Skip to main content

இதெல்லாம் ரொம்ப தவறுங்க..! ரயில்வே நிலையத்தில் இருந்து வெளியான அதிர்ச்சி வீடியோ!!

Published on 29/12/2022 | Edited on 29/12/2022

 

 video of unhygienic washing of food in northern states railway station goes viral social media

 

பொதுவாகவே வடமாநில ரயில் நிலையங்கள் சுத்தமில்லாமல் மிகவும் மோசமான நிலையில் இருக்கும் எனச் சொல்லப்படுவதுண்டு. அதிலும் நீண்ட தூரம் செல்லும் ரயில் பயணிகளுக்கு பெரும் பிரச்சனையாக இருப்பது உணவுதான். ரயிலில் கொடுக்கப்படும் உணவிலும், தண்ணீரிலும் கூட சுகாதாரம் இல்லை என்கிற புகார் இருந்து வருகிறது. இந்நிலையில், லக்னோவில் இருந்து தற்போது வெளியான வீடியோ காட்சி ஒன்று பொதுமக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவுக்கு அருகே உள்ளது ஐஷ்பாக் ரயில் நிலையம். இந்த ரயில் நிலையத்தில் இருக்கும் நபர் ஒருவர், சுகாதாரமற்ற முறையில் காய்கறிகளை சுத்தம் செய்யும் வீடியோ தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அந்த வீடியோவில், பயணிகளுக்கு வழங்க வேண்டிய உணவைத் தயார் செய்து கொண்டிருந்தனர். அப்போது, அதற்கான காய்கறிகளை சுத்தம் செய்வதற்கு பதிலாக, அந்த நபர் தனது காலால் மிதித்து அசுத்தம் செய்துள்ளார்.

 

அந்தக் காய்கறிகளை ஒரு பக்கெட்டில் வைத்து, ரயில்வே டிராக் குழாயில் உள்ள தண்ணீரைப் பயன்படுத்தி சில காய்கறிகளை சுத்தம் செய்துள்ளார். அப்போது, திடீரென அந்த காய்கறிகளை தன் காலால் மிதித்தபடி கழுவினார். அப்போது, அந்த நபருக்கு உதவி செய்வதற்காக, மற்றொரு இளைஞரும் அங்கேயே இருந்தார். அந்த நபர் வெறுங்காலுடன் காய்கறிகளை சுத்தம் செய்து கழுவுவதுடன், காய்கறிகள் வைக்கப்பட்டுள்ள பக்கெட்டில் அவரது கால்களைக் கழுவினார். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த ரயில் பயணிகள், இந்தச் சம்பவத்தை வீடியோ எடுத்து சோசியல் மீடியாவில் பதிவிட்டனர். மேலும், இந்த வீடியோ வைரலானதை அடுத்து, இது குறித்து ரயில்வே அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இணையவாசிகள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

 

ஏற்கனவே ரயில் நிலையத்தில் வழங்கப்படும் வாட்டர் பாட்டில்கள், குடிநீர் குழாயில் பிடிக்கப்படுவதாகப் புகார் எழுந்த நிலையில், தற்போது வெறும் காலில் காய்கறிகள் கழுவப்பட்ட சம்பவம் ரயில் பயணிகள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

‘ஜெய் ஸ்ரீராம்’ முழக்கத்தோடு பள்ளி மீது தாக்குதல்; வெளியான அதிர்ச்சி வீடியோ!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Incident on school chanting Jai Sriram  Shocking video released in telangana

தெலுங்கானா மாநிலம், மன்செரியல் மாவட்டம், கண்ணேபல்லி கிராமத்தில் அன்னை தெரசா உயர்நிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில், அந்தக் கிராமத்திலும், அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் இருந்தும் ஏராளமான மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர்.

