Skip to main content

கோவாக்சினுக்கு அனுமதி வழங்குவது குறித்து முடிவெடுப்பது எப்போது? - உலக சுகாதார நிறுவன அதிகாரி தகவல்!

Published on 12/08/2021 | Edited on 12/08/2021

 

COVAXIN

 

இந்தியாவில் கோவாக்சின், கோவிஷீல்ட் ஆகிய தடுப்பூசிகள் முழுமையான பயன்பாட்டில் உள்ளன. அதேசமயம் கோவாக்சின் தடுப்பூசிக்கு உலக சுகாதார நிறுவனத்தின் அவசரகால அங்கீகாரம் இன்னும் வழங்கப்படவில்லை. இதனால் கோவாக்சின் செலுத்திக்கொண்டவர்கள் வெளிநாடு செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

 

இதனால் கோவாக்சின் தடுப்பூசிக்கு அவசரகால அங்கீகாரம் கேட்டு, பாரத் பயோடெக் நிறுவனம் விண்ணப்பித்தது. மேலும், கோவாக்சின் தடுப்பூசியின் ஒப்புதலுக்குத் தேவையான தரவுகளைப் பாரத் பயோடெக் நிறுவனம், கடந்த ஜூலை ஒன்பதாம் தேதி சமர்ப்பித்தது. இதன்பிறகு, கோவாக்சின் தடுப்பூசிக்கு அவசரகால அங்கீகாரம் வழங்குவது குறித்து நான்கு முதல் ஆறு வாரங்களில் முடிவெடுக்கப்படும் என உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை நிபுணர் சௌமியா ஸ்வாமிநாதன் ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருந்தார். இதனால் ஆகஸ்ட் மாதத்தில் கோவாக்சின் தடுப்பூசிக்கு உலக சுகாதார நிறுவனத்தின் அங்கீகாரம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

 

ஆனால் கோவாக்சின் தடுப்பூசிக்கு உலக சுகாதார நிறுவனம் எப்போது அவசரகால அனுமதி அளிக்கும் என நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு, மத்திய சுகாதாரத்துறை இணையமைச்சர் பாரதி பிரவீன் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் "தடுப்பூசி ஒப்புதலுக்குத் தேவையான தரவுகளைப் பாரத் பயோடெக் நிறுவனம், ஜூலை 9ஆம் தேதி சமர்ப்பித்துவிட்டது. மற்ற கரோனா தடுப்பூசிகளுக்கு அனுமதி வழங்க உலக சுகாதார நிறுவனம் எடுத்துக்கொண்ட நேரத்தின் அடிப்படையில் பார்த்தால், அவசரகால அனுமதிக்கான நடைமுறை முடிவடைய, தரவுகள் சமர்ப்பிக்கப்பட்ட  நாளிலிருந்து இரண்டு முதல் மூன்று மாதங்கள் ஆகும் எனத் தெரிகிறது" என தெரிவித்தார்.

 

இதனால் கோவாக்சின் தடுப்பூசிக்கு எப்போது அனுமதி கிடைக்கும் என தெரியாத நிலை ஏற்பட்டது. இந்தநிலையில், உலக சுகாதார நிறுவனத்தின் தடுப்பூசிகளுக்கான உதவி இயக்குநர் ஜெனரல் டாக்டர் மரியங்கேலா சிமாவோ, கோவாக்சின் தடுப்பூசிக்கு அவசரகால அனுமதி அளிப்பது குறித்து உலக சுகாதார நிறுவனம் செப்டம்பர் மாதத்தின் இடைப்பகுதியில் முடிவெடுக்கலாம் என தெரிவித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“காசாவில் ஒவ்வொரு 10 நிமிடங்களுக்கு ஒரு குழந்தை கொல்லப்படுகிறது” - உலக சுகாதார நிறுவனம் வேதனை 

Published on 11/11/2023 | Edited on 11/11/2023

 

WHO President says about Gaza

 

இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினர் இடையேயான போர் ஒரு மாதத்தைக் கடந்துள்ள நிலையில், நிலைமை நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது. கடந்த அக்டோபர் 7 ஆம் தேதி காசாவிலிருந்து ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேல் அதிதீவிரமான தாக்குதலை நடத்தி வருகிறது. இப்படியாக இரு தரப்பிலிருந்து ஆயிரக்கணக்கான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. இதனிடையே காசாவை சுற்றி வளைத்து தனது பீரங்கி குண்டுகளால் காசா நகரையே இஸ்ரேல் நிர்மூலமாக்கிக் கொண்டிருக்கிறது.

