இந்தியாவில் மக்களவை தேர்தல் ஏழு கட்டங்களாக நடைப்பெற்று வருகிறது . இந்த மக்களவை தேர்தலில் இந்திய தேர்தல் ஆணையம் மக்கள் தாங்கள் யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதிப்படுத்தும் வகையில் (VVPAT- VOTER VERIFIED AUDIT TRAIL) என்ற இயந்திரத்தை அனைத்து வாக்குச்சாவடி மையத்தில் வைத்து நடைமுறைப்படுத்தியுள்ளது . மேலும் இது தொடர்பாக சந்தேகங்கள் இருப்பதாக கூறி உச்சநீதிமன்றத்தில் காங்கிரஸ் , திரிணாமூல் காங்கிரஸ் கட்சி உள்ளிட்ட எதிர்கட்சிகள் வழக்கு தொடர்ந்துள்ளனர் .
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="7632822833" data-ad-format="auto" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/IMG_20190503_111509 (2).jpg)
அந்த வழக்கில் வாக்கு எண்ணிக்கையுடன் , 50% ஒப்புகைச் சிட்டையும் எண்ண வேண்டும் என்பது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனுவை தாக்கல் செய்துள்ளனர் . இந்த மனு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் அடுத்த வாரம் நடைபெறுகிறது . ஏற்கெனவே இந்திய தேர்தல் ஆணையம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் இது தொடர்பாக பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது . அதில் வாக்கு எண்ணிக்கையுடன் , ஒப்புகைச்சீட்டையும் எண்ணினால் வாக்கு இறுதி முடிவுகள் வெளியீட காலதாமதமாகும் . எனவே ஒப்புகை சீட்டை எண்ணுவது இயலாதது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது . இருப்பினும் வழக்கை விசாரித்து உடனே உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)