Skip to main content

"காங்கிரஸில் இணைய மறுத்தது ஏன்?"- பிரசாந்த் கிஷோர் விளக்கம்!

Published on 26/04/2022 | Edited on 26/04/2022

 

"Why Congress refused Internet?" - Prasanth Kishore Explanation!

 

காங்கிரஸ் கட்சியின் இணைய தேர்தல் வியூக வல்லுநர் பிரசாந்த் கிஷோர் மறுத்துவிட்டதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் ரந்தீப் சுர்ஜேவாலா அறிவித்துள்ளார். 

 

தேர்தல் வியூக வல்லுநர் பிரசாந்த் கிஷோர் அண்மையில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்திய டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் கிட்டத்தட்ட நான்கு முறை நேரில் சந்தித்துப் பேசினார். அப்போது, காங்கிரஸ் கட்சியின் இணைவது, 2024- ஆம் ஆண்டு நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு தேர்தல் வகுப்பாளராகப் பணியாற்றுவது தொடர்பாக, தொடர்ந்து ஆலோசனையில் ஈடுபட்டு வந்தார். 

 

இந்த ஆலோசனையில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் மூத்த ஆலோசகர்களான கே.சி. வேணுகோபால், ப.சிதம்பரம், பிரியங்கா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்ட 10- க்கும் மேற்பட்ட தலைவர்கள் கலந்துக் கொண்டனர். இதன்பிறகு, கடந்த ஏப்ரல் 21- ஆம் தேதி அன்று 2024- ஆம் ஆண்டு நடைபெற உள்ள மக்களவைத் தேர்தல் குறித்த ஆய்வு அறிக்கையை சோனியா காந்தியிடம் பிரசாந்த் கிஷோர் வழங்கினார். 

 

இந்த ஆய்வு அறிக்கையை ஆராய்ந்து தாக்கல் செய்வதற்காக கட்சியின் மூத்த தலைவர்கள் கொண்டக் குழுவை அமைத்தார் சோனியா காந்தி. இதைத் தொடர்ந்து, அக்குழு சோனியா காந்தியிடம் அறிக்கையைச் சமர்பித்தது. 

 

இந்த நிலையில், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளரும், கட்சியின் அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளருமான ரந்தீப் சுர்ஜேவாலா தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "காங்கிரஸ் கட்சியில் இணைய தேர்தல் வியூக வல்லுநர் பிரசாந்த் கிஷோர் மறுத்துவிட்டார். காங்கிரஸ் கட்சியில் பிரசாந்த் கிஷோர் சேராவிட்டாலும், ஆலோசனைகள் வழங்கியதற்காக அவருக்கு நன்றி" என்று குறிப்பிட்டுள்ளார். 

 

பிரசாந்த் கிஷோரை காங்கிரஸ் கட்சியின் சேர்க்க அக்கட்சியில் உள்ள சில தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததாக தகவல் கூறுகின்றன. 

 

இது குறித்து விளக்கம் அளித்துள்ள பிரசாந்த் கிஷோர், "காங்கிரஸ் கட்சிக்கு என்னை விட தலைமையே தேவை. காங்கிரஸ் கட்சிக்குள் புரையோடியுள்ள அடிப்படை கட்டமைப்பு சிக்கல்களைத் தீர்க்க முன்வர வேண்டும். காங்கிரஸ் கட்சிக்குள் உள்ள அடிப்படைப் பிரச்சனைகளை சீர்திருத்தங்கள் மூலம் தீர்க்கும் துணிச்சல் வேண்டும். கட்சியில் சேரவும், தேர்தல்களுக்கு பொறுப்பேற்க காங்கிரஸ் விடுத்த கோரிக்கையை ஏற்கவில்லை" என்றார். 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'மோடியா? ராகுலா?'-செல்லூர் ராஜு சொன்ன அசத்தல் பதில்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 Modi? Rahul?-Sellur Raju's wacky answer

