சில வருடங்களுக்கு முன்பு நடிகர் சூர்யா நடித்த காப்பான் திரைப்படம் வெளிவந்து பரபரப்பை கிளப்பியது. அந்த படத்தில் எதிரிகள் விவசாய நிலங்களில் வெட்டுக்கிளிகளை பரப்பி நிலங்களில் உள்ள பயிர்கள் முழுவதும் அழிப்பது போன்ற காட்சிகள் இடம் பெற்றிருக்கும். சினிமாவுக்காக இடம் பெற்ற அந்த காட்சிகள், தற்போது வட மாநிலங்களில் நேரடியாக நடந்து வரும் சம்பவங்கள் வியப்பை ஏற்படுத்தியுள்ளன.
Locusts cover a rooftop in Jaipur on Monday morning pic.twitter.com/xwFTMLX0db
கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஐக்கிய நாடுகள் சபை பயிர்களை சேதப்படுத்தும் வெட்டுக்கிளிகள் இந்தியாவிற்கு வர வாய்ப்புள்ளது என்று எச்சரிக்கை விடுத்திருந்தது. ஏற்கனவே ஆப்பிரிக்க நாடுகளான சோமாலியா, கென்யா நாடுகளை பாதித்த அந்த வெட்டுக்கிளிகள் பாகிஸ்தான் வழியாக தற்போது இந்தியா வந்துள்ளன. ராஜஸ்தான் மாநிலத்தில் கூட்டம் கூட்டமாக படையெடுத்து வரும் வெட்டுக்கிளிகள் அங்குள்ள விளைநிலங்களை கடுமையாக சேதப்படுத்தி வருகின்றன. இதனால் விவசாயிகள் என்ன செய்வதென்று புரியாமல் முழித்து வருகிறார்கள்.