Skip to main content

5 மாநில தேர்தலில் ஆட்சியை பிடிப்பது யார்..? - வெளியான கருத்துக்கணிப்பு முடிவுகள்!

Published on 07/03/2022 | Edited on 07/03/2022

 

பரக

 

உ.பி., பஞ்சாப், கோவா, உத்ரகாண்ட் மற்றும் மணிப்பூர் ஆகிய ஐந்து மாநிலத் தேர்தல் பல்வேறு கட்டங்களாக நடந்து முடிந்துள்ளது. குறிப்பாக இந்தியா முழுவதும் உள்ள அரசியல் கட்சிகள் உ.பி. தேர்தலின் மீது கவனம் செலுத்தி வருகின்றனர். காரணம், உ.பி.யில் ஆட்சி அமைக்கும் கட்சி அடுத்து நடக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் பெருவாரியான இடங்களை வெல்லும். அதன்மூலம் ஆட்சி அமைப்பது அல்லது ஆட்சி அமைக்கும் கட்சியின் கூட்டணியில் முக்கியப் பங்கு வகிக்கமுடியும். இதனால் தமிழகம் தொடங்கி காஷ்மீர் வரை உ.பி தேர்தல் முடிவுக்காகப் பெருவாரியான மக்கள் தேர்தல் முடிவுகளை ஆவலுடன் எதிர்பார்த்து வருகிறார்கள். 

 

இந்நிலையில் உத்ரகாண்ட், கோவா, பஞ்சாப், மணிப்பூர் உள்ளிட்ட மாநிலங்களில் தேர்தல் முழுவதுமாக நடைபெற்ற நிலையில், உ.பி-யில் இன்று 7ம் கட்ட வாக்குப்பதிவு அமைதியாக நடைபெற்று முடிந்துள்ளது. 5 மாநில தேர்தலில் பதிவான வாக்குகள் வரும் 10ம் தேதி எண்ணப்பட இருக்கிறது. இதற்கிடையே அனைத்து மாநிலத்திலும் இறுதிக் கட்ட வாக்குப்பதிவு நிறைவு பெற்றதால் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புக்கள் தற்போது வெளியாகி உள்ளது.

 

70 தொகுதிகளை உடைய உத்ரகாண்டில் பாஜக 35+ மற்றும் காங்கிரஸ் 31+ தொகுதிகளில் வெற்றிபெற வாய்ப்பு உள்ளதாக  இந்தியா டுடே மற்றும் டைம்ஸ் நவ் தொலைக்காட்சிகள் வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது. 

 

117 தொகுதிகளை உடைய பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி ஆட்சி அமைக்கும் என்று அனைத்து தொலைக்காட்சி கருத்துக்கணிப்பிலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆம் ஆத்மி 72 முதல் 90 தொகுதிகளில் வெற்றிபெற்று தனிப்பெரும்பான்மையோடு ஆட்சியைப் பிடிக்கும் என்று தெரியவந்துள்ளது. இங்கு காங்கிரஸ் கட்சி 24+ தொகுதிகளிலும், பாஜக 4+ தொகுதிகளில் வெற்றிபெற வாய்ப்பு இருப்பதாகத் தெரியவந்துள்ளது.

 

40 தொகுதிகளை உடைய கோவா மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி 16+ இடங்களிலும், பாஜக 14+ இடங்களிலும் ஆம் ஆத்மி 4+ இடங்களிலும் வெற்றிபெற வாய்ப்பு உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் தனிப்பெரும் கட்சியாக வர வாய்ப்பிருந்தாலும், ஆம் ஆத்மி ஆட்சி அமைப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் என்று கூறப்படுகிறது. 

 

60 தொகுதிகளை உடைய மணிப்பூர் மாநிலத்தில் பாஜக அதிக இடங்களைக் கைப்பற்றும் என்று பெரும்பாலான கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பாஜக 43+ இடங்களிலும் காங்கிரஸ் கட்சி 8+ இடங்களிலும் வெற்றிபெற வாய்ப்பு இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட 403 தொகுதிகளை உடைய உ.பி-யில் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என்று அனைத்து கருத்துக்கணிப்பிலும் தெரியவந்துள்ளது. பாஜக 230+ தொகுதிகளிலும் எஸ்.பி 130+ தொகுதிகளிலும் வெற்றிபெறும் எனக் கூறப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சி ஒற்றை இலக்கத்தில் வெற்றி பெறவே அதிக வாய்ப்பு இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்ற மாநிலங்களில் வெளியான கருத்துக்கணிப்புகளில் கூட ஏற்ற இறக்கங்கள் இருந்த நிலையில், உபி மாநிலத்தில் கண்டிப்பாக பாஜக ஆட்சி அமையும் என்று தற்போது வெளியான கருத்துக்கணிப்புகளில் தெரியவந்துள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“காவிரி நீர் வேணுமா... ஈரோட்டில் கூட காவிரி ஓடுது பாருங்க...” - ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பதிலால் எழுந்த விமர்சனம்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
'Oh Cauvery water...? Even in Erode, see the Cauvery running'- Criticism caused by EVKS Elangovan's response

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

ஈரோட்டில் செய்தியாளர்களைச் சந்தித்த காங்கிரஸ் எம்.எல்.ஏ ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பேசுகையில், ''ஸ்டாலின் தலைமையில் அமைந்திருக்கின்ற கூட்டணி என்பது சாதி மதங்களைக் கடந்த கூட்டணி. மத வெறித்தனத்திற்கு அப்பாற்பட்ட கூட்டணி. மக்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும், எல்லா மதத்தைச் சார்ந்தவர்களும் ஒன்றாக இருக்க வேண்டும் என்ற ஒரு நல்ல கொள்கைக்காக தான் இந்த கூட்டணி இருக்கிறது.

மற்ற கூட்டணிகளை எடுத்துக் கொண்டால் குறிப்பாக பாஜக கூட்டணியில் இருக்கின்ற கூட்டணியாக இருந்தாலும் சரி, அதிமுக தலைமையில் இருக்கின்ற கூட்டணியாக இருந்தாலும் சரி அவர்கள் கொள்கைக்காக ஒன்று சேரவில்லை. சில கோடி ரூபாய் பேரம் பேசி பெறுவதற்காக அந்த கூட்டணியில் இருக்கிறார்கள்'' என்றார்.

அப்பொழுது செய்தியாளர் ஒருவர், 'ஒரு சொட்டு தண்ணீர் கூட தரமாட்டேன் என்று சொல்கின்ற காங்கிரசுக்கு பத்து சீட்டுகள் கொடுத்தது நியாயமா என சீமான் கேள்வி எழுப்பி உள்ளாரே' எனக் கேள்வி எழுப்பினார். அதற்குப் பதிலளித்த இளங்கோவன், ''இல்லை காங்கிரசினுடைய கொள்கையே ஒரு சொட்டு நீர் கூட கொடுக்கக் கூடாது என்பதுதான். மக்கள் குடிப்பதால் கெட்டுப் போயிருக்கிறார்கள். மக்களுடைய சிந்தை மாறி போயிருக்கிறது. அதனால் காங்கிரசை பொறுத்தவரை எங்களுடைய மகாத்மா காந்தியினுடைய கொள்கையே ஒரு சொட்டு மது தண்ணீர் கூட மக்களுக்கு கொடுக்கக் கூடாது என்பதுதான்'' என்றார்.

உடனே செய்தியாளர் 'காவிரி தண்ணீர்' என சொல்ல, ''காவிரி தண்ணீரா... காவிரி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. ஈரோட்டில் இருக்கின்ற காவிரி ஆற்றை பார்த்தீர்கள் என்றால் கூட, இன்னைக்கு பாருங்கள் இருக்கின்ற பாறை எல்லாம் மறைக்கும் அளவிற்கு தண்ணீர் போய்க் கொண்டிருக்கிறது. வேண்டிய அளவிற்கு தண்ணீர் தர கர்நாடகா தயாராக இருந்தாலும் அவர்களுக்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு இருக்கின்ற காரணத்தால் சில தடங்கல்கள் இருக்கிறது'' என்றார்.