இந்த நிலையில், இன்று(18-04-24) 50க்கும் மேற்பட்டவர்கள் காவி உடை அணிந்து, இந்தப் பள்ளிக்குள் நுழைந்து, அங்கிருந்த அன்னை தெரசா சிலை உள்ளிட்டவற்றின் மீது கல் வீசி பயங்கர தாக்குதல் நடத்தியுள்ளனர். மேலும், அவர்கள் ஜெய்ஸ்ரீ ராம் என்று முழக்கமிட்டவாறு அந்தப் பள்ளி மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதத்ளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தத் தாக்குதல் தொடர்பான வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, இந்தச் சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும், இந்தச் சம்பவம் குறித்து பள்ளியின் முதல்வரான கேரளாவைச் சேர்ந்த ஜெய்மன் ஜோசப்பிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில், கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு காவி நிற உடை அணிந்து சில மாணவர்கள் பள்ளிக்கு வந்துள்ளனர். இதனைக் கண்ட அப்பள்ளி முதல்வர், அந்த மாணவர்களை அழைத்து விசாரணை நடத்தியுள்ளார்.

அதற்கு அந்த மாணவர்கள், 21 நாள்கள் அனுமன் தீட்சை சம்பிரதாயத்தைக் கடைபிடிப்பதாக கூறியுள்ளனர். அதனால், பள்ளி முதல்வர், மாணவர்கள் தங்களுடைய பெற்றோர்களைப் பள்ளிக்கு அழைத்து வருமாறு கூறியுள்ளார். இதன் காரணமாக, இன்று காவி உடை அணிந்து வந்த கும்பல் பள்ளி மீது தாக்குதல் நடத்தியுள்ளனர் என்பது தெரியவந்தது.. .

மேலும், இந்தத் தாக்குதலில் பள்ளி முதல்வர் ஜோசப்பை சுற்றி வளைத்து அடித்து, அவரது நெற்றியில் வலுக்கட்டாயமாக திலகமிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனையடுத்து, மாணவர்களின் பெற்றோர்கள் அளித்த புகாரின் பேரில், மத உணர்வுகளைத் தூண்டுதல், மதத்தின் அடிப்படையில் பகைமையை வளர்ப்பது தொடர்பான பிரிவுகளின் கீழ் பள்ளி முதல்வர் உட்பட இரண்டு ஊழியர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

பா.ஜ.க கொடியைத் தீயிட்டு கொளுத்திய பா.ம.க நிர்வாகி; பின்னணி என்ன?

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
What is the background on BJP executive who set fire to BJP flag

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த புள்ளநேரி சேர்ந்த மதன்ராஜ் என்பவர் தன்னுடைய முகநூல் பக்கத்தில், இரண்டு வீடியோக்களை பதிவு செய்துள்ளார். அந்த வீடியோவில் அவர் கூறியதாவது, ‘தான் புள்ளநேரி பகுதியைச் சார்ந்தவன் எனவும் பாட்டாளி மக்கள் கட்சியில் சுமார் 12 வருட காலமாக இருந்து வருகிறேன். மேலும் முன்னாள் மாவட்ட இளைஞர் அணி துணை செயலாளராகவும் உள்ளேன்.

இங்கு பஞ்சாயத்தில் உள்ள பா.ம.க நிர்வாகிகளை கலந்து ஆலோசனை செய்யாமல், பா.ஜ.க.வினர் தன்னிச்சையாக செயல்படுகின்றனர். இதன் காரணமாக தன்னுடைய கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். தங்களுடைய பஞ்சாயத்தில் 65 சதவீதம் பாட்டாளி மக்கள் கட்சியின் ஓட்டு சதவீதம் உள்ளது. ஆனால், பா.ஜ.க.வில் ஓர் இருவர் தான் உள்ளனர்.

பா.ஜ.க நிர்வாகிகள், மரியாதை எப்படி கொடுக்க வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சியினரை பார்த்து தெரிந்து கொள்ள வேண்டும். எனவே எனது கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்’ எனக்கூறி பா.ஜ.க.வின் கொடியை எரித்து எதிர்ப்பை தெரிவித்துள்ளார். இதன் வீடியோவை தனது முகநூலிலும் பதிவு செய்துள்ளார். மேலும் கட்சியினரின் அழுத்தத்தின் காரணமாக சிறிது நேரத்தில் அந்த வீடியோவை டெலீட் செய்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளங்களிலும் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.