Skip to main content

"இது ஒரு சதி" - சென்னை உயர் நீதிமன்றத்தின் கருத்தை விசாரிக்க கோரும் மேற்கு வங்க பாஜக!

Published on 27/04/2021 | Edited on 27/04/2021

 

hc - eci

 

இந்தியாவில் கரோனாவின் இரண்டாவது அலை தீவிரமாகி வருகிறது. இந்தநிலையில் தமிழகம், மேற்கு வங்கம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களின் சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை மே 2 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இந்தநிலையில், வாக்கு எண்ணிக்கையின்போது கரோனா தடுப்பு விதிகளைப் பின்பற்றக் கோரி கரூர் சட்டமன்றத் தொகுதியின் அதிமுக வேட்பாளரும், அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

 

இந்த வழக்கு நேற்று (26.04.2021) சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு, “கரோனா இரண்டாவது அலை பரவலுக்கு தேர்தல் ஆணையமே காரணம். அரசியல் கட்சிகளும் இஷ்டம் போல் பிரச்சாரம் செய்ததே கரோனா பரவலுக்கான காரணம். நீதிமன்றம் எவ்வளவு அறிவுறுத்தியும் தேர்தல் ஆணையம் காதில் வாங்கவில்லை. தேர்தல் ஆணையத்தின் மீது கொலைக் குற்றம் சுமத்தினாலும் தவறில்லை. பிரச்சாரம் நடந்தபோதெல்லாம் வேற்று கிரகத்தில் இருந்தீர்களா? கரோனா தடுப்பு விதிகளை முறையாகப் பின்பற்றாவிடில் வாக்கு எண்ணிக்கைக்குத் தடை விதிக்க நேரிடும்" என தேர்தல் ஆணையத்தை கடுமையாக விமர்சித்தது.

 

ad

 

இந்தநிலையில், சென்னை உயர் நீதிமன்றம், தேர்தல் ஆணையத்தை விமர்சித்ததில் சதி இருக்கிறதென்றும், இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும் எனவும் மேற்கு வங்க பாஜக செய்தித் தொடர்பாளர் சாமிக் பட்டாச்சார்யா கூறியுள்ளார். இதுகுறித்து அவர், "இதனை நீதித்துறை மீது முழு மரியாதையுடன் சொல்கிறேன். சென்னை உயர் நீதிமன்றத்தின் வார்த்தைகள் முழு நீதி அமைப்பையும் களங்கப்படுத்தியுள்ளது. மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கூறுவதும், சென்னை உயர் நீதிமன்றம் கூறியதும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியானவை. இதுகுறித்து விசாரிக்கப்பட வேண்டும்" என தெரிவித்துள்ளார்.

 

"மக்களுக்காகத்தான் நீதித்துறை அமைக்கப்பட்டுள்ளது. மக்களுக்காகத்தான் நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டுள்ளன. வேறு எதற்காகவும் இல்லை. ஜனநாயகத்தின் இடம் மிக உயர்ந்தது. எல்லா இடங்களிலும் ஜனநாயகம் வெல்லும்" என கூறியுள்ள சாமிக் பட்டாச்சார்யா, கரோனா இரண்டாவது அலை, செயற்கையான சிறிய (கரோனா) நெருக்கடி எதுவாக இருந்தாலும், அது தற்போதைய தேர்தலில் அற்பமான அரசியலுக்காக தவறாக பயன்படுத்தப்படுகிறது" என தெரிவித்துள்ளார்.

 

மேலும் அவர், "நீதிமன்றம் கூறிய அனைத்தும் மிகவும் வருத்தமளிப்பவை. இது ஒரு சதி. தேவைப்பட்டால் உச்ச நீதிமன்றம் இதுகுறித்து தானாக முன்வந்து நடவடிக்கை எடுக்கும் என நினைக்கிறேன்" என கூறியுள்ளார். உயர் நீதிமன்றம் தேர்தல் ஆணையம் குறித்து தெரிவித்த கருத்துகளுக்குப் பின் சதி இருப்பதாகவும், அதுகுறித்து விசாரிக்க வேண்டும் என பாஜக செய்தித் தொடர்பாளர் கூறியிருப்பது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'வாக்களித்த அனைவருக்கும் நன்றி'-பிரதமர் மோடி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'Thank you to all who voted' - PM Modi

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற முதல் கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ள நிலையில் பிரதமர் மோடி வரவேற்று எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், 'முதல்கட்ட வாக்குப்பதிவு நல்ல வரவேற்பை கொண்டுவந்துள்ளது. இன்று வாக்களித்த அனைவருக்கும் நன்றி. இன்றைய வாக்கெடுப்பில் இருந்து சிறப்பான கருத்துக்கள் வருகிறது. இந்தியா முழுவதும் மக்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு அதிக எண்ணிக்கையில் வாக்களிக்கிறார்கள் என்பது தெளிவாக தெரிகிறது' என தெரிவித்துள்ளார்.

Next Story

பாஜக-விசிக மோதல்; ஒருவருக்கு மண்டை உடைப்பு

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
BJP-vck clash; One suffered a fractured skull

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் அரியலூரில் பாஜக மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தரப்பினருக்கிடையே நடைபெற்ற மோதலில் ஒருவரின் மண்டை உடைக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே நரசிங்க பாளையத்தில் உள்ள வாக்குச்சாவடியில் பாஜக மற்றும் விசிகவினர் இடையே மோதல் ஏற்பட்டது. வாக்குச்சாவடி முகவர்களுக்கு உணவு கொடுக்க சென்ற போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் மோதல் வெடித்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதில் ஒருவரின் மண்டை உடைந்துள்ளது. மோதலில் காயமடைந்த அருண், அஜித் ,செல்வகுமார் ஆகியோர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அங்கு வாக்குப்பதிவு ஒரு மணி நேரத்திற்கு மேலாக பாதிக்கப்பட்டுள்ளது.