ADVERTISEMENT
ADVERTISEMENT
மேற்குவங்க ஆளுநராக இருப்பவர் ஜெகதீப் தங்கர். தனது வடக்கு வங்க சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக டார்ஜிலிங் சென்றிருந்த இவருக்கு, காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து மருத்துவர்கள் அவரை இரத்த பரிசோதனை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளனர்.
இதனைத்தொடர்ந்து டெல்லி விரைந்த அவர், அங்கு இரத்த பரிசோதனை மேற்கொண்டார். அதில் அவருக்கு மலேரியா இருப்பது கண்டறியப்பட்டது. இதனையடுத்து டெல்லியில் உள்ள வங்க பவனில் தங்கியிருந்த அவரின் உடல்நிலையை மருத்துவர்கள் தீவிரமாகக் கண்காணித்து வந்தனர்.
இந்தநிலையில் ஜெகதீப் தங்கர் இன்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரின் உடல்நிலையை மருத்துவர்கள் கண்காணித்து வருகின்றனர்.
ADVERTISEMENT
Show comments