காவிரி நீர் குறித்த கேள்விக்கு ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கொடுத்த பதிலுக்கு சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் எழுந்து வருகிறது.

Next Story

“கோட்சே பேரன்களின் கொள்கை தோற்கடிக்கப்பட வேண்டும்” - காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் பிரச்சாரம்!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
 Politics of Godse's grandsons must be defeated said Congress candidate Manickam Tagore

விருதுநகர் மாவட்டம் – ஸ்ரீவில்லிபுத்தூரை அடுத்துள்ள கிருஷ்ணன் கோயிலில் நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் தென்காசி பாராளுமன்ற திமுக வேட்பாளர் ராணி ஸ்ரீகுமார் மற்றும் விருதுநகர் பாராளுமன்ற காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரை ஆதரித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரச்சார உரையாற்றினார்.

இந்தக் கூட்டத்தில் விருதுநகர் பாராளுமன்ற உறுப்பினரும் விருதுநகர் தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளருமான மாணிக்கம் தாகூர் பேசியபோது, “என்னுடைய பார்வையில், தளபதி மு.க. ஸ்டாலின் ஒவ்வொரு கட்டத்திலும் தொடர்ந்து உயர்ந்த நிலைக்கு சென்றபடியே இருக்கிறார். நாளை என்னவாக உயர்வார் என்பதற்குக் காலம் பதில் சொல்லும்.

 Politics of Godse's grandsons must be defeated said Congress candidate Manickam Tagore

ஆனால் அவர் இந்தியாவினுடைய பிரதமராக ராகுல் காந்தி வருவதற்கு முழு ஆதரவு தருவார் என்பது மட்டும் நம் அனைவருக்கும் தெரிந்த விஷயம். ஏப்ரல் 19 ஆம் தேதி நடக்கவிருக்கின்ற தேர்தல், இரு கொள்கைகளுக்கான தேர்தல். ஒரு பக்கம் கோட்சேவின் பேரன்களும் அவருடைய கொள்கைகளும். 20 கோடி சிறுபான்மையின மக்களை அடிமைகளாக சிக்க வைக்க வேண்டும் என்ற ஆர்.எஸ்.எஸ்.ஸின் கொள்கை. பெரும் பணக்காரர்களாக இருக்கின்ற அதானிக்கு இந்தியாவின் செல்வங்களை அள்ளிக் கொடுக்கத் துடிக்கும் மோடி, அமித்ஷாவின் கொள்கை.

இன்னொரு பக்கம், அனைவருக்கும் சமமான இந்தியாவை உருவாக்க வேண்டுமென்று மகாத்மா காந்தி மற்றும் தந்தை பெரியார் பேரன்களின் இந்தக் கூட்டணி. இந்த இந்தியா கூட்டணி அனைவருக்கும் அனைத்தும் என்ற கொள்கையைக் கொண்ட கூட்டணி. இந்தக் கூட்டணி வெல்ல வேண்டுமென்றால், உங்களுடைய ஆதரவு முழுமையாகத் தேவை. இந்தக் கூட்டணி வெல்ல வேண்டுமென்றால் கோட்சே தோற்கடிக்கப்பட வேண்டும். கோட்சேவின் கொள்கை தோற்கடிக்கப்பட வேண்டும். காந்தியா? கோட்சேவா? என்ற நிலையிலே இன்று நிற்கிறோம். மோடியா? ராகுல் காந்தியா? என்ற நிலையிலே நிற்கிறோம். இதிலே தளபதியார் ராகுல் காந்தியோடு நிற்கிறார். அவருடைய ஆசியோடு கை சின்னத்துக்கு வாக்கு தாருங்கள் என்று இரு கரம் கூப்பி வேண்டி விடைபெறுகிறேன்.”  எனப் பேசினார்.