Skip to main content

கணவனுடன் கையும் களவுமாக சிக்கிய ரகசியகாதலி; காலணியால் சரமாரியாக கவனித்த மனைவி!! வைரலாகும் வீடியோ!

Published on 25/07/2019 | Edited on 26/07/2019

லட்ச கணக்கில் செலவு செய்து பிரம்மாண்டமாக திருமணம் நடந்த நிலையில் லட்சக்கணக்கில் வரதட்சணையும் வாங்கிக்கொண்ட மென் பொறியாளர் ஒருவர் கட்டிய மனைவியை தவிக்க விட்டுவிட்டு தன்னுடன் அலுவலகத்தில் பணியாற்றும் பெண்ணுடன் ஏற்பட்ட ரகசிய காதலால் அடுக்குமாடி குடியிருப்பில் தனியாக இருவரும் கள்ள உறவில் ஈடுபட்டு கொண்டிருக்க, மின்பொறியாளரை கையும் களவுமாக பிடித்த மனைவி கணவனையும், அந்த இளம் பெண்ணையும் சரமாரியாக காலணியால் கவனித்த சம்பவம் தொடர்பான வீடியோக்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

viral video form andra


ஆந்திர மாநிலம் ஹைதராபாத்தில், கொட்டகொம்புகூடம் பகுதியைச் சேர்ந்த மென்பொறியாளர் லட்சுமணன். இவருக்கும் சுஜன்யா என்ற பெண்ணுக்கும் இரண்டு வருடங்களுக்கு முன்பு லட்சக்கணக்கான ரூபாய் செலவு செய்து அவரது பெற்றோர்கள் திருமணம் செய்து வைத்துள்ளனர். இந்தநிலையில் மின் பொறியாளரான லட்சுமணன் தனது அலுவலகத்தில் பணியாற்றும் இளம் மென் பொறியாளரான அனுஷா என்ற பெண்ணுடன் ரகசியகாதல் வைத்து வந்துள்ளான். இந்நிலையில் மென் பொறியாளரான கணவர் லட்சுமணன் காணாமல் போக கணவனைத் தேடி அலைந்துள்ளார் மனைவி சுஜன்யா. 

 

viral video form andra viral video form andra

இந்நிலையில் லட்சுமணனும் அவரது அலுவலகத்தில் பணியாற்றும் ஒரு பெண்ணும் அடுக்குமாடி குடியிருப்பில் குடும்பம் நடத்திக் கொண்டிருப்பதாக தெரிய வர அந்த குடியிருப்புக்கு தனது உறவினர்களுடன் ரகசியமாக சென்ற சுஜன்யா லேசாக கதவை தட்டியுள்ளார். அப்பொழுது கதவை தட்டுவது தன்னுடைய மனைவி தான் என்று அறியாமல் கதவைத் திறந்த கணவன் லட்சுமணனை பார்த்த உடனேயே வெறி கொண்ட வேங்கையாக அடித்து துவம்சம் செய்து உள்ளார் மனைவி சுஜன்யா.

viral video form andra viral video form andra

அதேபோல் அவருடன் கள்ளக்காதலில் ஈடுபட்ட அனிஷா என்ற பெண்ணையும் சரமாரியாக முடியைப் பிடித்து வளைத்து போட்டு அடித்து கடுமையான வார்த்தைகளால் திட்டியுள்ளார். அதேபோல் அந்த பெண்ணின் முகத்திலும் காரி முகிழ்ந்துள்ளார்.

உடன் வந்திருந்த பெண்ணின் உறவினர்கள் மாப்பிள்ளையை முண்டா பனியனுடன் வெளியே இழுத்துச் சென்று வயிற்றிலேயே கும்மாங்குத்து வைத்தனர். அடுக்குமாடி குடியிருப்பில் ஒரு அறையில் நடந்த இந்த வெறிகொண்ட தாக்குதல் இறுதியில் நடு வீதிக்கு வந்தது. அதனையடுத்து கள்ளக்காதலில் ஈடுபட்ட இருவரையும் நடு வீதிக்கு அழைத்து வந்த மனைவி சுஜன்யா அந்தப் பெண்ணை நடுத்தெருவில் நிற்க வைத்து காலில் அணிந்திருந்த காலணியால் சரமாரியாக தாக்கி அவருடைய முகத்தில் காரி எச்சில் முகிழ்ந்து கண்டித்தார்.

