பழங்குடியின நபரை நிர்வாணமாக்கி ஊர்வலமாக அழைத்துச் சென்ற கிராம மக்கள்!

The villagers took the tribal man naked and took him in a procession in madhya pradesh

மத்தியப் பிரதேச மாநிலம் அலிராஜ்பூர் மாவட்டம், சோட்டி மால்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் 48 வயது நபர். பழங்குடியின சமுதாயத்தைச் சேர்ந்த இவர், அந்த கிராமத்தில் வசித்து வந்த கைம்பெண் ஒருவருடன் பழகி வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் இந்த நபர், அப்பெண்ணுடன் திருமணத்தை மீறிய உறவில் இருப்பதாகக் கூறி கிராம மக்கள் அந்நபரை நிர்வாணப்படுத்தி தாக்கியுள்ளனர். அதுமட்டுமல்லாமல், அவரை அடித்து கிராமம் முழுவதும் ஊர்வலமாக அழைத்துச் சென்றுள்ளனர். அந்த நபரை தாக்கியபோது, தடுக்க வந்த சம்பந்தப்பட்ட பெண்ணையும் கிராம மக்கள் தாக்கியுள்ளனர். பழங்குடியின நபரை நிர்வாணமாக்கி அடித்தது தொடர்பான புகைப்படம் மற்றும் வீடியோ சமுக வலைதளத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த கொடூரச் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தினர். அதில், பாதிக்கப்பட்ட கைம்பெண்ணின் கணவர் 4 ஆண்டுகளுக்கு உடல்நலக்குறைவால் உயிரிழந்துள்ளார். அந்த பெண்ணுக்கு கிராம மக்கள் யாரும் உதவி செய்ய முன்வராததால், பாதிக்கப்பட்ட பழங்குடியின நபர் அந்த பெண்ணுக்கு ஆதரவு கொடுத்து அவரது குழந்தைகளை வளர்க்க உதவி செய்துள்ளார். இதனால், இருவரும் திருமணத்தை மீறிய உறவில் இருப்பதாக எண்ணிய கிராமத்தினர் இந்த கொடூரச் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர் என்பது தெரியவந்தது. இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக 5 பேரை போலீசார் கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tribal
இதையும் படியுங்கள்
Subscribe