pawan kalyan

நடிகராக இருந்து அரசியல்வாதியாக மாறிய பவன் கல்யாண், டிசம்பர் 7ஆம் தேதி நடக்க இருக்கும் தெலுங்கானா சட்டப்பேரவை தேர்தலில் கலந்துகொள்ள போவதில்லை என்று தெரிவித்துள்ளார்.

Advertisment

ஜன சேனா கட்சி தெலுங்கானா சட்ட மன்ற தேர்தலில் கலந்துகொள்ள போவதில்லை, அடுத்த வருடம் நடக்க இருக்கும் மக்களவை தேர்தலில் கலந்துகொள்ள உள்ளது என்று அக்கட்சியின் தலைவர் கூறியுள்ளார்.

Advertisment

”ஏற்கனவே போடப்பட்ட திட்டப்படி ஏப்ரல் 2019 ஆம் ஆண்டு தெலுங்கானா சட்டமன்ற தேர்தல் நடைபெற்றிருந்தால், ஜன சேனா கட்சி கண்டிப்பாக போட்டியில் கலந்துகொண்டிருக்கும். ஆனால், சட்டமன்ற தேர்தல் முன்னரே அறிவிக்கப்பட்டதால், நாங்கள் இன்னும் போட்டிக்கு தயாராகவில்லை. உணர்ச்சிமயமான கட்சியான எங்களுக்கு மிகவும் கடினமானது” என்றார்.