Skip to main content

கழுத்தை நெறிக்கும் கடன்; திவாலாகிறதா வோடாஃபோன் - ஐடியா? தற்போதைய நிலை என்ன..?

Published on 06/08/2021 | Edited on 06/08/2021

 

 Vodafone-Idea bank loans government

 

திணறடிக்கும் கடன் சுமையால் திண்டாடிவரும் வோடாஃபோன் - ஐடியா நிறுவனம், திவாலாகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என அந்த நிறுவனத்தின் உரிமையாளர்கள் தெரிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 27 கோடி வாடிக்கையாளர்களைக் கொண்ட இந்த நிறுவனம் திவாலானால் 10,000க்கும் மேற்பட்டோர் வேலை இழப்பர் என்பதும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. 

 

நாட்டின் மிகப்பெரிய டெலிகாம் நிறுவனங்களில் ஒன்றான வோடாஃபோன் - ஐடியா, திவாலாகும் சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பதற்கு காரணம் தெரியவந்திருக்கிறது. 1.8 லட்சம் கோடி ரூபாய் கடன் இருப்பதும், தற்போது அதை அடைக்க போதிய வருமானம் இல்லை என்பதும் அந்நிறுவன உரிமையாளர்களின் நிலைப்பாடு. இந்த நிறுவனத்தில் 26% உரிமையாளராக உள்ள குமாரமங்கலம் பிர்லா, தனது பங்குகளை இலவசமாக அரசு தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்குத் தருவதாவும், அரசே வோடாஃபோன் - ஐடியா நிறுவனத்தை எடுத்து நடத்த வேண்டும் எனவும் கோரியுள்ளார். 

 

இதேபோல் 45% உரிமையை வைத்திருக்கும் பிரிட்டனின் வோடாஃபோன் நிறுவனம் தனது பங்குகளையும் இலவசமாக கொடுக்கத் தயாராக இருப்பதாக வங்கிகளுக்குத் தெரிவித்துள்ளது. வோடாஃபோன் - ஐடியா நிறுவனத்திடம் தற்போது 350 கோடி ரூபாய் மட்டுமே கையிருப்பில் உள்ளதாகவும், நிறுவனத்தைத் தொடர்ந்து நடத்த முடியாத நிலையில் உரிமையாளர்கள் இருப்பதாகவும் அரசுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வோடாஃபோன் - ஐடியா நிறுவனம் மத்திய அரசுக்கு மட்டுமே ரூபாய் 1.50 லட்சம் கோடிக்கு மேல் செலுத்த வேண்டியுள்ளது. 

 

வங்கிகளிடமிருந்து பெறப்பட்டுள்ள ரூபாய் 23,000 கோடி கடனுக்கான வட்டியையோ, அசலையோ திரும்பச் செலுத்தும் வழி தெரியாமல் அந்நிறுவனம் திணறிக்கொண்டிருக்கிறது. வோடாஃபோன் - ஐடியா நிறுவனத்தின் ஒரு பங்கு வெறும் 6 ரூபாய்க்கு வணிகம் ஆகும் நிலை உருவாகியுள்ளது. இந்நிறுவனத்துக்கு கடன் வழங்க வங்கிகள் தயங்குவதால், வோடாஃபோன் - ஐடியா நிறுவனம் திவாலாகுமா, அதை மீட்க அரசு தலையிடுமா என்பதே இப்போதைய கேள்வியாக உள்ளது. 

 

ஒரு காலகட்டத்தில் இந்தியாவில் 14 டெலிகாம் சேவை நிறுவனங்கள் இருந்தன. கடும் போட்டி காரணமாக ஜியோ, ஏர்டெல் ஆகிய இரண்டு தனியார் டெலிகாம் நிறுவனங்கள், அரசு தரப்பில் பிஎஸ்என்எல், எம்டிஎன்எல் என டெலிகாம் துறை தற்போது சுருங்கிவருகிறது. வோடாஃபோன் - ஐடியா நிறுவனத்தின் டெலிகாம் சேவையை இந்திய டெலிகாம் வாடிக்கையாளர்களில் 23% பேர் பயன்படுத்திவரும் நிலையில், இந்நிறுவனம் திவாலானால், இவர்களின் செல்ஃபோன் மற்றும் இன்டர்நெட் சேவைகள் பாதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஒரே ட்வீட்... உலக பேமஸ் ஆன தாத்தா

Published on 28/09/2023 | Edited on 28/09/2023

 

 A single tweet... a world famous grandfather

 

ட்விட்டரில் ராஜீவ் மேத்தா என்பவர் வெளியிட்ட பதிவு ஆச்சரியத்தை ஏற்படுத்த ஒரே நாளில் உலக பேமஸ் ஆகியுள்ளார் ஒரு முதியவர்.

 

ராஜீவ் மேத்தா என்பவர் வெளியிட்ட ட்விட்டர் வீடியோ பதிவில் கால் சட்டையுடன் நிற்கும் முதியவர் ஒருவரிடம் பேட்டி எடுத்து வெளியிட்டுள்ளார். அதில் பேசும் அந்த முதியவர் தனக்கு எல்.என்.டியில் 80 கோடி ரூபாய் மதிப்புள்ள பங்குகளை வைத்துள்ளேன். 21 கோடி ரூபாய் மதிப்புள்ள அல்ட்ரா டெக் சிமெண்ட் நிறுவன பங்குகள்; ஒரு கோடி ரூபாய் மதிப்புடைய கர்நாடக வங்கியின் பங்குகளை வைத்திருப்பதாகவும், இருந்தாலும் தான் எளிய வாழ்க்கை தான் வாழ்ந்து வருவதாய் அசால்ட்டாக புட்டு புட்டு வைத்தார். ஆனால், இது உண்மையா பொய்யா என தெரியாமல் வீடியோவை பார்ப்பவர்கள் குழம்பி வருகின்றனர். சிலர் அந்த முதியவர் 10 கோடி ரூபாய் மதிப்புள்ள பங்குகளை தான் வைத்துள்ளார். ஆனால் மாற்றி சொல்கிறார் என்றும் தெரிவித்து வருகின்றனர். எப்படியோ ஒரே நாளில் பேமஸ் ஆகிவிட்டார் அந்த தாத்தா.

 

 

 

Next Story

திருநங்கைகளை ‘சாதி’யாக வகைப்படுத்திய அரசு; சர்ச்சையைக் கிளப்பிய சாதிவாரி கணக்கெடுப்பு

Published on 08/04/2023 | Edited on 08/04/2023

 

Bihar government classified third genders as caste code  census

 

இந்தியாவில் இட ஒதுக்கீடு உள்ளிட்ட சில காரணங்களுக்காக நாடு முழுவதும் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் எனப் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தி வரும் நிலையில், பீகாரில் முதல்முறையாக சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு தொடங்கியுள்ளது. கடந்த ஜூலை மாதம் பீகாரில் இதற்காக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி ஆலோசிக்கப்பட்ட நிலையில், முதல்வர் நிதிஷ்குமார் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு உத்தரவிட்டிருந்தார். 

 

இரண்டு கட்டங்களாக நடைபெறவுள்ள இந்த கணக்கெடுப்பு முதற்கட்ட பணி ஏற்கனவே முடிவடைந்த நிலையில், அதன் இரண்டாம் கட்ட பணிகள் இந்த மாதம் 15 ஆம் தேதி தொடங்கி அடுத்த(மே) மாதம் 15 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.  அதன்படி ஒவ்வொரு சாதிக்கும் ஒரு குறிப்பிட்ட எண் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் உட்பிரிவுகள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுவதில்லை. அதனால் சாதியில் எத்தனை உட்பிரிவு இருந்தாலும், அவர்கள் அனைவரும் அந்த சாதிக்கு ஒதுக்கப்பட்ட எண்ணில்தான் கணக்கிடப்படுகிறார்கள். 

 

இந்த நிலையில் மூன்றாம் பாலினத்தவரான திருநங்கைகளை சாதிவாரி கணக்கெடுப்பில் ஒரு சாதி என்று வகைப்படுத்தியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அந்த கணக்கெடுப்பில் அவர்களுக்கு 22 என்ற எண்ணானது ஒதுக்கப்பட்டு அதற்குள் அவர்களை உள்ளடக்கியுள்ளனர். இதற்கு பீகாரில் உள்ள சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.