Skip to main content

"முகக் கவசம் அணிந்தால் 60 சதவீதம் கரோனா தொற்று குறையும்"- புதுவை முதல்வர் நாராயணசாமி பேட்டி!

Published on 12/07/2020 | Edited on 13/07/2020

 

 "Wearing a face mask reduces corona infection by 60 percent" - Narayanasamy interview!

 

புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி இன்று(12.07.2020) வெளியிட்டுள்ள வீடியோ செய்தியில்,

"கரோனா பரவக்கூடிய இடங்களாகக் கடைகள் உள்ளன. திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் அதிகபேர் கூடி சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காமல் இருப்பதாலும் அதிகமாகப் பரவுகிறது. இதனால் நோய்ப் பரவுவதைத் தடுக்க மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். முகக் கவசம் அணிந்திருந்தால் 60 சதவீதம் குறையும் என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. கரோனா நோய்த் தொற்று இருப்பவர்களுடன் பழகுவதால் தற்போது இது பரவுகிறது.

இந்தியாவை பொருத்துவரை 8 லட்சத்திற்கு அதிகமானோர் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 2 ஆயிரம் பேர் வரை உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் கரோனா தற்போது அதிகரித்து வருகிறது. அதனால் கரோனா நோய்த் தொற்றுடன் நாம் வாழப் பழகிக்கொள்ளவேண்டும். தொடர்ந்து நோய்த் தொற்று அதிகரித்து வருவதால் செலவுகளைச் சமாளிக்க அதிகப்படியான நிதி தேவைப்படுகிறது. மாநில அரசுக்கு பல்வேறு நிறுவனங்கள் நிதி உதவி வழங்கி உதவி வருகின்றன. இது தொடர வேண்டும். கோவிட் நிவாரண நிதியில் இருந்து பல்வேறு உதவிகள் செய்யப்பட்டு வருகின்றது.

யூ.சி.ஜி உத்தரவின் அடிப்படையில் பல்வேறு பல்கலைக்கழகங்கள் தேர்வு நடத்த அறிவுறித்தியுள்ளன. அதன்படி புதுச்சேரி பல்கலைக்கழக மாணவர்கள் என்னைச் சந்தித்துத் தேர்வைத் தள்ளிவைக்கக் கோரிக்கை வைத்துள்ளனர். கரோனா நோய் அதிகரித்து வருவதால் மாணவர்கள் செமஸ்டரில் வாங்கிய மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வு செய்ய மத்திய அரசுக்குக் கடிதம் எழுதியுள்ளேன்'' இவ்வாறு அவர் கூறினார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'100 நாள் வேலை ஊதியம்' - மத்திய அரசு வெளியிட்ட திடீர் அரசாணை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
'100 days of work wages'- Sudden decree issued by the central government

100 நாள் வேலை ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் ஊதியத்தை 319 ரூபாயாக உயர்த்தி ஒன்றிய அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

தற்பொழுது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் தேர்தல் ஆணையத்தின் அனுமதியைப் பெற்று இந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலம் வாரியாக 100 நாள் வேலைத் திட்டத்திற்கான ஊதியத்தை ஏற்கனவே அதிகரித்து மத்திய அரசு அறிவித்து வெளியிட்டிருந்த நிலையில் இதற்கான அரசாணை தற்போது வெளியிட்டுள்ளது.

அண்மையில் மகளிர் தினத்தின் போது சமையல் சிலிண்டர் விலை குறைப்பு நடவடிக்கையில் ஒன்றிய அரசு  ஈடுபட்ட நிலையில், தேர்தல் நேரத்தில் பாஜக அரசு வாக்குகளைப் பெற இதுபோன்ற சலுகைகளை அறிவிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன. இந்நிலையில் தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் 100 நாள் வேலையின் ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு வழங்கியுள்ளதையும் எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.

Next Story

லிஸ்டில் உள்ள 737 பேர்; இன்றே கடைசி நாள்

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
737 people on the list; Today is the last day

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

மார்ச் 20 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கிய நிலையில், 27 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்யக் கடைசி நாள் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி இன்று கடைசி நாளாகும். தமிழ்நாட்டின் 39 தொகுதிகள் உட்பட 102 தொகுதிகளுக்கான வேட்புமனு தாக்கல் இன்று நிறைவு பெறுகிறது. நாளை வேட்புமனு பரிசீலனை நடைபெறுகிறது. நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடத் தமிழ்நாட்டில் இதுவரை 737 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். 39 தொகுதிகளில் இதுவரை ஆண்கள் 628 பேரும், பெண்கள் 109 பேரும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளதாகத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.