கர்நாடகா மாநிலம் மங்களூரில் சாலை ஒன்றில் ஒரு டிரக் எதிரில் வந்த ஆட்டோ மீது மோதி திரும்பிய போது மற்றொரு ஆட்டோ மீது மோதியது. இதில் டிரக் அந்த ஆட்டோவை தர தரவென்று சில தூரம் இழுத்து சென்றது.

Advertisment

இதில் ஆட்டோவில் பயணித்த கேந்திர வித்யாலயாவை சேர்ந்த ஆசிரியை சைலஜா ராவ் என்பவர் சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும் ஆட்டோ டிரைவர் சாலையில் வந்து விழுந்ததில் படுகாயம் அடைந்தார். இந்த சம்பவம் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.