கடந்த ஆகஸ்ட் மாதம் உத்தரப்பிரதேச பள்ளிக்கூடத்தில் மதிய உணவுக்காக ரொட்டியும் உப்பும் கொடுத்த வீடியோ வெளியாகி பரபரப்பாகியது. இப்போது, ஒரு பள்ளியில் மதிய உணவுக்காக ஒரு லிட்டர் பாலில் தண்ணீரைக் கலந்து 81 மாணவர்களுக்கு கொடுத்த கொடுமை வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
பாலில் தண்ணீர் கலப்பதை கேள்விப்பட்ட நமக்கு, தண்ணீரில் பாலைக் கலந்த விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்துவது சகஜம்தான். ஏழை எளிய குழந்தைகளுக்கு சத்துணவு அளிப்பதற்காக ஏற்படுத்திய திட்டங்களிலும், மருத்துவ வசதி ஏற்படுத்தும் திட்டங்களிலும் உத்தரப்பிரதேச ஆதித்திய நாத் அரசு செய்யும் முறைகேடுகள் அடிக்கடி வெளியாவது குறிப்பிடத்தக்கது.