ADVERTISEMENT

பனிமூட்டம் காரணமாக விபத்து; 14 பேர் பலி - மேற்குவங்கத்தில் பரிதாபம்!

03:09 PM Jan 20, 2021 | rajapathran@na…

ADVERTISEMENT

ADVERTISEMENT

மேற்கு வங்க மாநிலன் ஜல்பைகுரி மாவட்டத்தின் துப்குரியில் நேற்று (19.01.2021) இரவு பனிமூட்டம் காரணமாக சாலை விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 14 உயிரிழந்தனர். மேலும் இந்த விபத்தில் 18 பேர் காயமடைந்துள்ளனர். அவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இந்த விபத்தில் பலியானவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்குத் தேசிய நிவாரண நிதியிலிருந்து 2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு 50 ஆயிரமும் நிவாரணமாக வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.

அதேபோல் இந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இறங்களைக் தெரிவித்துள்ள மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு 2.5 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு 50 ஆயிரமும் வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT