Wayanad Landslide The toll rises further

தொடர் கனமழையால் கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் முண்டக்கை என்ற இடத்தில் நேற்று (30.07.2024) நள்ளிரவு 1 மணியளவில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. அங்கு மீட்புப் பணிகள் நடைபெற்று வந்த நிலையில் அதிகாலை 4 மணியளவில் சம்பவம் நடைபெற்ற இடத்தில் இருந்து சுமார் 2 கி.மீ தொலைவில் சூரல்மலா என்ற இடத்தில் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த இரு நிலச்சரிவில் சுமார் 500 வீடுகள் மற்றும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சிக்கி உள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகி இருந்தது. இந்த நிலச்சரிவில் சிக்கி குழந்தைகள் உட்பட பலர் உயிரிழந்தனர்.

Advertisment

நேற்று (30.07.2024) மாலை 06.30 மணி நிலவரப்படி இந்த நிலச்சரிவில் சிக்கி 106 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகி இருந்தது. குழந்தைகள் உட்பட 106 பேரின் சடலங்கள் இதுவரை மீட்கப்பட்டன. அதோடு நிலச்சரிவில் சிக்கி மண்ணில் புதைந்த 1000க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மண் மற்றும் கட்டிட இடிபாடுகளில் சிக்கிய 98 பேரைக் காணவில்லை என்று கேரள அரசு வட்டாரங்கள் தெரிவித்திருந்தது.

Advertisment

Wayanad Landslide The toll rises further

இதனையொட்டி நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் இந்திய விமானப்படை ஹெலிகாப்டர்கள் சூரல்மலா பகுதியில் தரையிறக்கப்பட்டு இரண்டாவது நாளாக இன்றும் (31.07.2024) மீட்புப்பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி மண்ணில் புதையுண்டு இதுவரை 146 பேர் உயிரிழந்துள்ளதாகவும், இந்த 146 பேரின் உடல்கள் இதுவரை மீட்பு மீட்கப்பட்டுள்ளதாகவும் கேரள சுகாதாரத் துறை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும் இந்த நிலச்சரிவில் சிக்கி 98 பேரைக் காணவில்லை எனக் கேரள அரசு தெரிவித்துள்ளது.

இத்தகைய சூழலில் தான் தமிழக அரசின் பேரிடர் மீட்புப் படையினர், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் குழுவினர் மற்றும் மருத்துவக் குழுவினர் இன்று அதிகாலை 4 மணிக்கு வயநாடு சென்றடைந்தனர். இவர்களோடு வயநாடு சென்ற தமிழக அரசின் இரண்டு மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளான கீ.சு. சமீரன் மற்றும் ஜானி டாம் வர்கீஸ் ஆகியோர் கேரளா மாநில அரசின் மூத்த அதிகாரியுடன் ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனையைத் தொடர்ந்து வயநாடு மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து தமிழக அரசு அதிகாரிகள் இன்று முதல் மீட்புப் பணியில் ஈடுபட உள்ளனர்.

Advertisment