Skip to main content

'விவிபேட்' ஒப்புகைச் சீட்டுகள் எண்ணப்படுவதால் முன்னணி நிலவரங்கள் வெளிவர மாலை வரை ஆகலாம்?

Published on 07/05/2019 | Edited on 07/05/2019

உச்சநீதிமன்றத்தில் 21 எதிர்கட்சிகள் தொடர்ந்த விவிபேட் (VVPAT) ஒப்புகைச் சீட்டுக்களை 50% எண்ண வேண்டும் என்பது தொடர்பான மறு சீராய்வு மனு மீதான விசாரணை இன்று நடைப்பெற்றது. இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு எதிர்கட்சிகள் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்தது.கடந்த ஏப்ரல் 8 ஆம் தேதி விசாரணை நடத்திய நீதிமன்றம் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிகளிலும் , 5 வெவ்வேறு பகுதிகளை சார்ந்த வாக்குக்கு பதிவு இயந்திரங்களையும் , அதே விவிபேட் (VVPAT)இயந்திரத்தில் பதிவான ஒப்புகைச் சீட்டுகளையும் ஒப்பிட்டு பார்க்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனால் மே - 23 அன்று வாக்கு எண்ணிக்கையின் போது இந்தியாவில் சுமார் 20000 வாக்குப்பதிவு இயந்திரங்களுடன் , விவிபேட் ஒப்புகைச் சீட்டுகள் ஒப்பிட்டு பார்க்கப்படுவது என்பது குறிப்பிடத்தக்கது.  

 

 

vvpat

 

 

இதற்கு இந்திய தேர்தல் ஆணையமும் ஒப்புதல் அளித்துள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்த காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அபிஷேக் சிங்வி உச்சநீதிமன்ற தீர்ப்பை மதிப்பதாகவும் , ஆனால் எதிர்கட்சிகள் விடுத்த கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்தது என்று கூறினார். மேலும் அவர் கூறுகையில் விவிபேட் ஒப்புகைச் சீட்டுகளை 5-ல் இருந்து 50% உயர்த்தி வாக்குப்பதிவு இயந்திரத்துடன் விவிபேட் இயந்திரத்தில் -ல்  பதிவான ஒப்புகைச் சீட்டுகளை ஒப்பிட்டு பார்க்க வேண்டும் என்பது தான் என தெரிவித்துள்ளார். இந்த வழக்கு விசாரணையை  பார்வையிட ஆந்திரா மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு உச்சநீதிமன்றத்திற்கு வருகை தந்தார். இந்திய தேர்தல் வரலாற்றில் முதன் முறையாக வாக்கு எண்ணிக்கையின் போது வாக்குப்பதிவு இயந்திரத்துடன் , விவிபேட் இயந்திரத்தில் பதிவான  ஒப்புகை சீட்டுகளையும் ஒப்பிட்டு பார்ப்பது ஆகும். இதனால் 17-மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள்  எண்ணிக்கையின் போது  இறுதி முடிவுகள் வெளியாக மாலை வரை ஆகலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.இதற்கு முன்னர் நடந்த முடிந்த மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகளின் முன்னணி நிலவரம் சுமார் மதியம் - 1.00 மணிக்குள் தெரிந்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.இந்த தேர்தல்  முழுவதும் புதிய நடைமுறைகளை இந்திய தேர்தல்  ஆணையம் கையாள்வதால் எண்ணிக்கையின் போது முன்னணி நிலவரங்கள் அதிக தாமதமாக தான் வெளிவரும் என்பதில் மாற்று கருத்து இருக்க முடியாது.

VVPAT SLIP COUNTING (5%) + ELECTRONIC VOTING MACHINEs(VOTE COUNTING 5%) : "ELECTION COMMISSION OF INDIA"

சார்ந்த செய்திகள்

Next Story

4 மாநில தேர்தல் முடிவுகள் - முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து

Published on 03/12/2023 | Edited on 03/12/2023

 

4 state election results  Chief Minister M. K. Stalin's greetings
கோப்புப்படம்

 

தெலுங்கானா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய ஐந்து மாநிலங்களில் பல கட்டங்களாகத் தேர்தல்கள் நடந்து முடிந்துள்ளன. இதனையடுத்து மிசோரத்தை தவிர்த்து மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், தெலுங்கானா, சத்தீஸ்கர் ஆகிய நான்கு மாநிலங்களில் சட்டசபைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகிறது.