viral video form andra viral video form andra

அதேபோல் அந்த பெண்ணின் உறவினர் ஒருவர் மாப்பிள்ளையை சரமாரியாக அடித்ததில் நிலைதடுமாறிய லட்சுமணன் கீழே விழ அவருக்கு அருகே சென்ற மனைவி இவையெல்லாம் உனக்கு தேவையா என்பது போல எச்சரித்தார். கள்ளக்காதலில் ஈடுபட்டு கையும் களவுமாகச் சிக்கிய கள்ளக் காதல் ஜோடிக்கு மனைவி கொடுத்த சரவெடி கச்சேரி அப்பகுதியில் தெருவில் நின்ற அனைவரின் மத்தியிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அது தொடர்பான வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மதுபோதையில் பேருந்தின் கண்ணாடி உடைப்பு; போலீசார் விசாரணை

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Bus window breaking in drunkenness; Police investigation

உளுந்தூர்பேட்டை அருகே மது போதையில் சாலையில் சென்று கொண்டிருந்த அரசு பேருந்தின் கண்ணாடியை இரண்டு இளைஞர்கள் உடைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள ஒலையனூர், குணமங்கலம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள் உளுந்தூர்பேட்டை சாலையில் இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். அப்போது வாகனத்தில் யார் முந்தி செல்வது என்பதில் போட்டி ஏற்பட்டுள்ளது. மது போதையில் இருந்த இரண்டு இளைஞர்களும் ஒருவரை ஒருவர் முந்திக்கொண்டு சென்றனர். அப்போது அவர்கள் இருவரும் ஒலையனூர் பேருந்து நிலையம் அருகே சென்ற போது, போதை ஆசாமி இருவருக்கும் வாக்கு வாதம் முற்றியுள்ளது. இதனால் இளைஞர்கள் இருவரும் மோதிக்கொண்டுள்ளனர். அப்போது அந்த வழியாக வந்த எஸ்சிடிசி பேருந்தை தடுத்து நிறுத்திவிட்டு மோதலில் ஈடுபட்டனர்.

இதனால் ஆத்திரமடைந்த பேருந்து ஓட்டுனர் அந்தப் பேருந்தை அங்கிருந்து எடுத்துச் செல்ல முயன்றுள்ளார். உடனே அந்தப் போதை ஆசாமிகள் இருவரும் அங்கிருந்த கற்களை எடுத்து பேருந்தின் முன் கண்ணாடியை உடைத்தனர். மேலும் அவர்களுக்குள் சரமாரியாக தாக்கி கொண்டனர். இதில் மூன்று இளைஞர்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. கோயம்புத்தூரில் இருந்து 40க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றி வந்த அந்தப் பேருந்து கண்ணாடி உடைக்கப்பட்டதால் பேருந்து அங்கேயே நிறுத்தப்பட்டது.

இது தொடர்பாக குணமங்கலம், ஒலையனூர் பகுதிகளில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மது போதையில் சாலையில் சென்ற பேருந்தை வழிமறித்து கண்ணாடியை உடைத்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

கஞ்சா வியாபாரியைப் பிடிக்கச் சென்ற போலீசார் மீது கொலைவெறி தாக்குதல்; வெளியான பரபரப்பு காட்சிகள்

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
A attack on the police who went to catch a ganja dealer; Exciting scenes released

சென்னை கண்ணகி நகர் சுனாமி நகர்  குடியிருப்பு 64ஆவது பிளாக்கில் வசித்து வரும் சரித்திர பதிவேடு குற்றவாளியாக உள்ளவர் உமாபதி. கஞ்சா விற்பனை செய்த வழக்கில் இதற்கு முன்பு கைது செய்யப்பட்டிருந்தார். விசாரணைக்குப் பிறகு சிறைக்குச் சென்று விட்டு வெளியே வந்த அவர், அந்தப் பகுதியைச் சேர்ந்த இரண்டு இளைஞர்களைக் கத்தியால் வெட்டி இருக்கிறார். இரண்டு தினங்களுக்கு முன்பு இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

கஞ்சா விற்பனை தொடர்பாக போலீசாருக்கு தகவல் கொடுத்ததால் இரண்டு பேரை அவர் கத்தியால் வெட்டியுள்ளார். இதுகுறித்து கண்ணகி நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து இன்று மாலை கைது செய்ய முயன்றனர். அப்போது அங்கிருந்த கற்களை எடுத்து போலீசாரை கொடூரமாக தாக்கியுள்ளார். இதனால் அதிர்ச்சியான பொதுமக்கள், போலீசாரைக் காப்பாற்ற முயன்றனர். உடனே கடுப்பான அந்தக் கஞ்சா ஆசாமி, அந்தப் பகுதி மக்களுக்கும் மிரட்டல் விடுத்தபடி அங்கிருந்து தப்பித்துச் சென்றுள்ளார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.