உத்தரப்பிரதேசம் மாநிலம்,பிரதாப்கர்மாவட்டத்தில் கட்டப்பட்டு வரும், அரசு பொறியியல் கல்லூரியின் சுவர் தொட்டாலே உதிர்ந்து விழும் காட்சிகள் வெளியாகியுள்ளன.
ஷிம்செட்கிராமத்தில் கட்டப்பட்டு வரும் அரசு பொறியியல் கல்லூரியைசமாஜ்வாதிகட்சியின் சட்டமன்ற உறுப்பினர் ஆய்வு மேற்கொண்டார். கல்லூரியின் சுவரைத் தொட்டபோது, அது பொலபொலவென உதிர்ந்து கீழே விழுந்துள்ளது, இந்தவீடியோட்விட்டர்,ஃபேஸ்புக்போன்ற சமூக வலைத்தளங்களில்வைரலாகிவருகிறது. இதனை விமர்சனம் செய்துசமாஜ்வாதிகட்சியின் தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான அகிலேஷ்யாதவ்தனது அதிகாரப்பூர்வட்விட்டர்பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில்,சிமெண்ட்இல்லாமல், கல்லூரி கட்டடம் கட்டப்பட்டு வருவது வியப்பளிக்கிறது என்றும், இது பாரதிய ஜனதா ஆட்சியின் ஊழலை வெளிப்படுத்துவதாகவும் தெரிவித்துள்ளார்.