Skip to main content

அலங்கார ஊர்திகளைத் தேர்வு செய்வதற்கான வழிமுறைகள் என்ன?

Published on 17/01/2022 | Edited on 17/01/2022

 

 

What are the procedures for selecting vehicles? republic day in delhi


குடியரசுத் தின அணி வகுப்பில் தமிழ்நாட்டின் அலங்கார ஊர்தி நிராகரித்தது போலவே, கேரளா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களின் அணி வகுப்பு ஊர்திகளும் நிராகரிக்கப்பட்டுள்ளன. எந்த அடிப்படையில் இந்த ஊர்திகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது? ஊர்திகளைத் தேர்வு செய்வதற்கான வழிமுறைகள் என்ன? என்பது குறித்து விரிவாகப் பார்ப்போம்!

 

குடியரசுத் தின அணி வகுப்பிற்காக மத்திய அரசின் முக்கியமான துறைகள் மற்றும் மாநில அரசுகளிடம் இருந்து இதற்கான விண்ணப்பங்கள் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகத்திற்கு அனுப்பப்படும். மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள குழு மூலம் விண்ணப்பங்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும். 

 

ஊர்திகளில் பயன்படுத்தப்படும் கருப்பொருள், கலைவடிவம், கலாச்சாரம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை அடிப்ப்டையாகக் கொண்டு, இவை தேர்ந்தெடுக்கப்படும். கடந்த ஆண்டு 32 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள், மத்திய அரசின் 24 துறைகளும் விண்ணப்பித்திருந்த நிலையில், 22 அலங்கார ஊர்திகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டிருந்தது. 

 

இந்த ஆண்டு 12 மாநிலங்களுக்கும், சில மத்திய அமைச்சரவைத் துறைகளுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பஞ்சாப், கர்நாடகா, சத்தீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்களின் அலங்கார ஊர்திகள் அனுமதி பெற்றுவிட்ட நிலையில், அசாம் உள்ளிட்ட சில மாநிலங்களின் ஊர்திகள் இறுதிக் கட்ட பரிசீலனையில் உள்ளன.

 

கடந்த ஆண்டு கேரளா, மகாராஷ்டிரா, மேற்குவங்கம், ஜார்க்கண்ட் உள்ளிட்ட மாநிலங்கள் விடுப்பட்டுப் போயிருந்த நிலையில், இந்த ஆண்டும் கேரளா, மேற்குவங்கம் உள்ளிட்ட மாநில அரசுகளின் அலங்கார ஊர்திகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. 

 

கேரளாவைப் பொறுத்தவரை, இந்த ஆண்டு அவர்களின் அலங்கார ஊர்தியில் சமூக போராளியான ஸ்ரீ நாராயண குருவின் உருவம் பிரதானமாக இடம்பெற்றிருந்தது.  இதன் காரணமாகவே, அலங்கார ஊர்தி நிராகரிக்கப்பட்ட நிலையில், தனது கண்டனத்தைப் பதிவு செய்த கேரள அரசு, மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளது. 

 

மேற்குவங்க மாநிலத்தில் சுபாஸ் சந்திரபோஸின் 125- வது பிறந்தநாளை கொண்டாடும் வகையில், ஊர்தியை வடிவமைத்து இருந்த நிலையில், அதுவும் நிராகரிக்கப்பட்டது. ரவீந்திரநாத் தாகூர், விவேகானந்தர் உள்ளிட்ட சுதந்திர போராட்ட வீரர்களின் உருவங்களும் ஊர்தியில் இடம் பெற்றிருந்தனர். இந்த விவகாரம் குறித்து மேற்கு வங்க மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.  
 

சார்ந்த செய்திகள்

Next Story

பெட்ரோல், டீசல் விலை குறைப்பு!

Published on 14/03/2024 | Edited on 14/03/2024
Petrol, diesel price reduction

நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு 2 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி அறிவித்துள்ளார். பெட்ரோல், டீசல் விலை குறைப்பு நாளை (15.03.2024) காலை 06:00 மணி முதல் அமலுக்கு வரும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 663 நாட்களுக்கு பிறகு பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை மூலம் 58 லட்சத்திற்கும் அதிகமான கனரக சரக்கு வாகனங்கள், 6 கோடி கார்கள் மற்றும் 27 கோடி இருசக்கர வாகனங்கள் பயன்பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் தற்போது பெட்ரோல் லிட்டருக்கு 102 ரூபாய் 75 பைசாவிற்கும், டீசல் லிட்டர் ஒன்றுக்கு 94 ரூபாய் 34 பைசாவுக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த விலை குறைப்பை அடுத்து சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு 100 ரூபாய் 75 பைசாவிற்கும், டீசல் லிட்டர் ஒன்றுக்கு 92 ரூபாய் 34 பைசாவுக்கும் விற்பனை செய்யப்பட உள்ளன.

முன்னதாக உலக மகளிர் தினத்தை ஒட்டி சமையல் கேஸ் சிலிண்டர் விலையை 100 ரூபாய் குறைத்து மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது. பிரதமர் மோடி இதற்கான உத்தரவை பிறப்பித்திருந்தார். சமையல் கேஸ் சிலிண்டர் விலை குறைப்பு என்பது பல கோடி குடும்பங்களின் நிதிச்சுமையை கணிசமாகக் குறைக்கும் என தெரிவித்துள்ள பிரதமர், சமையல் எரிவாயு மிகவும் மலிவு விலையில் வழங்குவதன் மூலம் குடும்பங்களின், குறிப்பாக பெண்களின் ஆரோக்கியம் உறுதி செய்யப்படும் என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

Next Story

புதிய தேர்தல் ஆணையர்கள் நியமனம்!

Published on 14/03/2024 | Edited on 14/03/2024
Appointment of new election commissioners

நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும், நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் கடந்த ஒரு மாத காலமாகத் தீவிரப்படுத்தி வருகின்றன. இத்தகைய சூழலில் இந்தியத் தேர்தல் ஆணையமும் மக்களவைத் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தொடர்ந்து ஆய்வுகளை நடத்தி வருகிறது. விரைவில் தேர்தல் அறிவிக்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது. கூட்டணிக் கட்சிகளிடையே தொகுதிப் பங்கீடுகள் பற்றிய பேச்சுவார்த்தையும் நடைபெற்று வருகிறது. ஒரு சில கட்சிகளில் வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டு வருகின்றனர்.

இத்தகயை சூழலில் இந்தியத் தேர்தல் ஆணையத்தின் தலைமை ஆணையராக ராஜீவ் குமார், ஆணையர்களாக அனுப் சந்திர பாண்டே, அருண் கோயல் ஆகியோர் பதவி வகித்து வந்தனர். இதற்கிடையில், தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்களை தேர்வு செய்வதற்கான புதிய சட்டத்தை கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அதன்படி, தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்களை பிரதமர் மோடி தலைமையிலான தேர்வு குழு தேர்வு செய்யும் என்று கூறப்பட்டது.
இதனிடையே, தேர்தல் ஆணையராக பொறுப்பு வகித்து வந்த அனூப் சந்திர பாண்டே கடந்த பிப்ரவரி 15ஆம் தேதி ஓய்வு பெற்றார். தேர்தல் ஆணையர் அருண் கோயல் கடந்த 9ஆம் தேதி பதவியை ராஜினாமா செய்தார். இந்த திடீர் ராஜினாமாவை அடுத்து, புதிய தேர்தல் ஆணையர்களாக இருவரை தேர்வு செய்வதற்கான தேர்வுக்குழு கூட்டம் டெல்லியில் இன்று (14-03-2024) நடைபெற்றது. இந்த தேர்வு குழுவில் சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி ஆகியோர் உள்ளனர். காலை கூடிய இக்குழு, புதிய தேர்தல் ஆணையர்களாக ஞானேஷ் குமார் மற்றும் சுக்பிர் சிங் சாந்து ஆகியோரை தேர்வு செய்துள்ளது. இவர்களில், ஞானேஷ் குமார் கேரளா மாநிலத்தையும், சுக்பிர் சிங் சாந்து பஞ்சாப் மாநிலத்தையும் சேர்ந்தவர்கள் ஆவர்.

Appointment of new election commissioners

இந்நிலையில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இந்திய தேர்தல் ஆணையர்களாக ஞானேஷ் குமார் மற்றும் சுக்பீர் சிங் சந்து ஆகியோரை நியமித்து உத்தரவிட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து இதற்கான அரசானைய மத்திய சட்ட அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இவர்கள் இருவரும் உடனடியாக பதவியேற்பார்கள் எனவும் கூறப்படுகிறது. காலியாக இருந்த 2 தேர்தல் ஆணையர்களின் பதவியும் நிரப்பபட்டு விட்டதால் விரைவில் மக்களவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கான வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.