Advertisment

இலங்கை தமிழர்களுக்கு எதிராகச் செயல்பட்டவர்களை விட்டுவிட்டு விஜய் சேதுபதியிடம் அரசியல் செய்யக் கூடாது - எஸ்.வி சேகர் கருத்து!

hjk

இலங்கை கிரிக்கெட் வீரரான முத்தையா முரளிதரனின் வாழ்க்கை, படமாக்கப்படுகிறது. முரளிதரன் கதாபாத்திரத்தில் நடிக்க விஜய் சேதுபதி ஒப்பந்தமாகியுள்ளார். ஸ்ரீபதி ரங்கசாமி இயக்கும் இந்தப் படத்தைப் பெரும் பொருட்செலவில் மூவி ட்ரெயின் மோஷன் பிக்சர்ஸ் மற்றும் தர்மோஷன் பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்கவுள்ளது. இந்தப் படத்திற்கு '800' என்று பெயரிடப்பட்டுள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு போஸ்டர் அண்மையில் வெளியானது.

Advertisment

முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி நடிப்பதற்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உட்பட பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்புகள் கிளம்பியது. இதுமட்டுமல்லாமல் ஈழத் தமிழர்கள் பலரும் முத்தையா முரளிதரனின் படத்தில் விஜய் சேதுபதி நடிக்கக் கூடாது என்று சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். பல எதிர்ப்புகளையும் தாண்டி இந்தப் படத்தின் மோஷன் போஸ்டர் வெளியிடப்பட்டது. இதுதொடர்பாக அண்மையில்முரளிதரன் தன்னுடைய விளக்கக் கருத்தைத் தெரிவித்திருந்தார். இந்நிலையில், இதுதொடர்பாக நடிகர் எஸ்.வி சேகர் கருத்துத் தெரிவித்துள்ளார். அதில், "இலங்கை தமிழர்களுக்கு எதிராகச் செயல்பட்டவர்களை விட்டுவிட்டு விஜய் சேதுபதியின் '800' படத்தை வைத்து அரசியல் செய்யக் கூடாது" என்று காட்டமாகத் தெரிவித்துள்ளார்.

Advertisment

Vijay Sethupathi
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe