50 வயதுக்கு அதிகமானவர்களுக்கும், கரோனா தொற்றால் அதிக பாதிப்பு ஏற்படக்கூடிய அபாயமுள்ளவர்களுக்கும் முதலில் கரோனா தடுப்பூசி வழங்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது.
தடுப்பூசிகள் வந்து சேரும் இடத்திலிருந்து, அதன் பயனாளிகளைச் சென்றடையும்வரை, அதன் வெப்பநிலை நிலையாகப் பராமரிக்கப்பட வேண்டும். அதற்கு, அதனைக்குளிரூட்டப்பட்ட நிலையிலேயே பாதுகாப்பது முக்கியமானது. எனவே குறிப்பிட்ட வரம்புக்குமேல்தடுப்பூசி வந்துசேர்ந்தாலும் அவற்றை குளிரூட்டப்பட்ட நிலையிலேயே பாதுகாக்கத் தேவையான குளிர்பதன வசதி இந்தியாவில், போதுமான அளவில் இல்லை. எனவே, முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி போடப்படும் எனத் தெரியவந்துள்ளது.