெல்லியில் சாலையில் தொழுகையில் ஈடுபட்டிருந்த இஸ்லாமியர்களை போலீஸ் அதிகாரி ஒருவர் காலால் எட்டி உதைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், மற்றொரு கொடூர தாக்குதல் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத்தில் தொழுகையில் ஈடுபட்ட மாணவர்கள் மீது கொலை வெறி தாக்குதல் நடத்திய பரபரப்பு வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி கண்டனத்தை பெற்று வருகிறது. குஜராத் பல்கலைக்கழக விடுதியில் தொழுகையில் ஈடுபட்ட வெளிநாட்டு மாணவர்கள் மீது கொடூர தாக்குதல் நடத்தப்பட்டது தற்போது தெரியவந்துள்ளது. இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளன. வெளிநாட்டு மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய கும்பல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல தரப்பில் இருந்தும் வலியுறுத்தப்பட்டு வருகிறது.