Skip to main content

கரோனா தடுப்பூசி: பூஸ்டர் ஷாட் தேவைப்படலாம் - எய்ம்ஸ் இயக்குநர் தகவல்!

Published on 24/07/2021 | Edited on 24/07/2021

 

Randeep Guleria,

 

உலகின் பல்வேறு நாடுகளில் 12 வயதுக்கும் மேற்பட்டவர்களுக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டுவருகிறது. இந்தநிலையில் இந்தியாவில், 18 வயதுக்கும் குறைவானவர்கள் மீது கரோனா தடுப்பூசி சோதனை நடைபெற்றுவருகிறது. இதற்கிடையே எய்ம்ஸ் இயக்குநர் ரந்தீப் குலேரியா, குழந்தைகளுக்கான தடுப்பூசி செப்டம்பர் மாதம் முதல் பயன்பாட்டிற்கு வரலாம் என தெரிவித்துள்ளார்.

 

இதுதொடர்பாக அவர், "குழந்தைகள் மீதான தடுப்பூசி சோதனை நடந்துவருகிறது. குழந்தைகள் மீதான கோவாக்சின் தடுப்பூசி சோதனை இறுதிக்கட்டத்தில் உள்ளது. அதன் தரவுகள் செப்டம்பரில் வெளியாகும். ஸைடஸ் காடிலா நிறுவனத்தின் தடுப்பூசி சோதனையும் குழந்தைகள் மீது (12+) நடத்தப்பட்டது. அதன் தரவுகள் ஏற்கனவே சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அத்தடுப்பூசிக்கு அவசரகால அங்கீகாரம் கேட்டு விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. அடுத்த சில வாரங்களிலோ அல்லது செப்டம்பரிலோ குழந்தைகளுக்கான தடுப்பூசி பயன்பாட்டிற்கு வரும்" என தெரிவித்துள்ளார்.

 

மேலும், மக்களுக்குத் தடுப்பூசி பூஸ்டர்கள் (மூன்றாவது டோஸ்) தேவைப்படலாம் என்றும் ரந்தீப் குலேரியா கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர், "காலப்போக்கில் நோய்எதிர்ப்பு சக்தி குறையுமென்பதால், நமக்குப் பூஸ்டர் டோஸ் தேவைப்படலாம். உருவாகிவரும் மரபணு மாற்றமடைந்த கரோனாக்களுக்கு எதிராக பாதுகாப்பு அளிக்கும் வகையில் பூஸ்டர் டோஸ் வேண்டுமென்று நாங்கள் விரும்புகிறோம். பூஸ்டர் டோஸ்கள் ஏற்கனவே சோதனையில் இருக்கிறது" என தெரிவித்துள்ளார்.

 

மக்கள் அனைவருக்கும் முழுமையாக கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட பிறகே, பூஸ்டர் ஷாட்கள் செலுத்தப்படும் என ரந்தீப் குலேரியா கூறியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

 

   

சார்ந்த செய்திகள்

Next Story

6 முதல் 12 வயதினருக்கு கோவாக்சின் தடுப்பூசி செலுத்த அனுமதி

Published on 26/04/2022 | Edited on 26/04/2022

 

Permission granted to covaxin vaccine to 6 to 12 year olds

 

6 முதல் 12 வயதினருக்கு கோவாக்சின் தடுப்பூசி செலுத்துவதற்கான அனுமதியை மத்திய மருந்துகள் தரக்கட்டுப்பாட்டு அமைப்பு வழங்கியுள்ளது.  

 

6 முதல் 12 வயதினருக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் விரைவில் தொடங்கும் என இந்திய அரசு தெரிவித்திருந்த நிலையில், 6 முதல் 12 வயதினருக்கு கோவாக்சின் தடுப்பூசி செலுத்துவதற்கான அனுமதியை மத்திய மருந்துகள் தரக்கட்டுப்பாட்டு அமைப்பு வழங்கியுள்ளது.  தற்போது 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் டோஸ் செலுத்தும் பணிகள் நடைபெற்றுவரும் நிலையில், விரைவில் 6 முதல் 12 வயதினருக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.   

 

 

Next Story

கரோனா தடுப்பூசிகள் விலை குறைப்பு!

Published on 09/04/2022 | Edited on 09/04/2022

 

Corona vaccine price reduction!

 

நாடு முழுவதும் நாளை (10/04/2022) முதல் 18 வயதிற்கு மேற்பட்டோருக்கு பூஸ்டர் எனப்படும் கரோனா தடுப்பூசி செலுத்தப்படும் நிலையில், அவற்றின் விலை குறைக்கப்பட்டுள்ளது. 

 

தனியார் மருத்துவமனைகளும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதால், கரோனா தடுப்பூசி மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் விலையைக் குறைத்துள்ளனர். அதன்படி, கோவிஷீல்டு தடுப்பூசி ஒரு டோஸுக்கு ரூபாய் 600 ஆக விலை நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில், அதனை ரூபாய் 225 ஆக சீரம் இன்ஸ்டிடூட் ஆஃப் இந்தியா குறைத்துள்ளது. இதேபோல், கோவாக்சின் மருந்தின் விலையையும் ரூபாய் 1,200- லிருந்து ரூபாய் 225 ஆக பாரத் பயோடெக் நிறுவனம் குறைத்து நிர்ணயித்துள்ளது. 

 

இதனுடன் மருத்துவமனைகள் சேவைக் கட்டணமாக, ரூபாய் 150 வசூலித்துக் கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.