Skip to main content

யாருக்கு ஐந்து மாநிலங்கள்? வெளியானது தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு

Published on 30/11/2023 | Edited on 30/11/2023

 

to whom five state; A post-election poll was released

 

தெலங்கானா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய ஐந்து மாநிலங்களில் தேர்தல் தேதியை கடந்த அக்டோபர் மாதம் 9 ஆம் தேதி அன்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதனைத் தொடர்ந்து பல கட்டமாக தேர்தல்கள் நடந்து முடிந்தது.

 

இந்நிலையில் தெலுங்கானா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம் மாநில சட்டமன்றத் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு வெளியாகியுள்ளது. ஜான் கி பா வெளியிட்டுள்ள கருத்து கணிப்பில் மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் 102 முதல் 125 இடங்கள் பெற்று வெற்றி பெறும் எனவும், பாஜக 100 முதல் 123 இடங்கள் பெறும் எனவும் மற்றவை இடங்களை பெற வாய்ப்பில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரிபப்ளிக் டிவி வெளியிட்டுள்ள கருத்து கணிப்பில் மத்திய பிரதேசத்தில்  காங்கிரஸ் 97 முதல் 107 இடங்கள் பெற்று வெற்றி பெறும் எனவும், பாஜக 118 முதல் 123 இடங்கள் பெறும் எனவும், மற்ற கட்சிகள் இடங்களை பெற வாய்ப்பில்லை எனவும் தெரிவித்துள்ளது.

 

தெலங்கானாவில் காங்கிரஸ் 48 முதல் 64 இடங்கள் பெற்று வெற்றி பெறும் எனவும், பி.ஆர்.எஸ் 40 முதல் 55 இடங்கள் பெறும் எனவும், பாஜக 7 முதல் 13 இடங்கள் பெறும் எனவும், மற்றவை 4 முதல் 7 இடங்கள் பெறும் எனவும் ஜான் கி பா வெளியிட்டுள்ள கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சி.என்.என் நியூஸ் 18 வெளியிட்டுள்ள கருத்து கணிப்பில் காங்கிரஸ் 56 இடங்கள் பெற்று வெற்றி பெறும் எனவும், பி.ஆர்.எஸ் 48 இடங்கள் பெறும் எனவும், பாஜக 10 இடங்கள் பெறும் எனவும் மற்றவை 5 இடங்கள் பெறும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.

 

ராஜஸ்தான் தேர்தல் குறித்து ஜான் கி பா வெளியிட்டுள்ள கருத்து கணிப்பில் ராஜஸ்தானில் பாஜக 100 முதல் 122 இடங்கள் பெற்று வெற்றி பெறும் எனவும், காங்கிரஸ் 62 முதல் 85 இடங்கள் பெறும் எனவும் மற்றவை 14 முதல் 15 வரையிலான இடங்களை பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

சத்தீஸ்கர் மாநில தேர்தல் குறித்து ஜான் கி பா  வெளியிட்டுள்ள கருத்து கணிப்பில் காங்கிரஸ் 42 முதல் 53  இடங்கள் பெற்று வெற்றி பெறும் எனவும், பாஜக 34 முதல் 45 இடங்கள் பெறும் எனவும்மற்றவை 3 இடங்களை பெற வாய்ப்பு உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆக்சிஸ் மை இந்தியா வெளியிட்டுள்ள கருத்து கணிப்பில் சத்தீஸ்கரில்  காங்கிரஸ் 40 முதல் 50  இடங்கள் பெற்று வெற்றி பெறும் எனவும், பாஜக 36 முதல் 46 இடங்கள் பெறும் எனவும், மற்ற கட்சிகள் 1 முதல் 5 இடங்களை பெற வாய்ப்புள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

மிசோரம் மாநில தேர்தல் குறித்து ஜான் கி பா வெளியிட்டுள்ள கருத்து கணிப்பில் இசட்.பி.எம்  15 முதல் 25  இடங்கள் பெற்று வெற்றி பெறும் எனவும், எம்.என்.எஃப் 10 முதல் 14 இடங்கள் பெறும் எனவும், காங்கிரஸ் 5 முதல் 9  இடங்களை பெற வாய்ப்பு உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பி-மாரோ வெளியிட்டுள்ள கருத்து கணிப்பில் மிசோரத்தில்  இசட்.பி.எம்  9 முதல் 15  இடங்களை பெற்று வெற்றி பெறும் எனவும், எம்.என்.எஃப் 14 முதல் 20 இடங்கள் பெறும் எனவும், மற்ற கட்சிகள் வெற்றி பெற வாய்ப்பு இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

துப்பாக்கி முனையில் நகைகள் கொள்ளை சம்பவம்; தனிப்படை போலீசார் அதிரடி!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
avadi jewelry incident police in action

