Advertisment

கணவருக்கு 'ஐ லவ் யூ' என மெசேஜ் அனுப்பி விட்டு மனைவி தற்கொலை!

வ

Advertisment

கணவரின் பிரிவைத்தாங்க முடியாமல் மனைவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் டெல்லியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியைச் சேர்ந்தவர் நேகா. திருமணம் ஆன இவர் கணவருடன் வசித்து வந்தார். இந்நிலையில், சில ஆண்டுகளாகக் கணவருடன் அடிக்கடி சண்டை வந்ததால் மன வருத்தம் ஏற்பட்டு இருந்துள்ளார். ஒரு கட்டத்தில் கணவன், மனைவி இருவரும் பிரிந்துவிடலாம் என்று முடிவெடுத்து விவகாரத்துக் கோரியுள்ளனர். இதற்காக வழக்கறிஞர்களைப் பார்த்து பரஸ்பரம் தங்களின் முடிவைத்தெரிவித்த அவர்கள், விவகாரத்து வரும் நாளை எதிர்பார்த்துக் காத்திருந்தனர்.

விவகாரத்து கோரிய சில நாட்களில் இருந்து நேகா கடும் மனச்சிதைவில் இருந்துள்ளார். சரியாகச் சாப்பிடாமல், கணவரிடம் பேச இயலாமல் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்துள்ளார். இதனால் இன்று காலை கணவருக்கு ஐ லவ் யூ என்று மெசேஜ் அனுப்பிவிட்டுக் குடியிருந்த வீட்டின் ஐந்தாவது மாடிக்குச் சென்று அங்கிருந்து குதித்து தற்கொலை செய்துள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே நேகா உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Husband and wife marriage
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe