Skip to main content

சர்ச்சையில் நரேந்திரமோடி பட நாயகன்... நோட்டீஸ் விட்ட பெண்கள் ஆணையம்...

Published on 20/05/2019 | Edited on 20/05/2019

17வது மக்களவை தேர்தல் இந்தியாவில் 7 கட்டங்களாக நடைபெற்று முடிந்துள்ளது. இந்த தேர்தலுக்கான வாக்கெண்ணிக்கை வருகிற 23ஆம் தேதி நடைபெறுகிறது. இந்நிலையில் பல செய்தி நிறுவனங்கள் தங்களின் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பை வெளியிட்டனர். அந்த தேர்தல் முடிவுகளில் பாஜகவுக்கு சாதகமாகவே அமைந்துள்ளது. இது தொடர்பாக பலரும் தங்களின் கருத்தை பதிவு செய்து வருகிறார்கள்.
 

modi

 

 

நடிகர் விவேக் ஓபராய் சர்ச்சையான கருத்து ஒன்றை பதிவிட்டு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார். அவர் பதிவிட்டுள்ள மீமில் ஐஸ்வர்யா ராயை அவமானப்படுத்தும் விதமாக இருக்கிறது.
 

இந்நிலையில் இதற்கு விளக்கம் கேட்டு விவேக் ஓபராய்க்கு தேசிய பெண்கள் ஆணையம் நோட்டீஸ்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அஜித்தை தொடர்ந்து விஜய்யுடன் மோதும் பிரபல நடிகர்

Published on 10/03/2022 | Edited on 10/03/2022

 

Vivek Oberoi play negative role vijay thalapathy66 film

 

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் 'பீஸ்ட்' படத்தில் நடித்து முடித்துள்ளார். இதில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். அனிருத் இசையமைக்கும் இப்படத்தை சன் பிக்சர்ஸ்  நிறுவனம் தயாரிக்கிறது. இறுதிக்கட்ட பணியில் தீவிரம் காட்டி வரும் படக்குழு, ஏப்ரல் மாதம் பீஸ்ட் படத்தை திரையரங்கில் வெளியாகும் என அறிவித்துள்ளது.

 

இப்படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் பிரபல தெலுங்கு இயக்குநர் வம்சி பைடிப்பள்ளி இயக்கும் 'தளபதி 66' படத்தில் நடிக்கவுள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ள இப்படத்தைப் பிரபல தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கவுள்ளார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

 

இந்நிலையில் தளபதி 66 படத்தில் பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித்தின் நடிப்பில் வெளியான 'விவேகம்' படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதனைத்தொடர்ந்து தற்போது 'தளபதி 66' படத்தில் விஜய்க்கு வில்லனாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் இது குறித்த எந்த அறிவிப்பும் இதுவரை வெளியாகாத நிலையில் சமூக வலைத்தளங்களில் தீயாக பரவி வருகிறது.

 

 

Next Story

அபராதம் விதித்த போலீசாருக்கு நன்றி தெரிவித்த நடிகர் விவேக் ஓபராய்!

Published on 20/02/2021 | Edited on 20/02/2021

 

Vivek Oberoi

 

பிரபல பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய், காதலர் தினத்தன்று தனது மனைவியுடன் இருசக்கர வாகனத்தில் பயணித்த வீடியோ ஒன்றை சமூக வலைதளத்தில் பதிவிட்டார். அந்த வீடியோ பதிவில், அவர் முகக்கவசம், தலைக்கவசம் இல்லாமல் பயணித்தது தெரியவந்தது. இதனையடுத்து ரசிகர்கள், விவேக் ஓபராயிடம், 'பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டிய நீங்களே இதுபோன்ற செயலில் ஈடுபடலாமா' எனக் கேள்வி எழுப்பினர். சிலர் விவேக் ஓபராயின் இச்செயலைக் கண்டித்தும் பதிவிட்டனர்.


இந்த நிலையில், இந்த வீடியோ பதிவு மும்பை போலீசாரின் கவனத்திற்குச் சென்றது. இதனையடுத்து, நடிகர் விவேக் ஓபராய் மீது நேற்று வழக்குப் பதியப்பட்டு 500 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. இந்த விவகாரம் குறித்து நடிகர் விவேக் ஓபராய் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவினை வெளியிட்டுள்ளார்.


அதில், "பாதுகாப்பு என்பது மிக முக்கியம் என்பதை எனக்கு உணர்த்திய மும்பை போலீசாருக்கு நன்றி. கவனமாக இருங்கள். தலைக்கவசம் மற்றும் முகக்கவசம் அணியுங்கள்" எனக் குறிப்பிட்டுள்ளார்.