 

தரைவழித் தாக்குதலைத் தீவிரப்படுத்திய இஸ்ரேல், கிட்டத்தட்ட அனைத்து தொலைத் தொடர்பு சேவைகளை அழித்து உலகத்திலிருந்து காசாவை தனிமைப்படுத்தியுள்ளது. ஹமாஸ் அமைப்பினரை ஒருவர் விடாமல் அழிக்க நினைக்கும் இஸ்ரேலின் தாக்குதலில் ஆயிரக்கணக்கான அப்பாவி பாலஸ்தீன மக்கள் தினந்தோறும் கொல்லப்பட்டு வருகின்றனர். இதுவரை 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அப்பாவி பாலஸ்தீன மக்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும், அதில் 60 சதவீதம் பேர் பெண்களும், குழந்தைகளும் எனக் கூறப்படுகிறது. இரு தரப்பிற்கு இடையிலான இந்தப் போரில் பலரும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இப்போரை நிறுத்த உலக நாடுகள் கோரிக்கை வைத்து வருகின்றன.

 

இந்த நிலையில், காசாவின் அவலநிலை குறித்து உலக சுகாதாரம் நிறுவனம் தனது வேதனையை தெரிவித்துள்ளது. இது குறித்து உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்டோஸ் அதானோம் கூறியிருப்பதாவது, “காசாவில் அனஸ்தீசியா (Anaesthesia) கொடுக்கப்படாமல் அறுவை சிகிச்சை நடைபெறுகின்றன. உயிரிழந்தவர்களில் 70% பேர் பெண்கள் மற்றும் குழந்தைகள் ஆவர். இந்த நிலையை எடுத்துரைக்க என்னால் இயலவில்லை. சராசரியாக ஒவ்வொரு 10 நிமிடங்களுக்கும் ஒரு குழந்தை கொல்லப்படுகிறது” என்று வேதனையோடு தெரிவித்துள்ளார். 

 

 

Next Story

குரங்கு அம்மை நோயின் பெயரை மாற்ற உலக சுகாதார அமைப்பு பரிசீலனை!

Published on 14/08/2022 | Edited on 14/08/2022

 

The World Health Organization is considering changing the name of monkey measles!

 

குரங்கு அம்மை நோயின் பெயரை மாற்ற பரிசீலித்து வருவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. பொதுவாக ஆப்பிரிக்காவில் காணப்படும் இந்த வைரஸ் முதன் முதலில் 1958 ஆம் ஆண்டு குரங்குகளிடம் கண்டறியப்பட்டது. மனிதருக்கு இந்த வைரஸ் பாதிப்பு முதல்முறையாக 1970 ஆம் ஆண்டு காங்கோ நாட்டில் கண்டறியப்பட்டது. இந்த வைரஸ் தொற்று 2017 ஆம் ஆண்டுமுதல் நைஜீரியா, காங்கோ நாடுகளில் மீண்டும் பரவியது. தற்பொழுது அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளிலும் ஐரோப்பிய நாடுகள் பலவற்றிலும் பரவி வருகிறது. பெல்ஜியம், பிரான்ஸ், ஜெர்மனி ஆகியவற்றில் அண்மையில் புதிதாக இந்தத் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதுவரை 12 நாடுகளில் பரவியுள்ளது.

 

இந்நிலையில் உலக சுகாதார அமைப்பு குரங்கு அம்மை நோய் குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், 'குறிப்பிட்ட வகை வைரஸ் தாக்குவதால் ஏற்படும் நோயை 'குரங்கு அம்மை' வைரஸ் என்று அழைப்பதற்கு எதிர்ப்பு மற்றும் கவலை தெரிவிக்கப்படுகிறது. குரங்கின் பெயரை பயன்படுத்துவது அவதூறு மற்றும் இன ரீதியான குறிப்பு. இதற்கு முன் இந்த நோய் காங்கோ பேசின் என அழைக்கப்பட்டது. இனி இந்த வைரஸ் தாக்குதலை க்லேட் 1, க்லேட் 2 என அழைக்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

கடந்த மே மாதம் முதல் உலகம் முழுவதும் இதுவரை 36 ஆயிரம் பேருக்கு இவ்வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.