Skip to main content

விஜய் மல்லையாவை நாடுகடத்துவதற்கான வழக்கின் தீர்ப்பு...

Published on 10/12/2018 | Edited on 10/12/2018

 

mal

 

இந்திய வங்கிகளில் ரூ. 9,000 கோடி கடன் வாங்கி விட்டு திருப்பிச் செலுத்தாமல் லண்டன் தப்பிச்சென்றார் விஜய்  மல்லையா. அமலாக்கத் துறையும் சிபிஐயும் அவர் மீது வழக்குப் பதிவு செய்து அவருடைய சொத்துக்களை முடக்கியது. மேலும் விஜய் மல்லையாவை இந்தியா கொண்டுவருவதற்கான வழக்கு லண்டனில் உள்ள வெஸ்ட்மினிஸ்டர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வர உள்ளது. இன்று இறுதி தீர்ப்பு வரவுள்ள நிலையில், எந்த நேரமும் அவர் இந்தியா திரும்பவோ அல்லது தீர்ப்பை எதிர்த்து ஐரோப்பிய நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யவோ வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

முடிவெடுத்த அரசாங்கம்... முரண்டுபிடிக்கும் மல்லையா...

Published on 05/02/2019 | Edited on 05/02/2019

 

fghfghhgf

 

கடன் வாங்கிவிட்டு நாட்டை விட்டு தப்பி சென்ற வழக்கில் விஜய் மல்லையாவை நாடு கடத்த அந்நாட்டு நீதிமன்ற கடந்த மாதம் ஒப்புதல் அளித்தது. அதன்படி தலைமைநீதிபதியின் உத்தரவு உள்துறை செயலருக்கு அனுப்பப்பட்டு அவர் அதற்கான கோப்பில் கையெழுத்திட்டுள்ளனர். வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்ற உத்தரவின் பேரில் பாகிஸ்தான் வம்சாவளியை சேர்ந்த அமைச்சர் சாஜித் ஜாவித் பலகட்ட பரிசீலனைக்கு பிறகு இதற்க்கு ஒப்புதல் அளித்துள்ளார். இதனை எதிர்த்து வரும் 14 ஆம் தேதிக்குள் விஜய் மல்லையா மேல்முறையீடு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து விஜய்மல்லையா தனது ட்விட்டரில் பக்கத்தில் கூறும்போது, 'கடந்த டிசம்பர் 10-ம் தேதி வெஸ்ட் மின்ஸ்டர் நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு எதிராக நான் மேல்முறையீடு செய்ய உள்ளேன். உள்துறை அமைச்சகத்தின் உத்தரவைப் பார்த்தபின் மேல்முறையீடு பற்றி பரிசீலிக்க இருந்தேன். இப்போது மேல்முறையீடு செய்யவது என முடிவு செய்துவிட்டேன்' எனத் தெரிவித்துள்ளார்.

 

 

Next Story

விஜய் மல்லையா தீர்ப்பு விவரம் பிரிட்டன் வெளியுறவுத்துறைக்கு அனுப்பப்பட்டது

Published on 12/12/2018 | Edited on 12/12/2018

 

mal

 

இந்திய வங்கிகளில் ரூ. 9,000 கோடி கடன் பெற்று திருப்பிச் செலுத்தாமல் லண்டனுக்குத் தப்பிய விஜய் மல்லையாவை  இந்தியாவுக்கு அனுப்ப தடையில்லை என்ற வெஸ்ட்மினிஸ்டர்ஸ் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மேலும் இந்தத் தீர்ப்பு பிரிட்டன் வெளியுறவுத் துறை அமைச்சகத்திடம் அளிக்கப்படும் என்றும் தெரிவித்தது. அதன்படி இன்று இந்த தீர்ப்பானது வெளியுறவுத் துறைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதனை அமைச்சராகமும் இன்று உறுதிப்படுத்தியுள்ளது. இந்த தீர்ப்பினை பரிசீலித்து  2 மாதத்திக்குள் முடிவெடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே விஜய் மல்லையாவிற்கு மேல்முறையீட்டிற்கு இரண்டு வார காலம் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. எனவே இந்த இரண்டு வார காலம் கழித்தே பரிசீலனை தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.