சென்னையை அடுத்துள்ள ஆவடி முத்தாபுதுப்பேட்டையில் பிரகாஷ் என்பவர் ‘கிருஷ்ணா ஜுவல்லரி’ என்ற பெயரில் நகைக்கடை நடத்தி வருகிறார். இந்த நகைக்கடைக்கு கடந்த 15 ஆம் தேதி (15.04.2024) நண்பகல் 12 மணியளவில் 5 மர்ம நபர்கள் தமிழக பதிவெண் கொண்ட மாருதி ஸ்விஃப்ட் காரில் வந்துள்ளனர். இவர்களில் 4 பேர் கடையின் உரிமையாளரான பிரகாஷின் கை மற்றும் கால்களை கட்டிப்போட்டுத் துப்பாக்கி முனையில் நகைக் கடையில் இருந்து ரூ.1.5 கோடி மதிப்பிலான பணம் மற்றும் நகைகளை கொள்ளையடித்துச் சென்றனர். இந்தச் சம்பவம் குறித்து முத்தாபுதுப்பேட்டை போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

இந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும், அந்தக் கடைக்குள் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி கேமராக்களின் பதியப்பட்ட காட்சிகளை வைத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். பட்டப்பகலில் துப்பாக்கி முனையில் நகைக்கடை உரிமையாளரின் கை, கால்களை கட்டிப்போட்டு நகைக்கடையில் இருந்து ரூ.1.5 கோடி மதிப்பிலான பணம், நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் ஆவடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. 

avadi jewelry incident police in action

இதனையடுத்து நகைகளை கொள்ளையடித்த கொள்ளையர்களின் புகைப்படத்தை போலீசார் வெளியிட்டிருந்தனர். இது குறித்து கூடுதல் கமிஷனர் ராஜேந்திரன் செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், ‘பட்டப்பகலில் நகைக்கடைக்குள் புகுந்து கொள்ளையடித்த கொள்ளையர்களைப் பிடிக்க 8 தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வருகின்றோம். மேலும், கொள்ளையர்கள் வந்த காரின் எண் அடையாளம் கண்டறியப்பட்டுள்ளது. இந்த அடையாளங்களை வைத்து குற்றவாளிகளை தேடும் பணியை மேலும் தீவிரப்படுத்தி வருகிறோம்’ எனத் தெரிவித்திருந்தார்.

மேலும் இந்த நகைக்கடையில் கைவரிசை காட்டியது வட மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என போலீசார் விசாரணையில் தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து 8 தனிப்படைகள் அமைத்து போலீசார் கொள்ளையர்களை ஆந்திரா, ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அதே சமயம் கொள்ளையர்கள் காரை பயன்படுத்தாமல் ரயில் அல்லது விமானம் மூலம் தப்பிச் சென்றிருக்கலாம் எனவும், கொள்ளையர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் எனவும் போலீசார் தகவல் தெரிவித்திருந்தனர். சிசிடிவி கேமரா காட்சிகளை கொண்டு கொள்ளையர்கள் பயன்படுத்திய காரின் பதிவெண்ணை போலீசார் கண்டுபிடித்திருந்தனர். 

avadi jewelry incident police in action

இந்நிலையில் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்களுக்கு அடைக்கலம் கொடுத்ததாகவும், கொள்ளை சம்பவத்திற்கு மூளையாக செயல்பட்டதாக கூறி தினேஷ் குமார் மற்றும் சேட்டன்ராம் ஆகியஇருவரை போலீசார் கைது செய்துள்ளனர். இவர்கள் இருவரும் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்றும் தற்போது சென்னையில் தங்கி இருப்பதும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் இதில் சம்பந்தப்பட்ட முக்கிய குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என போலீசார் தெரிவித்துள்ளனர். 

Next Story

ஆவடியில் இரட்டைக் கொலை; போலீசாரிடம் சிக்கிய செல்போன்!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
aavadi siddha doctor and his wife incident Cell phone caught by the police

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அடுத்துள்ள மிட்டனமல்லியில் சித்த மருத்துவர் சிவன் நாயர் என்பவரும், அவரது மனைவி பிரசன்னகுமாரி ஆகியோர் வசித்து வந்துள்ளனர். இத்தகைய சூழலில் அவரது இல்லத்திற்கு சிகிச்சைக்கு வருவதுபோல் நேற்று (28.04.2024) இரவு வீட்டிற்குள் மர்ம நபர்கள் நுழைந்துள்ளனர். அதன்பின்னர் சித்த மருத்துவர் சிவன் நாயரையும் அவரது மனைவி பிரசன்னகுமாரியையும் மர்ம நபர்கள் கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்துள்ளனர். அதனைத் தொடர்ந்து மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பியோடியுள்ளனர்.

இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் தீவிர விசாராணை மேற்கொண்டனர். அப்போது இந்த இரட்டைக் கொலை நடந்த இடத்தில் செல்போன் ஒன்று கைப்பற்றப்பட்டது. இது தொடர்பாக ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த மகேஷ் என்பவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதோடு கொலையான மருத்துவரிடம் சிகிச்சை பெற வந்தவர்களிடமும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

மேலும் கொலையாளிகள் பல லட்சம் மதிப்பிலான தங்க நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளனரா என்ற கோணத்திலும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஆவடி அருகே சித்த மருத்துவர் மற்றும் அவரது மனைவி கழுத்து அறுத்து கொடூரக் கொலை செய்யப்பட்ட சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.