நார்வே செஸ் போட்டியில் இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த், உலக சாம்பியனான மேக்னஸ் கார்ல்சனை மீண்டும் தோற்கடித்தார்.
பிலிக்ஸ் முறையில் நடந்த போட்டியில் மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்தியிருந்த முன்னாள் உலக செஸ் சாம்பியனான விஸ்வநாதன் ஆனந்த், கிளாசிக் பிரிவிலும் ஆதிக்கம் செலுத்தி வருகிறார். ஐந்தாவது சுற்றுப்போட்டியில் மீண்டும் கார்லசனை எதிர்கொண்டார். இதில் ஆனந்த் 1.5 புள்ளியும், கார்ல்சன் ஒரு புள்ளியும் பெற்றனர்.
ஐந்து சுற்றுகளின் முடிவில் விஸ்வநாதன் ஆனந்த் 10 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார். நார்வேயின் கார்ல்சன் 9.5 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார்.