Advertisment

தெலங்கானாவில் வாக்குப்பதிவு தொடங்கியது

Voting has started in Telangana

தெலங்கானா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய ஐந்து மாநிலங்களில் தேர்தல் தேதியைக் கடந்த அக்டோபர் மாதம் 9 ஆம் தேதி அன்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்பிருந்தே இந்த ஐந்து மாநிலங்களிலுமே அரசியல் கட்சிகள் தீவிரமாகத் தங்கள் தேர்தல் பணிகளை மேற்கொண்டு வந்தனர். சில மாநிலங்களில் தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்பே தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டனர். இதில் சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், மிசோரம் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது.

Advertisment

அதே சமயம் தெலங்கானாவில் அரசியல் கட்சியினர் தீவிர பிரச்சாரம் மற்றும் பொதுக்கூட்டங்களை நடத்தி வந்த நிலையில், நேற்று முன்தினம் (28.11.2023) மாலையுடன் தேர்தல் பிரச்சாரம் நிறைவடைந்தது. இங்கு ஆளும் கட்சியான பி.ஆர்.எஸ். கட்சிக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் இடையேதான் நேரடி போட்டி நிலவி வருகிறது. இந்நிலையில் தெலங்கானா மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று (30.11.2023) காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. மொத்தம் உள்ள 119 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

Advertisment

இந்த 119 தொகுதிகளில் 2,290 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 13 தொகுதிகளில் மட்டும் மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. மற்ற தொகுதிகளில் மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தலில் மொத்தம் 3 கோடியே 25 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்கத்தகுதி பெற்றுள்ளனர். சுமார் 50 ஆயிரம் காவல்துறையினர் மற்றும் 375 கம்பெனி துணை ராணுவப் படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்தத் தேர்தலில் பதிவாகும் வாக்குகள் டிசம்பர் 3 ஆம் தேதிஎண்ணப்படவுள்ளது.

telangana Voting
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe