Skip to main content

தவறினால் மல்லையா மீது நடவடிக்கை எடுக்கப்படும்... 

Published on 03/09/2018 | Edited on 03/09/2018
vijay malya


மும்பை சிறப்பு நீதிமன்றம், பொருளாதார குற்றவாளியாக அறிவிக்கக்கோரும் அமலாக்கத்துறை வழக்கில் விஜய் மல்லையாவுக்கு வருகின்ற 24ஆம் தேதி வரை பதிலளிக்க அவகாசம் கொடுத்து உத்தரவிட்டுள்ளது. அப்படி பதிலளிக்கவில்லை என்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.  
 

முன்பாக, விஜய் மல்லையாவை கைது செய்து அடைக்க இருக்கும் மும்பை சிறையின் முழு வீடியோவை லண்டன் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
 

சார்ந்த செய்திகள்

Next Story

மல்லையா, நிரவ் மோடி வரிசையில் 8000 கோடி ஏமாற்றிவிட்டு வெளிநாடு பறந்த பிரபல தொழிலதிபர்...

Published on 23/03/2019 | Edited on 23/03/2019

விஜய் மல்லையா, நீரவ் மோடி ஆகியோர் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்கள் இந்திய வங்கிகளில் மோசடி செய்துவிட்டு வெளிநாடு தப்பி சென்றனர்.

 

sterling biotech

 

அந்த வரிசையில் குஜராத்தின் வடோதராவை தலைமையிடமாக கொண்டு இயங்கி வந்த ஸ்டெர்லிங் குழும நிறுவனத்தின் நிறுவனர்களான நிதின், சேத்தன் என்ற சகோதரர்கள் இந்திய வங்கிகளில் 8,100 கோடி ரூபாய் மோசடி செய்துவிட்டு தப்பியோடினர்.

உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் 300–க்கும் மேற்பட்ட போலி நிறுவனங்களை பினாமி பெயரில் தொடங்கி அதன்மூலம் கொள்ளை அடிக்கப்பட்டது தெரியவந்தது. இவ்வாறு அவர்களுக்கு பினாமி நிறுவனங்கள் அமைக்க அவர்களது மைத்துனரான ஹிதேஷ் படேல் உதவியதாக அமலாக்கத்துறை வழக்கு பதிந்தது.

இந்நிலையில் ஒரு வருடமாக தேடப்பட்டு வந்த ஹிதேஷ் படேலுக்கு கடந்த மாதம் ரெட் நோட்டீஸ் கொடுத்தது அமலாக்கத்துறை. இதனை தொடர்ந்து இன்டர்போல் உதவியுடன் ஐரோப்பிய நாடான அல்பேனியாவில் அவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். முக்கிய குற்றவாளிகளான நிதின், சேத்தன் ஆப்பிரிக்கா நாடான நைஜீரியாவில் தலைமறைவாக உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இதனை தொடர்ந்து அவர்களை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமலாக்க துறை தெரிவித்துள்ளது.  

 

 

Next Story

தப்பி ஓடிய குற்றவாளி விஜய் மல்லையா- சிறப்பு நீதிமன்றம்

Published on 05/01/2019 | Edited on 05/01/2019

 

vijay mallya


9 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கிவிட்டு திருப்பி செலுத்தாமல் லண்டனுக்கு தப்பிச் சென்ற தொழிலதிபர் விஜய் மல்லையா, தப்பி ஓடிய குற்றவாளி என்று சிறப்பு நீதிமன்றம் அறிவித்துள்ளது. பொருளாதார குற்றவாளி என்பதால் மல்லையாவின் சொத்துக்களை அரசு பறிமுதல் செய்யலாம் எனவும் சிறப்பு நீதிமன்றம் அறிவித்துள்ளது.