மும்பை சிறப்பு நீதிமன்றம், பொருளாதார குற்றவாளியாக அறிவிக்கக்கோரும் அமலாக்கத்துறை வழக்கில் விஜய் மல்லையாவுக்கு வருகின்ற 24ஆம் தேதி வரை பதிலளிக்க அவகாசம் கொடுத்து உத்தரவிட்டுள்ளது. அப்படி பதிலளிக்கவில்லை என்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
முன்பாக, விஜய் மல்லையாவை கைது செய்து அடைக்க இருக்கும் மும்பை சிறையின் முழு வீடியோவை லண்டன் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.