Skip to main content

“இஸ்லாமிய சமூகம் அடிமைகள் இல்லை..” - காங்கிரஸ் மூத்த தலைவரின் வைரல் வீடியோ

Published on 22/08/2023 | Edited on 22/08/2023

 

 Viral video of senior Congress leader

 

காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் அஜீஸ் குரேஷி 2014 ஆம் ஆண்டில் உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட், மிசோரம் ஆகிய மாநிலங்களில் ஆளுநராக பொறுப்பு வகித்துள்ளார். அதைத் தொடர்ந்து, 2020 ஆம் ஆண்டில் மத்தியப் பிரதேச மாநிலத்தில் உருது அகாடமியின் தலைவராகவும் பொறுப்பு வகித்து வந்தார். இந்த நிலையில், பா.ஜ.க கட்சியின் செய்தி தொடர்பாளர் பங்கஜ் சதுர்வேதி, அஜீஸ் குரேஷி பேசியுள்ள ஒரு வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோவில் அவர் சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார். தற்போது அது வைரலாகிவருகிறது.

 

பங்கஜ் சதுர்வேதி வெளியிட்டுள்ள அந்த வீடியோவில் பேசும் அஜீஸ் குரேஷி, “இந்த நாட்டில் 22 கோடி இஸ்லாமியர்கள் இருக்கிறார்கள். அதில் ஒன்று அல்லது இரண்டு கோடி இஸ்லாமியர்கள் இறந்தால் ஒன்றும் பிரச்சனை இல்லை. எனக்கு எந்தவித பயமும் இல்லை. இன்று நேருவின் வாரிசுகளும், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்களும் தாங்கள் ஒரு இந்துக்கள் என்று பெருமையாக கூறி மத ஊர்வலம் நடத்துகின்றனர். காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் சிலைகளை நிறுவி மூழ்கடிக்கிறார்கள்.  காங்கிரஸ் கட்சியில் இருந்து என்னை நீக்கினாலும் பரவாயில்லை.

 

நாட்டில் உள்ள காங்கிரஸ் உட்பட அனைத்து கட்சிகளும் இஸ்லாமிய சமூகம் தங்களின் அடிமைகள் இல்லை என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். இஸ்லாமியர்கள் ஏன் உங்களுக்கு வாக்கு அளிக்க வேண்டும். நீங்கள் அவர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கி தரவில்லை. நீங்கள் அவர்களை ராணுவம், காவல்துறை, கடற்படை ஆகிய துறைகளில் அழைத்து செல்வதில்லை. பிறகு ஏன் இஸ்லாமியர்கள் உங்களுக்கு வாக்களிக்க வேண்டும்” என்று அஜீஸ் குரேஷி பேசியிருந்தார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

4 கோடி ரூபாய் பறிமுதல் சம்பவம்; தமிழக டிஜிபி அதிரடி உத்தரவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 4 Crore Seizure Incident; Tamilnadu DGP action order

இந்தியாவின் 18 ஆவது மக்களவை தேர்தல் களைகட்டி வருகிறது. முதல்கட்டமாக தமிழகத்தில் தேர்தல் நடைபெற்ற போது சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து திருநெல்வேலிக்குச் செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 6 ஆம் தேதி (06.04.2024) இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்றதாக சுமார் ரூ. 4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். அப்போது திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்தப் பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது.

இந்தச் சம்பவம் தொடர்பாக நயினார் நாகேந்திரன் ஆஜராகி பதிலளிக்கும்படி காவல்துறை தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் நயினார் நாகேந்திரன் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில், விசாரணைக்கு ஆஜராக பத்து நாட்கள் அவகாசம் வேண்டும் என நயினார் நாகேந்திரன் தரப்பில் காவல்துறைக்குப் பதில் கடிதம் கொடுக்கப்பட்டிருந்தது. அதேசமயம் இந்தப் பணத்தை நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன், இவரின் நண்பர்களான ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகிய மூவரும் கொடுத்து அனுப்பியதாகத் தெரிவித்திருந்தனர். இதனடிப்படையில் போலீசார் முருகன், ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். இதனையடுத்து இவர்கள் 23.04.2024 அன்று தாம்பரம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி இருந்தனர். இந்நிலையில் நான்கு கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பான இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.