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது 'மத்தியில் மோடி தலைமையிலான ஆட்சி வருமா? அல்லது ராகுல் காந்தி தலைமையிலான ஆட்சி வருமா?' எனக் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அவர், ''எங்களைப் பொறுத்தவரை யார் மத்தியில் ஆட்சிக்கு வந்தாலும் சரி, தமிழகத்துக்கு நல்லது செய்யக்கூடிய யார் வந்தாலும் வரவேற்போம். அது ராகுலாக இருந்தாலும் சரி, மோடியாக இருந்தாலும் சரி, எங்கள் தமிழகத்திற்கு பாதகமற்ற முறையில் யார் ஆட்சி செய்தாலும் அதை அதிமுக வரவேற்கும் என எங்கள் பொதுச்செயலாளரே சொல்லிவிட்டார்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட 39 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாதிரி எங்களுடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்க மாட்டார்கள். இந்தியா மதச்சார்பற்ற நாடு. இங்கு ஒவ்வொரு மதத்தையும் குறி வைத்து மோடி போன்ற பெரிய பதவியில் இருப்பவர்கள் பேசுவது சரியில்லை. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை எல்லாரையும் தூக்கி கொண்டாடுகிறார்கள் மக்கள். மக்களுடைய மனநிலை மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு.

நீங்க பாருங்க எந்தக் கட்சியுமே சொல்லவில்லை நீர் மோர் பந்தல் அமையுங்கள் என எந்த கட்சியின் தலைவராவது அறிவித்துள்ளார்களா? எங்கள் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மட்டுமே தொண்டர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். உடனடியாக தங்களுடைய தொண்டர்கள் அதை நிறைவேற்றுவார்கள் என்ற அடிப்படையில்தான் அவர் சொல்லியுள்ளார். எல்லா கட்சிகளும் தேர்தலைக் கருத்தில் கொண்டுதான் இயங்குகின்றதே ஒழிய பொதுநோக்கத்துடன் எந்த அரசியல் இயக்கங்களும் இயங்கவில்லை. அதிமுக மட்டும் தான் மக்கள் சேவையே மகேசன் சேவை என்ற அடிப்படையில் செயல்பட்டு வருகிறது'' என்றார்.

Next Story

''இன்னும் சில நாட்களில் கண்ணீர் விடுவார் மோடி''-ராகுல் பேச்சு 

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
"Modi will shed tears on the stage in a few days" - Rahul's speech

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறவுள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது.

இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அசாம், பீகார், சத்தீஸ்கர், கர்நாடகா, கேரளா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், மேற்கு வங்கம், திரிபுரா, மணிப்பூர் மற்றும் ஜம்மு-காஷ்மீரில் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தில் உள்ள 87 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடகா மாநிலம் பீஜப்பூரில் நடைபெற்ற மூன்றாம் கட்ட தேர்தலுக்கான பொதுக்கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி, “பிரதமர் மோடியின் பேச்சுகளைப் பார்த்தால் அவர் பதற்றமாக இருக்கிறார் எனத் தெரிய வருகிறது. இன்னும் சில நாட்களில் மேடையில் கண்ணீர் விடுவார். வறுமை, வேலைவாய்ப்பின்மை, விலைவாசி உள்ளிட்ட பிரச்சனைகளில் இருந்து உங்கள் கவனத்தைத் திசை திருப்ப முயல்கிறார். ஒரு நாள் சீனா அல்லது பாகிஸ்தானைப் பற்றி பேசுகிறார். மறுநாள் சாப்பாட்டு தட்டை தட்டுங்கள், விளக்கேற்றுங்கள் எனக் கூறுகிறார். 400 தொகுதிகளில் வெற்றி எனக் கூறிய மோடி தற்போது அந்தப் பேச்சையே கைவிட்டு விட்டார். முதற்கட்ட வாக்குப்பதிவுக்குப் பின்னர் பிரதமர் மோடி பீதி அடைந்துள்ளார்” எனப் பேசினார்.