 

தற்போதைய வாக்கு எண்ணிக்கையின் முன்னிலை நிலவரப்படி, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய 3 மாநிலங்களில் பாஜக ஆட்சி அமைக்க உள்ளது. தெலங்கானாவில் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்க உள்ளது. இந்த சூழலில் தேர்தலில் வெற்றி பெற்றவர்களுக்குப் பலரும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

 

இந்நிலையில் 4 மாநில சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றவர்களுக்குத் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் சமூக வலைத்தள பதிவில், “தெலங்கானா, மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான் ஆகிய 4 மாநில சட்டமன்றத் தேர்தல்களில் வெற்றி பெற்ற கட்சிகளுக்கு வாழ்த்துகள். அனைத்துப் பிரிவினருக்கும் சாதகமான மாற்றம், முன்னேற்றம் மற்றும் செழிப்பு ஆகியவற்றால் நிரப்பப்பட்ட ஒரு காலமாக, வெற்றி பெற்றவர்களின் ஆட்சிக்காலம் அமைய வாழ்த்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார். 

 

 

Next Story

புதுப்பள்ளியில் மீண்டும் வாகை சூடிய காங்கிரஸ்

Published on 08/09/2023 | Edited on 08/09/2023

 

kerala puthuppally constituency by election Congress took oath again

 

கேரள மாநில முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி (வயது 80) உடல் நலக்குறைவு காரணமாகப் பெங்களூருவில் கடந்த ஜூலை 18 ஆம் தேதி அதிகாலை 04.25 மணியளவில் காலமானார். கேரள மாநில மூத்த காங்கிரஸ் தலைவரான உம்மன் சாண்டி கடந்த 2004 முதல் 2006 ஆம் ஆண்டு வரையிலும், 2011 ஆம் ஆண்டு முதல் 2016 ஆம் ஆண்டு வரை என இருமுறை கேரள மாநில முதலமைச்சராகப் பதவி வகித்தவர். கேரளாவில் உள்ள கோட்டயம் மாவட்டம் புதுப்பள்ளி சட்டமன்றத் தொகுதியில் 1970 முதல் 2021 வரை காங்கிரஸ் கட்சி சார்பாக 12 முறை வெற்றி பெற்றுத் தொடர்ந்து 52 ஆண்டுகளுக்கும் மேலாகச் சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர். இத்தனை ஆண்டுகள் சட்டமன்ற உறுப்பினராக இருந்த இந்தியாவின் ஒரே அரசியல் தலைவர் கேரளாவின் முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி.

 

உம்மன் சாண்டியின் மறைவைத் தொடர்ந்து அவர் சட்டமன்ற உறுப்பினராகப் பதவி வகித்து வந்த புதுப்பள்ளி சட்டமன்றத் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. அதே சமயம் நாடு முழுவதும் உள்ள 6 மாநிலங்களில் காலியாக உள்ள புதுப்பள்ளி தொகுதி உட்பட 7 சட்டமன்றத் தொகுதிகளுக்கு கடந்த 5 ஆம் தேதி இடைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. இதையடுத்து இடைத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

 

புதுப்பள்ளி இடைத்தேர்தலில் பதிவான வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்தே காங்கிரஸ் கட்சி வேட்பாளர் சாண்டி உம்மன் முன்னிலை வகித்து வந்தார். இந்நிலையில் புதுப்பள்ளி இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் சாண்டி உம்மன் 78 ஆயிரத்து 98 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். 41 ஆயிரத்து 644 வாக்குகளுடன் சிபிஎம் கட்சி  2 ஆம் இடமும், பாஜக 6,447 வாக்குகளுடன் 3 ஆம் இடமும் பிடித்தன. தொடர்ந்து 50 ஆண்டுகளுக்கு மேலாக காங்கிரஸ் வசமிருந்த இந்த தொகுதியை மீண்டும் காங்கிரஸ் கட்சி தக்க வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.