குடியரசுத் தலைவர் தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான தேசியஜனநாயககூட்டணி வேட்பாளராகஒடிசாமாநிலத்தைச் சேர்ந்த திரௌபதிமுர்முஅறிவிக்கப்பட்டுள்ளார்.அவருக்குப்பிரதமர் நரேந்திர மோடி,ஒடிசாமாநில முதலமைச்சர்நவீன்பட்நாயக்உள்ளிட்டோர் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.
குடியரசுத் தலைவர் வேட்பாளர் திரௌபதிமுர்முயார்? அவரது பின்னணி குறித்து விரிவாகப் பார்ப்போம்!
கவுன்சிலராகஅரசியல் பயணத்தைத் தொடங்கியவர் திரௌபதிமுர்மு. சட்டமன்ற உறுப்பினர், அமைச்சர், ஆளுநர் என அடுத்தடுத்து பல வளர்ச்சிகளைக் கண்டவர். 1958- ஆம் ஆண்டு ஜூன் மாதம் 20- ஆம் தேதி அன்றுஒடிசாமாநிலத்தில் பிறந்த திரௌபதிமுர்மு,சந்தல்என்ற பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர்.புவனேஸ்வரில்பட்டம் பயின்ற இவர், ஆசிரியராகப் பணியாற்றினார். பின்னர், அரசியலில் ஆர்வம் ஏற்பட்டு, பா.ஜ.க.வில் இணைந்து கடந்த 1997- ஆம் ஆண்டு நடைபெற்றகவுன்சிலர்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
அதைத் தொடர்ந்து, கடந்த 2002- ஆம் ஆண்டுராய்ரங்க்ப்பூர்தொகுதியின் சட்டமன்றஉறுப்பினராகத்தேர்ந்தெடுக்கப்பட்டார்.ஒடிஷாவில்பிஜுஜனதா தளம் மற்றும் பா.ஜ.க. கூட்டணி ஆட்சி அமைந்திருந்த போது, இரண்டு ஆண்டுகள் போக்குவரத்துத்துறை அமைச்சராகவும், அதன் பிறகு இரண்டு ஆண்டுகளுக்கு மீன்வளத்துறை அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார்.
2007- ஆம் ஆண்டுஒடிசாமாநிலத்தின் சிறந்த சட்டமன்ற உறுப்பினருக்கான விருதையும் இவர் பெற்றுள்ளார். பா.ஜ.க.வில் தேசிய பழங்குடியின அமைப்பின்துணைத்தலைவராகவும் பதவி வகித்துள்ளார். கடந்த 2015- ஆம் ஆண்டுஜார்கண்ட்மாநிலத்தின் முதல் பெண் ஆளுநராக இவர் நியமிக்கப்பட்டார். இந்தியாவிலேயேபழங்குடியினத்தைச்சேர்ந்த முதல் பெண் ஆளுநர் என்ற பெருமையையும் அப்போது பெற்றார்.
அரசியலில் அடுத்தடுத்து மிக முக்கிய இடங்களை அவர் பெற்றிருந்தாலும், தனிப்பட்ட வாழ்க்கையில் பெரும் இழப்புகளைச் சந்தித்துள்ளார். இவரது கணவர் மற்றும் இரண்டு மகன்கள் அடுத்தடுத்து உயிரிழந்தது இவரது வாழ்வில் நடைபெற்ற பெரிய சோகம். இருப்பினும், தன்னம்பிக்கை தளராமல் மக்கள் பணியாற்றிய இவர், தற்போது குடியரசுத்தலைவர் வேட்பாளராக உயர்ந்திருக்கிறார்.
தேர்தலில் வெற்றி பெறும் பட்சத்தில் இந்தியாவின் முதல் பழங்குடியின குடியரசுத்தலைவர் என்ற பெருமையைப் பெற உள்ளார்.