மக்களவைக்கு புதிய சபாநாயகர் நியமனம்...

இந்தியாவின் 17 ஆவது மக்களவைக்கு இடைக்கால சபாநாயகராக பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் வீரேந்திர குமார் நியமிக்கப்பட்டுள்ளார். குறிப்பிட்ட காலத்திற்கு அவை பணிகளை இவர் மேற்கொள்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

virendra kumar appointed as interim speaker of indian loksabha

இந்த தேர்தலில் மத்திய பிரதேசத்தின் திகம்கர் தொகுதியிலிருந்துதேர்ந்தெடுக்கப்பட்டவர் இவர். இதுவரை 7 முறை மக்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 1996 தேர்தல் முதல் தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினராக நீடித்து வருகிறார். மேலும் இதற்கு முந்தைய ஆட்சியில் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சராகவும், சிறுபான்மை விவகாரங்கள் அமைச்சராகவும் இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

loksabha loksabha election2019
இதையும் படியுங்கள்
Subscribe